ஞாயிறு, 16 டிசம்பர், 2018

சீக்கியர்கள்

வீர சைவம், வீர வைணவம் போல இவர்கள் வீர ஹிந்துக்கள்...

இஸ்லாமை எதிர்க்க அழிக்க உருவான ஒரு உன்னதமான வீர மக்கள் கூட்டம்...

சங்க அமைப்பு ஒன்றில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு இருந்த போது, நெல்லையை சேர்ந்த கா. ஆறுமுகம் என்ற ப்ரச்சாரக் அவர்களின் பௌதிக்கில் கேட்ட ஒரு விஷயம்...

சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப் நூலில்... ராம என்ற சொற்கள் உள்ள பக்கங்கள் அணைத்தையும் நீக்கி விட்டால், அட்டைக்கும் நூலுக்கும் நடுவில் உள்ள binding இணைப்பு வெற்று காகிதம் 2 மட்டுமே மிஞ்சும் என்று சொன்னார்...

இப்படி பட்ட புனித நூல் ஒன்றை தங்கள் வேதம் என்ற சீக்கியர்கள், வெள்ளைக்கார கிறித்தவ கபோதி மெக்காலே யின் வே(வி)ஷத்தில் மயங்கி கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்துக்களுக்கு எதிராக மாறிப் போனார்கள்...

இந்திய ராணுவத்தில்  முதலிடம் வகிப்பது Sikh Regiment தான்... அப்படி ஒரு நேர்த்தி...   குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசு ஒன்று நாட்டுக்கு என்ற கொள்கை இன்றளவும் உடையவர்கள்.

இப்போது கூட என் மனதை உறுத்தும் ஒரு  வருத்தம்....

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தமிழன் என்று மார்தட்டிக் கொண்ட ஒரு மாற்று நாட்டு அடையாளம் கொண்ட மக்களை அந்த நாட்டு அரசு... காங்கிரஸ்/தி மு க உதவியுடன் அழித்தது... அது கூட உள்நாட்டுப் போரில் இருந்து நாட்டை காப்பாற்ற...  ஆனால் தமிழ் மக்கள் இன்றும் காங்கிரஸ் தி மு க வை ஆதரித்தே வருவதில் கூட ஒரு ஞாயம் உண்டு... காரணம்... பிரபாகரன் திமிர்த்தனம்... இந்தியாவின் பிரதமராக இருந்த நபரை சதி செய்து கொன்றது... முக்கியமாக இலங்கை தமிழன்/இந்தியத்தமிழன் என்ற துவேஷம் கடைசிவரை அவர்களிடம் இருந்தது...

பிந்திரன் வாலே செய்த சதியும் குற்றமே/தேச விரோதமே... இந்திரா கொலையும் சதிதான்... ஆனால்... இந்திரா செய்த குற்றமாக சீக்கியர்கள் கருதியது, பொற்கோவிலுக்குள் இந்திய அரசு ராணுவத்தை  அனுப்பியது...  ஒரு வாதத்துக்காக யானைக்கும் பானைக்கும் சரி என்று வைத்துக் கொண்டால் கூட ...  இந்திரா படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் கொடுத்த விலை மிக மிக பெரியது.... அரசே தன் சொந்த மக்களை வேட்டையாடியது...

இத்தனைக்கு மேலும் சீக்கியர்கள் தங்கள் பிராந்தியங்களில் காங்கிரஸ் அரசுகளை/ வேட்பாளர்களை தேர்ந்து எடுத்தார்களே!!

அரசியலில்/ மத பிரசாரத்தில் தங்களின் சுயத்தை இழந்த வீர இந்துக்கள் கூட்டம் சீக்கிய இனம் என்பதை சொல்லவே மிக நீண்ட பீடிகை.

அம்ருத கலஸம் கீதை என்ற நூல்... ஸ்ரீ ராம் கோபால ரத்னம் அவர்களின் அருமையான உரை நூல்...  இன்று விடியலில் அதை படித்துக்கொண்டு இருந்தேன்...  அத்யாயம் 12 பக்தியோகம்... ஸ்லோகம் 14

ஸந்துஷ்ட:  ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிச்சய:
மய்யர்பபித-மனோ-புத்திர்-யோ மத்பக்த ஸ மே ப்ரிய:

இதில் வரும் த்ருட நிஸ்சயம்.... ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ப்ரியமான பாவனை... இந்த வார்த்தையின் அர்த்தம் விளக்க ஸ்ரீ ராம் கோபால ரத்னம் சொல்லிய விஷயங்கள்...

சீக்கிய குருமார்கள் மன உறுதி மிகவும் உறுதியானது...

சீக்கியர்களின் 6ஆம் குரு ஸ்ரீ அர்ஜுன் தேவ்.... இஸ்லாமியனாக மதம் மாற மறுத்த காரணத்தால் இரும்புச் சட்டியில் உயிருடன் வாட்டி வதைக்கப்பட்டார்....

இந்த படு பாதகத்தை /செயலை செய்தது கொடுங்கோல் துலுக்கன் ஷாஜகான்.

9ஆம் குரு ஸ்ரீ தேஜ் பகதூர்... அவருடைய 3 பிரதான சீடர்களுடன் கைது செய்யப்பட்டு இஸ்லாத்தை எற்க வற்புறுத்தப்பட்டனர்...

தில்லி சாந்தினி சவுக்கத்தில் தேஜ் பகதூர் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு அவருடைய கண் முன்னேயே சீடர்கள் ஒவ்வொருவராக  சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்...

ஒரு சீடன் தலை உயிர் /உணர்வு நிலையில் இருக்கும் போதே ரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டது...

மற்றும் ஒருவன் உடலில் பஞ்சு பொதிகள் சேர்த்து கட்டி தீ வைக்கப்பட்டது...

மூன்றாவது சீடன் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் அழுத்தி கொல்லப்பட்டான்.

இவை அனைத்துக்கும் பிறகும் மதம் மாறாத தேஜ் பகதூர் தலை வாளால் சீவி கொல்லப்பட்டார்.... 

இத்தனை அட்டூழியம் செய்த கொடுங்கோல் துலுக்கன் ஔரங்கசீப்...

தேஜ் பகதூர் மகன் 10ஆம் குரு கோவிந்த ஸிம்ஹன் அவர்களுடைய 2 மகன்கள் போரில் கொல்லப்பட்டனர்.... மற்றும் 2மகன்கள் 9 வயது ஜெராவர் 7 வயது ஃபதே சுற்றிலும் கொதிக்கும் சுண்ணாம்பு கல் சுவர் எழுப்பப்பட்டு கொல்லப்பட்டனர்...

ஓவ்வொரு கல் வைக்கப்படும் போதும் மதம் மாற வற்புறுத்தப்பட்டனர்...  ஆனால் அந்த குழந்தைகள் த்ருட உறுதி.... நம்மை வியக்க வைக்கிறது... மரணம் ஏற்ற அவர்கள் இஸ்லாம் மார்கத்தை எற்க மறுத்துவிட்டார்கள்...

குரு கோவிந்த ஸிம்ஹனுக்குப் பிறகு...  பந்தா பைராகி ... அவருடைய 1வயது குழந்தையை கொன்று, அந்த சடலத்தை கூறு போட்டு அந்த குழந்தையின் இருதயத்தை வெட்டி பந்தா பைராகி வாயில் திணித்தனர் துலுக்க பன்றிகள்...

92 நாட்கள் பந்தா பைராகி புதுப் புது விதமாக சித்ரவதை செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் பந்தா பைராகி உடல் உறுப்புக்கள் வெட்டப்பட்டு / சிதைக்கப்பட்டு ...

அப்போதும் மதம் மாறாத உத்தம குருமார்கள் சீக்கிய புண்ணியர்கள்...

இவர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் த்ருட நிச்சயத்தை விட்டுக் கொடுத்து இருந்தால்?!

ஆனால் இன்று wine, ரொட்டித்துண்டு, காசு, எச்சில் பெண்கள் மீது ஆசை கொண்டு... மதம் மாறி... காசுக்கு தேச, மத விரோத காங்கிரஸ்/ கம்முயுனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிக்கும் சீக்கிய/ ஜைன/ஹிந்துக்களை நினைத்தால்...

எழுதியவர் :- திரு. சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் முகநூலில்..

கீதை அத்யாயம் 17


ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்.
*******************************
ஸ்ரத்தை என்றால், அதிக கவனம் எடுத்துச் செய்ய வேண்டியது... மனம் ஒருமித்து...  வீட்டில் முன்னோர்களுக்குச் செய்யும் திதி... ஸ்ரார்த்தம் என்று சொல்லுவார்கள்...

த்ரய ... என்றால் 3

Three...

த்ரயார்ஸேவ ப்ரவரன்... என்றால்...  பெரியோர்களை நமஸ்கரிக்கும் போது அபிவாதயே சொல்லப்படும் அதில் தங்கள் பூர்வீகம் குறித்து.... உதாரணமாக கௌண்டின்ய கோத்திரம் என்றால் சதுஸ்ஸாகர பர்யந்தம் கோ, ப்ராம்ணேப்ய சுபம்பவது 1. வாசிஷ்ட 2. மைத்ராவருண 3 கௌண்டின்ய த்ரயார்ஸேவ என்று துவங்கும்... 

தர்பணம் கொடுக்கும் போது கூட பித்ரு (அப்பா) வசு ரூபம், பிதாமக (தாத்தா) ருத்ர ரூபம், ப்ரபிதாமக ஆத்ய ரூபம் (அப்பாவின் தாத்தா) என்று 3 தலைமுறை குறிக்கப்படும்...

த்ரிநேத்ரம் (சிவனுக்கு 3 கண்கள்)
த்ரிகுணம் (ஸத்வம் ரஜோ தமஸ்)
த்ரிதளம் (வில்வம்)
த்ரிகாலம் (ப்ராத, மாத்யாநிக, சாயம் சந்தியா)
மனம் வாக்கு காயம்
பதி பரமாத்மா, பசு ஜீவாத்மா அல்லது உயிர், பாசம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் வேறுபடுத்தி நிற்க்கும் ஆணவம், கர்மம், மாயை என்ற 3 மலங்கள்...

வி-என்றால் மேலான... (நாயகர், விநாயகர்)

பாகம் என்றால் பகுப்பு...

யோகம் என்றால் அப்யாசம்/பயிற்சி...

ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்... இப்போது புரிகிறதா?!

கீதையில், தலைப்புகள் கூட எத்தனை கவனமாக அழகாக பொருள்பட நேர்த்தியாக அமைக்கப்பட்டு உள்ளது!!!

இந்த அத்யாயத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, மனம் வாக்கு காய சுத்தி, ஸத்வம் ரஜோ தமஸ் ஆகியவை குறித்தும் அதற்கான உணவு முக்கியமாக அதன் ருசி,  அதன் பலன், குறித்து சொல்கிறார்...

இனி, இங்கு சொல்லப்போகும் விஷயத்துக்கு எனக்குள் வித்திட்டவர் ஸ்ரீ ராம கோபால ரத்னம் (ஸ்ரீ RGR வழியில்)

பகவான், உணவு வகையை பற்றி மட்டும் சொல்லாமல், மனிதனின் குணத்துக்கு எற்ப ருசி எவ்வாறு வேறுபடும் என்று சொல்லி இருக்கிறார்...

வாழ்க்கையில் தன் குறிக்கோள்/திசை பயணப்படப் போகும் பாதையை தெளிவாக உணர்ந்தவன் சாத்வீகன்...

அதனால்... சாத்வீகனுக்கான ருசியை பற்றி பகவான் வர்ணிக்கும்போது,  அவன் உணவு விளைவிக்கும் பலன் பற்றி கூறுகிறார். சாத்வீகன் ஆயுள், ஆரோக்யம் வளர்க்கும் உணவில் ருசி கொள்வான்...

மிதமான ருசி.. அதை உண்ட பிறகு உடலுக்கு கேடு எதுவும் இல்லாமல் ஒரு வகையான சுகம் தரும் உணவு சாத்வீகம்.

ராஜசன்... பரபரப்பு படபடப்பில் இருப்பதால், (சாத்வீகன் போல உணவின் பலன் பற்றிய சிந்தனை இல்லாமல்) உணவின் ருசியை மட்டுமே நாடுவான்... அதனால் ராஜஸன் உணவு பற்றி பகவான் சொல்லும்போது உணவு வகைகளை பற்றி வர்ணிக்காமல், ருசி பற்றி மட்டும் குறிப்பிடுகிறார்...  காரம் புளிப்பு சூடு நிறைந்த உணவை ரஜோ குணத்தவன் நாடுவான்... இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் அந்த உணவின் விளைவுகள் பற்றியும் எச்சரிக்கிறார்.

அதிக ருசி உள்ள உணவு, நோயை, வேதனையை கொடுக்கும்...

தீவிர ருசி உள்ள தாகத்தை எரிச்சலை தூக்கத்தை ஏற்படுத்தும் உணவு ராஜசம்...

தாமச குணம் உள்ளவன் உணவின் ருசி விளைவு ஆகிய 2 பற்றியும் சிந்திப்பது இல்லை... விவேகத்தை விலக்கி மூட நிலையில்  ருசியற்ற/ருசி கெட்ட உணவை நாடுகிறான். இந்த உணவு சோம்பல் மயக்கத்தை தோற்றுவிக்கும்...

இதை என் வழியில் சினிமா/வடிவேலு பாணியில் யோசித்தேன்...

நெல்லிசோறு - சத்வீகம்

நெல்லிச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் - ராஜசம்

நெல்லிச்சோறு - நெய் மணக்கும் கத்திரிக்காய்- நேற்று வச்ச மீன் குழம்பு - தாமசம்

(முள்ளும் மலரும் திரைப்பட பாடல்)

இன்று சுட்ட இட்லி சாத்வீகம்

இட்லி-சட்டினி ராஜசம்

இன்னக்கி சுட்ட இட்டிலி நேற்று வச்ச மீன் குழம்பு தாமசம்

(கந்தா கடம்பா கதிர் வேலா திரைப்பட வடிவேலு வசனம்)

நல்ல பழ ரசம் (இனிப்பு/ஐஸ் சேர்க்காத) ஸத்வம்

சூடான காரமான சூப் ராஜசம்

ஊறவைக்கப்பட்ட புளித்த திராட்சை ரசம் தாமசம்.

மீண்டும், ஸ்ரீRGR வழியில், நாம் உண்ணும் சமைத்த உணவு இறுதி வடிவம்.  அதற்கு முந்தைய படிகளில் அது எந்த குணத்தில் இருந்தது?!

உணவு தானியம் வாங்கிய பணம் நேர்மையாக மற்ற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் சம்பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்...

தான்யம்/ காய்கறி வகைகள் இயற்கையை சுரண்டாமல், இயற்கைக்கு ஊறுவிளைவிக்காமல் மருந்து ரசாயனம் கலக்காமால் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படாமல் விளைந்து இருக்கவேண்டும்...

சமைபவர் பரிமாறுபவர் மன நிலை...

சமைக்கும் இடத் தூய்மை/சுகாதாரம்...

உண்ணும் போது உண்பவர் மனம்/  இறை தியானத்தில் இடம் தூய்மை இவற்றை பொறுத்தே உணவின் ஸத்வ ரஜோ தாமச குணம் நிர்ணயிக்கப்படும்.

என் வழியில்...

வீட்டுத் தொழுவத்து பசும் பால் சாத்வீகம்

பன்னையில் வாங்கும் எருமை பால் ராஜசம்

உணவு விடுதியில் அதை திரித்து தயாரிக்கப்படும் பாலாடை கட்டி (பன்னீர்)  தாமசம்

கொல்லைப்புரத்து காய்கறி / ஸத்வம்
உரம் வைத்து பயிரிட்ட காய்கறி/ ராஜசம்
பூச்சிக் கொல்லி மருந்து வைத்து உருவாக்கிய காய்கறி தாமசம்

ஏர் உழவு விளைச்சல் / ஸத்வம்
இயந்திர உழவு விளைச்சல் / ராஜசம்
செரிவூட்டிய விதை விளைவு / தாமசம்

வீட்டில் சுகாதாரமாக தூய்மையாக அம்மா/மனைவி சமைத்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நமக்கு பரிமாற நாம் பிரசாதமாக எண்ணி பக்தியோடு சாப்பிடும் உணவு ஸத்வம்

திருமண வைபவத்தில் /விருந்துகளில் பாரிசாரகர்கள் சமைத்து பரிமாற, குறைந்த பட்சம் வாழ்த்தும் மனோ பாவத்தில் நாம் சாப்பிடும் ஆடம்பர விருந்து  ராஜசம்

Hotel (Bar) களில் சுகாதாரம் தூய்மை இல்லாத இடத்தில் தயாரிக்கப்பட்டு / கேளிக்கை விடுதியில் காசுக்காக /பக்தி இல்லாமல் பரிமாறப்படும் உணவு தாமசம்.

சைவ உணவுகள் சாத்வீகம்
அசைவ உணவுகள் உடல் பலம் தேவை கேளிக்கை கருதி ராஜசம்/தாமசம்.

உணவின் நுகர்வு,

நம் தேவை இயல்பு பயன்பாடு கருதி இருக்க வேண்டுமே தவிர,

பிறர் எண்ணம்/வற்புறுத்தல்/ நாடகத் தன்மையோடு (status) உணவு நுகர்வு கூடாது.

மருத்துவர் ஆலோசனை படி மாமிச உணவு உண்பதற்க்கும்,

status பிறர் எண்ணம், வற்புறுத்தல் கருதி அசைவம் உண்பது/தவிர்ப்பதும் வித்யாசம் இருக்கிறதே!!!

மொத்தத்தில், இறைவனை நோக்கிய நம் பயணத்தை, இலக்கை அடைவதை சாத்வீக உணவு எளிதாக்கும்...

கடைசியாக ஜாதி குறித்து ஒரு குறிப்பு... சாத்வீக குணம் ப்ராம்மண்யம்...

ஓரளவு சாத்வீக பெருமளவு ரஜோ கொஞ்சம் தாமச குணம் கலந்த உயிர் க்ஷத்திரியம்...

ரஜோ/தாமச குண கலவை வைசியம்...

தாமச குணம் ... நான்காம் வர்ணம்...

ஜாதி என்பது பிறப்பால்/வர்ணத்தால்/ நிர்ணயிக்கப்பட்டது அல்ல...

ஜாதி என்பது குணத்தால்/ உணவால் (may  be out of Idly /dosa)  தீர்மானிக்கப்படும்!

எழுதியவர் :- திரு. கிருஷ்ணமூர்த்தி சங்கரன் தம் முகநூலில்...

செவ்வாய், 1 மே, 2018

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் 10

ஆதி சங்கரர் காலம், காஞ்சி காமகோடி பீடம், குருமார்கள் பிரவரம் (தொடர்ச்சியான பெயர்/ பிறந்த ஊர், பீடத்தில் இருந்த ஆண்டுகள், சமாதியான இடம்) இன்று நடப்பில் இருக்கும் 70வது பீடாதிபதி, காஞ்சி பீடம் சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாக உள்ளது...

அதே போல சிருங்கேரி மடம், ஸ்தாபகர் 14ஆம் நூற்றாண்டு வித்யாரண்ய ஸ்வாமிகள், ஹரிஹரர், புக்கர் காலக்கணக்கு, ஹொய்சால மன்னர்கள் நிர்மாணித்த கோவில், இன்று உள்ள 36வது பீடாதிபதி சிருங்கேரி மடத்தின் வரலாற்றை நமக்கு உணர்த்தும் என்று நம்புவோம்...

நான் ஏதோ காஞ்சி மட பக்தன், அதனால் சிருங்கேரி மடத்தின் பிரவரத்தை குறைத்து மதிப்பிடுவதாக தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம்...

எனக்கு இஷ்ட ஆச்சாரியர் காஞ்சியாக இருந்தாலும், என் பூர்வீகம் தேடி பார்க்கும்போது நெல்லை, சிருங்கேரி மடம், தெலுங்கு என் தகப்பனார் வழி பாட்டி பெயர் என்று சிருங்கேரி மடம் தான் எங்கள் ஆச்சார்யாராகவும் இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன்.

சிருங்கேரி இடமே ராமாயணத்துக்கு முற்பட்ட ஹருஷ்ய ஸ்ருங்கரால் புனிதம் அடைந்தது, ஆதி சங்கரரின் 12 ஆண்டு கால தவத்தால் புனிதம் அடைந்தது...

அந்த மேன்மையின் மாண்புதான் அந்தர்முகமான பின்னால் தோன்றிய இந்த மடம் என்று நான் நம்புகிறேன்.

இனி, சங்கரர் உடன் நடந்து வந்த உபய பாரதி/ சரசவாணி பற்றி பேசலாமா?!

சங்கரர் பிரம்மாவின் அம்சமான, மண்டன மிஸ்ரரை வாதில் வென்று, அவரை சந்நியாசம் ஏற்க செய்து விட்டதால், அவர் மனைவியாக வாழ்ந்த சரசவாணி அதனால் மீண்டும் சத்ய லோகம் சென்று விட எண்ணிய சரஸ்வதி தேவியை தன் தாய்க்கு அருளிட வேண்டி தன் பின் காலடிக்கு வர வேண்டினார்...

இந்த நிலையில் மலை பாதையில் வந்து கொண்டு இருந்த அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம்...

சங்கரர் முன் செல்ல வேண்டும்... அன்னை சரஸ்வதி பின்னே நடந்து வருவார்... எங்கே சங்கரர் திரும்பிப் பார்கிறாரோ அங்கே அம்பாள் நின்று விடுவதாக...

சிருங்கேரி வந்த உடன் ஹ்ருஷ்ய ஸ்ருங்கர் தவம் செய்த இடம், மலை சாரல் ரம்யம், மாலையாக ஓடும் துங்க பத்ரா நதி கூட்லி... (இப்போது உள்ள சிருங்கேரி மடம் அருகே மலையில்) அம்பாள் நின்ற கோலத்தில்....

படம் இணைப்பு...
கடைசி இரண்டு பதிவுகளில் controversy என்று தோன்றினாலும், மனதில் பட்டதை அப்படியே எழுதிவிட்டேன் என்பதால் மேலும் தொடராமல் நிறைவு செய்கிறேன்!

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் 9

சில இணைப்பு படங்கள்... கூகிள் உபயம் தான்...

ஏற்கனவேயே சொன்னேன்... கிறிஸ்துவுக்கு முன் கி மு 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் தான் சௌந்தர்யலகரியில் குறிப்பிடப்பட்ட திராவிட சிசு.

கிபி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றுமொரு சங்கரர் ஏதோ திருஞான சம்பந்தர் குறித்த பதிவு செய்தார் என்று நாம் புரிந்து கொண்டோம்... போகட்டும்...

3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பௌத்தர், இந்த நாட்டில் historical figure... புத்தருக்கு பின் வாழ்ந்த 2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆதி சங்கரர் mythological figure... இதுதான் கிறித்தவம் (ஆங்கிலேயன்) செய்த வரலாற்று பிழையோடு கூடிய சதி...

ஆதி (பூர்வ) சங்கரர் காலத்தில் புத்தரால் கொஞ்சம் நலிவடைய செய்யப்பட்ட சனாதன தர்மத்தை ஆதி சங்கரர் தூக்கி நிறுத்தினார்...

பின்னால், திருஞான சம்பந்தர்/ அப்பர் காலத்தில் மீண்டும் சமணம் தழைக்க, மாசில் வீணை, வேயுறு தோளி பங்கன் எல்லாம் கேட்டோம் பார்த்தோம்... அதன் பின் 7/8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரரும் ஒருவர்... இப்போது நாம் அவரைத்தான் ஆதி சங்கரர் என்றே நம்பி திராவிட சிசு திருஞான சம்பந்தர் கதையை நம்பி விட்டோம்... இது விவரம் முந்தைய பதிவுகளில் லிங்க் கொடுத்து உள்ளேன்...

இனி, இங்கே screen shot கள் மட்டுமே.
image_6]





மீதி விவாதம் பதிவு 10 இல்...


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

சிருங்கேரி அன்னை சாரதாம்பாள் 8

ஞானி ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார்... வழியில் அவரை சோதிக்க எண்ணி, சில இளைஞர்கள், அய்யா, அங்கே இறந்து அழுகிய நிலையில் உள்ள நாயின் சடலத்தை பாருங்கள்... அதிலும் உங்கள் கடவுள் இருக்கிறாரா என்று வினா எழுப்பினர்!

ஞானி, பொறுமையாக ஆம், என்று பதில் சொன்னார்... அந்த இளைஞர்கள் அதை கொஞ்சம் விளக்கமாக சொல்லும்படி கேட்க...

அந்த நாயின் சடலத்தின் வாய் பகுதி பற்கள், அவை அமைக்க பட்டுள்ள நேர்த்தியை பார்த்தாலே புரியும்...

மேல் இரண்டு, கீழ் இரண்டாக 4 கூரான சிங்கப் பற்கள்... இரையை குத்தி வாகாக இழுக்க .. பின்பு, பின் வரிசையில் ரம்பத்தின் அமைப்பில் அந்த உணவை அரைத்து சிறு துகள்கள் ஆக்கி உள்ளே செலுத்த நாக்குக்கு எதுவாக... அந்த படைப்பின் நேர்த்தி இறைவன்...

கடவுள் நம் பார்வையில் தான் இருக்கிறார்...

வீட்டில் குருநாதர் திருவடிகளை ஆசையோடு வாங்கி வைக்கிறோம்... அதை காணும் போது அவர் முகத்தை ஒரு கணம் நினைத்து விட்டுபோகாமல், நாம் அவரோடு செலவிட்டு இனிமையான தருணங்கள்... குருவின் உபதேசத்தில் நமக்குப் பிடித்த சில சத்தான விஷயங்கள் என்று மனதின் திசையை ஒரு குறிப்பிட்ட வழியில் தொடர்ந்து கட்டுப்பாடாக செலுத்துங்கள். மனமும் ஒருமுகமாகும்... மனதுக்கு நல்ல விஷயங்கள் அசை போடும் பயிற்சி கிடைக்கும். கீழான சிந்தனை நேரம் படிப்படியாக குறையும்...

சரஸ்வதி அமர்வில் இப்படித்தான் நாம் சிந்தித்து பழக வேண்டும்... சரஸ்வதி வெள்ளை தாமரையில் அக்ஷ மாலை வேத புத்தகம் கையில் ஏந்தி அமர்ந்து இருக்கிறாள்... இவர் ஞான குரு தென்முக கடவுள் தங்கை... அவரும் ஸ்படிக ரஜத வர்ணம் (ஸ்படிகம்/ வெள்ளி) சரஸ்வதியும் அண்ணன் போல... வெள்ளை நிற பிரியை... புடவை, தாமரை.. தக்ஷிணாமூர்த்தியும் வீணை கையில் உடையவர்... தங்கையிடமும்.... இருவர் கைகளிலும் அக்ஷர மாலை, வேத புத்தகம்...

இப்படி மனதை ஒன்றை தொடர்ந்து இன்னொரு சத் விஷயத்தால் உருவம் பற்றி சிந்தித்தால் - அதுவே சிறந்த மனப் பயிற்சி வழி...

சிருங்கேரி மடம் வித்யாரண்யர், ஹரிஹரர், புக்கர் காலங்களில் கிபி 14ஆம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப் பட்டது... ஏற்கனவே ஆதி சங்கரர், சங்கரர் அவர்களின் வெவ்வேறு காலங்கள் குறித்து பேசினோம்...

இனி, ஸ்ரீ மடங்கள் root/ ஸ்தாபனம் குறித்து பேசுவோம் 9இல்

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் 7

சரஸ்வதிக்கு எப்போதுமே அமர்ந்த கோலம்தான். கல்வி கற்க குரு சிஷ்ய நிலைகள் இருக்கை தானே?!

மனது எப்போது சமநிலை படுகிறது?! மனதை ஒருமுகப் படுத்த பத்மாசனத்தில் தானே அமர்கிறோம்... கலைக்கே தாய் சரஸ்வதி.... நிர்மயமான வெள்ளை தாமரை பூவில் அமர்ந்தவள் - பத்மத்திலேயே ஆசனம்.

வேதங்களை உள்ளே அடக்கிய ஞான வீணையை, ஒரு மகனை தாய் தன் மடியில் அமர்த்தி ஜாக்கிரதையாக, பிரியமாக குழந்தைக்கு இதமாக இருக்க கூடிய ஒரு நிலையில் கட்டி அணைத்து ...

தினமும் சரஸ்வதி என்ற உடன் திரு உருவம் கண்ணில் வந்து போகும்... ஆனால், இந்த கோலத்தை மேலே சொன்னது போல, வேதம் வீணா, மகன், அன்னை, கட்டியணைத்து அமர்ந்த நிலை... கற்பனை செய்துதான் பாருங்களேன்! ஒரு வாரம், இப்படிப்பட்ட பயிற்சி - நிச்சியமாக எந்த தெய்வத்தின் முன்னும் நீங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் வெற்றி பெறலாம்.

On the pass... கடவுள் உருவம்/ பிம்பம்/ பிரதிமை எல்லாமே நமக்கு கந்தறி போன்ற ஒரு கைத்தடி, ஊன்றுகோல், நம் மனதை மந்தை மாடு, ஆடுகள் போல இங்கும் அங்கும் செல்லாமல் கட்டி வைக்க ஒரு தறி தான்... கட்டுத்தறி (கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்) தான் மனித வர்க்கத்தின் மானம் காக்கும் ஆடையை தருகிறது... சரியான வழி யில் கட்டுப்படாமல்/ கட்டப்படாமல் இருக்கி அல்லது தளர்த்தி மாற்றி தறி கட்டப்பட்டால் உற்பத்தியாகும் ஆடைகள் கதி?!

மனம் ஒரு முகப்பட நமக்கு ஒரு பிடிப்பு / பற்றுக்கோல் தேவை... அனைத்து தியான வழிகளிலும் முதலில் ஒரு தீபம்/ புள்ளி யில் / பிரணவம், ஸ்வஸ்திகம் என்று துவக்கி முடிவில் எங்கே செல்கிறோம்... உருவமே இல்லாத - ஆகாசம் - பரவெளி - என்றுதான் பயணிக்கிறோம்...

பர காசம்/ பர வெளி யில் ஸ்வயம் ப்ரகாசத்தோடு கலந்து சென்று நாமும் அங்கே ஐக்கியப்பட்டு விட்டால்?!


அதுவே மரணம் இல்லாத ஜீவ ப்ரம்மா ஐக்கிய நிலை. இதை கண்டவர்கள் விண்டிலர் (சொல்வதில்லை) விண்டவர்கள் கண்டிலர் (கண்டதில்லை).

இந்த பற்றுக்கோல் ஒரு காது அறுந்து போன பழைய செருப்பாக கூட இருக்கலாம். இதைத்தான் இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறோம். எனவேதான், ஹிந்து தர்மத்தில் பாதுகைக்கு ஏற்றம்!

தியானத்தின் மேன்மை/ சரஸ்வதி ரூப தியானம் என்று சொல்லி சிருங்கேரி யை விட்டு நகர்ந்து செல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.... அன்னை சாரதாம்பாள் நின்ற/ அமர்ந்த கோலத்தின் ஆராய்ச்சி ஒன்று, பின்னே வரும்.

அந்த ஆராய்ச்சிக்கு முன், கந்தறி/ பற்றுக்கோல் ஒரு செருப்பாகவும் இருக்கலாம் என்று சொன்னேன்.... அங்கு இங்கு என்று எண்ண முடியாதபடி எங்கும் பரிபூரணமாக நிறைந்து இருக்கும் இறைவன் நம் பார்வையில் தான் இருக்கிறான். அது தான் நம் புற அக ஒளி... இது குறித்து ஒரு சின்ன கதை யுடன் 8 இல் பேசுவோம்!


எழுதியவர் :-திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்

சிருங்கேரி சாரதா மாதா 6

5... ஞானேந்திரியம், 5 கர்மேந்திரியம், 5 பூதம்... அது போலவே குருமார்களும் 5...

1. குரு -

ஒரு சீடனுக்கு தற்போது கல்வி கற்றுத் தரும் குரு.

2.பரம குரு -

ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்ட குரு - சீட மரபை நிலைநாட்டிய குரு. (எ. கா., ஆதி சங்கரர், அத்வைத தத்துவத்தைநிலைநாட்டிய பரம குரு).

3பராபர குரு (Parātpara-Guru) –

பல்வேறு தத்துவங்களைக் கொண்ட குரு – சீட மரபுகளை தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்தவர் மகாகுரு (எ.கா., வேத வியாசர்).



4.பரமேஷ்டி குரு’’’–

மோட்சத்தைவழங்கக்கூடிய மிக மிக உயர்ந்த குரு. (எ. கா., தட்சிணாமூர்த்தி அல்லது சிவன்)

மேலே சொன்ன 4 குருமார்களும் நிலம், நீர், நெருப்பு, காற்று போல உணர முடிந்த சகுண ப்ரம்மங்கள் அல்லது குரு என்று கூட சொல்லலாம்... முன்னே சொன்ன 4 ஸ்ரீ மடங்கள் என்றும் உருவகம் செய்யலாம்.

காணவோ, உணரவோ, கண்டு உரைக்க முடியாமல் அதிலேயே ஒன்றி ஆகாசமாக நிர்குணப்ரம்மமாக பர வெளியாக உள்ள குரு... அதுவே காமகோடி பீடம்.

திருச்சி திரு ஆனைக்கா வில் வைதீக பூஜை தான்... இங்கே வடக்கு விபூதி அக்ராஹாரத்தில் ஒரு காஞ்சி சங்கர மடம் ஒன்று உண்டு... இந்த ஸ்ரீ காரியாலயம்... அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு தாடங்க பிரதிஷ்டை செய்ய காஞ்சி/ சிருங்கேரி மடங்கள் இடையே நடந்த தலைமுறை வழக்குக்காக ஆசார்யாள் தங்கி இருக்கவே உருவாக்கப்பட்டது...

இங்கே அகிலாண்டேஸ்வரி உக்ரஹத்தை மட்டுப்படுத்த, அன்னையின் கண் பார்வையில் உயர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட முக்குருணி விநாயகர் பீடத்தை உற்று நோக்கிப் பாருங்கள்... அதில் ஆதி சங்கரருக்கு முன் 5 சீடர்கள் அமர்ந்து பாடம் கேட்கும் விதமாக சிற்ப அமைப்பு உண்டு...

சில உருவாக்கப்பட்ட ஆவணங்கள்... ஆதி சங்கரர் தமிழ்நாட்டுக்கு உள்ளே வந்ததே கிடையாது என்று சாட்சி சொல்கின்றன... ஆனால், காபாலிகர்களை ஒடுக்க சங்கரர் சென்னை திருவேற்காடுக்கும் வந்ததாக சான்றுகள் உள்ளன.

இந்த காபாலிகம் என்கிற வழிபாடு வட இந்தியாவில் பிரசித்தம்... 2500 ஆண்டுகள் முன்பே தென்னிந்தியாவில் அதுவும் இப்போதைய ராஜ்தானி எல்லைக்குள் இருந்தது என்றால், இந்த தேசம் ஒரே தேசம் தானே?!

இதை சுலபமாக புரிந்து கொள்ள... ஏசு கிறிஸ்து வின் தேச வாரி படங்களை ஒருமுறை கூகிள் உள்ளே சென்று பதிவு இறக்கி பாருங்கள்... சீன ஏசு, மங்கோலிய அல்லது கொரிய ஏசு வுடன் கூட ஒத்துப் போகமாட்டார்...

7 இல் மீண்டும் சிருங்கேரி க்கே போய்விடுவோம்...


Author :- sri shankaran krishnamurthy with face book

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சாரதா மாதா 5

கடந்த தொடரில் நான் சொல்லி இருந்த ஒரு விஷயத்தை இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன்!

ஒரு தலைப்பை குறித்து எழுத நினைப்பது மட்டுமே நம்மால் முடியும். தன்னலம் இல்லாமல் பொது நலம் கருதி நாம் நம் பணியை தொடங்கினால், நம்மை ஊக்குவித்து நமக்குள் நல்ல உணர்வை ஊட்டி கைபிடித்து அழைத்துச் செல்வது பெரியவர்களின் ஆசியும், ஆண்டவன் கருணையும் மட்டுமே!

சிருங்கேரி குறித்த இந்த தொடரில் கூட்லி - நின்ற கோல சாரதா தேவி குறித்து மட்டும் எழுத நினைத்து அதிக பட்சம் 4 பக்கங்கள் மட்டுமே எழுத நினைத்தேன். ஆனால் ஸ்ரீ சாரதாம்பிகையின் கருணை வேறாக... புதிய புதிய சிந்தனைகள் நமக்கு உள்ளே உதிக்க, இங்கே வரி வடிவில்...

ஹ்ருஷ்ய ச்ருங்கர் தவம் செய்த இடம் என்றும் உரோம பாத மன்னன் காலம் குறித்து சொல்லி இருந்தேன்... இப்போது சிருங்கேரி தலம் / பழமை / பெருமை குறித்த ஒரு செய்தி....

தசரத சக்கரவர்த்திக்கு பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ ராமன் ஜனன காரண அஸ்வமேத/ புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வேண்டி, இதே ஹ்ருஷ்ய ச்ருங்கர் / ரோமபாத மன்னன் / மழைவளம் விவாதிக்கப்பட்டு புரோகிதர் அழைக்கப்பட்டார்.... சிருங்கேரி ராமாயண காலத்துக்கு - திரேதா யுகத்துக்கு முந்தைய காலம் தொட்டே பெருமை பழமை உள்ள தலம்...

இங்கேயே, கலைவாணி வசிக்க நினைத்த வரலாற்று தொகுப்பே இந்த தொடர்....

ஆதி சங்கரர் ஸ்தாபித்த 4 ஸ்ரீ மடங்கள் ஜ்யோதிர், த்வாரகா, பூரி, சிருங்கேரி பின், ஆதி சங்கரர் கடைசியாக நிறுவிய சர்வ் ஞான பீடம் காஞ்சி காம கோடி பீடம்.

ஆனால் இந்த காஞ்சி மடம் அங்கீகரிக்கப்படுவதில் நிறைய பிணக்குகள், சட்ட போராட்டங்கள் இருந்தன... இப்போதும் கொஞ்சம் ஆங்காங்கே ego இருக்கவே இருக்கு!

மற்ற மடங்கள் செல்வம் ஞானம் வைராக்கியம் திடசித்தம் கொடுக்கலாம்... ஆனால் ஆதி சங்கரருக்கே ஞானம் ஏணி அதன் காரணமான மோக்ஷம் காமத்தின் (ஆசையின்) கடை கோடியில் இங்கேயே கைவர, பகவத் பாதாள் கேதாரம் சென்று ஐக்கிய நிலை பெறுகிறார்...

காபாலிகம்/ இந்த பரந்த பாரத தேசத்தின் ஒருமைப்பாடு குறித்த ஒரு செய்தியும் on the pass பதிவாக 6இல்...

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்

அன்னை சாரதா மாதா 4

கூட்லி சாரதா மாதா கதை என்று ஆரம்பித்தோம்... சில சுவையான கற்பனைகள் என்று முடித்தேன்... அதற்கும் முன்பாக சில தெரியாத உண்மை களை பதிவிட்டு விடுகிறேன்...

சௌந்தர்யலஹரி பாடல் 75 இல் குறிக்கப்பட்ட திராவிட சிசு யார்?!

பெரும்பாலும் நாம், அவரை திருஞான சம்பந்தர் என்றே அறிகிறோம்... ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கும் சங்கரர் காலம் கிபி 788... ஆனால் காஞ்சி மகா சுவாமி சங்கர பகவத் பாதாள் #கிமு_5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்று விரிவாக விளக்கி உள்ளார்....

அதாவது சம்பந்தருக்கு முன்பாக வாழ்ந்த ஒருவர் திருஞான சம்பந்தர் பற்றி பாடி இருக்க முடியுமா?!

ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்வோம்... சங்கரர் என்பது இரு நபர்களை குறிக்கும்... காலத்தால் மிகவும் பழமையானவர், சம்பந்தருக்கு முற்பட்டவர் ஆதிசங்கரர்.... கிபி 788 வாக்கில் வசித்தவர் அபிநவசங்கரர்...

சௌந்தர்யா லஹரி 75 ஸ்லோகம் திராவிட சிசு, ஞானப்பால் நடப்பு, ஆதி சங்கரர் தன்னை குறித்து எழுதிக் கொண்ட ஒரு தற்குறிப்பு ஏற்றம்... காலப்போக்கில் கிபி 788 அபி நவ சங்கரர் / ஆதி சங்கரர் ஆகியோரிடையே இருந்த பெயர் குழப்பம்/ இருண்ட கால வரலாற்று குழப்பம், ஆதி சங்கரர் - திராவிட சிசு திருஞான சம்பந்தர் (கிபி 788 க்கு முற்பட்ட) ஆகிப் போனார்...

http://sankaramathas.blogspot.in/2013/05/sankaras-father-sivaguru.html?m=1

மேல் விவரங்களை 5 இல் பேசுவோம்...

அதற்கு முன்பு, கும்பகோணத்தில் இருந்து கேரளா சென்ற சிவகுரு என்ற வைதீகர் மகன் கூட திராவிட சிசுதான்... கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கூட ப்ரம்மணர் தான்... திராவிடம் என்பது இனத்தை குறிப்பது அல்ல.... தென் திசையை குறிப்பது...

ஆர்யாம்பா மகன் ஆதி சங்கரர் #மலையாளி_அல்ல... #தமிழர்...

https://janamejayan.wordpress.com/2010/01/31/sringeri-sharada-peetham/

https://www.google.co.in/url?url=https://tamilandvedas.com/tag/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F-%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AF%2581/&rct=j&sa=U&ved=2ahUKEwiAidy0jcbaAhXBQI8KHaKLDOsQFjAAegQICRAB&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81&usg=AOvVaw2CBAevyKuPsiMjUPLr4Dqt

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்

அன்னை சாரதா மாதா 3

உபய பாரதி (சரசவாணி) ... குமாரில பட்டரை வாதத்தில் வென்ற சங்கரர், குமாரில பட்டர் கேட்டு கொண்டதற்கு இணங்கி, மகிஷ்மதி என்ற ஊருக்கு வந்து, மண்டன மிஸ்ரர் / உபய பாரதியோடு வாதம் செய்ய வருகிறார்.

அன்று, மண்டன மிஸ்ரர் வீட்டில் திவசம். மண்டன மிஸ்ரர் க்ருஹஸ்தர்... சந்யாசிகளை நோக்குவதும் இல்லை... வீட்டின் கதவு தாழிடப்பட்டு, வியாசர் ப்ரம்மணராக எழுந்தருளி இருந்த நேரம்... சங்கரர் அருகே இருந்த தென்னை மரத்திடம் வந்து சாணான் என்ற மந்திரம் ஓத, தென்னை மரம் வளைந்து கொடுக்க, சங்கரர் மரத்தின் மீது ஏறி மண்டன மிஸ்ரர் வீட்டுக்கு உள்ளே குதிக்க... அந்த நேரம், விஷ்ணு இலையில் சந்யாசிகளை அமர வைக்க சாஸ்திரத்தில் இடம் உண்டு என்று வியாசர் அறிவிக்க, சங்கரர் தத்துவ விசார பிக்ஷை கேட்க, பின் முதலில் சிரார்த்தம் முடியட்டும் என்று உணவருந்தி...

மறுநாள் போட்டி... பந்தயம்... மண்டன மிஸ்ரர் வென்றால், சங்கரர் க்ருஹஸ்தராக வேண்டும்... சங்கரர் வென்றால் மண்டன மிஸ்ரர் துறவு மேற்கொள்ள வேண்டும்...

இருவர் கழுத்திலும் மாலை அணிவிக்கப்படும்... யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவர் தோற்றவர்...

நடுவராக சரசவாணி... (உபய பாரதி) - மண்டன மிஸ்ரர் மனைவி... 21 நாட்கள் வாதம்... மண்டன மிஸ்ரர் மாலை வாடிவிட...

வாக்தேவி... இருவரும் பிக்ஷை க்கு வாருங்கள் என்று அழைத்து முடிவை அறிவித்தாள்... பிக்ஷை சந்யாசிகளுக்கு உரியது... இருவரும் பிக்ஷைக்கு வரலாம் என்றதன் மூலம் மண்டன மிஸ்ரர் மாலை வாடி தோற்று துறவு மேற்கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தி...

சரசவாணி சத்ய லோகம் செல்வதாக கூற, சங்கரர் தடுத்து, வன துர்கா மந்திரம் ஜெபித்து அம்பிகையை தான் (சங்கரர்) விரும்பும் நேரமே சத்ய லோகம் செல்ல வேண்டும் என்று நிர்பந்தித்து பின் மகாராஷ்டிர தேசம் முழுவதும் சென்று அத்வைத சிந்தாதத்தை நிலை நாட்டினார் சங்கரர்...

சங்கரருக்கு ஒரு ஆசை துளிர் விட... அம்மா, சரஸ்வதி மாதா... நீ என்னோடு என் பூர்வ தேசம் வந்து என் பூமியில் ஞான தீபம் ஏற்றி, என் அன்னைக்கு (ஆர்யாம்பாள்) தரிசனம் கொடுத்து ஆட்கொள்ள வேண்டும் என்று சரசவாணி யிடம் விண்ணப்பிக்க...

உபயபாரதி...

சங்கரா, நான் உன்னோடு வருவேன்... நீ திரும்பி பார்க்காமல் முன் செல்ல வேண்டும்... எங்கே நீ நான் வருகிறேனா என்று நின்று திரும்பி பார்க்கிறாயோ அங்கேயே நான் நின்று நிலை பெறுவேன்...

சங்கரர், அம்பிகை காலில் இருந்த சலங்கையை நம்பி ஒப்புக்கொண்டு நடக்க...

இங்கே சில ரசமான கற்பனைகள்...பதிவு 4...

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்

சிருங்கேரி ஸ்ரீ சாரதா மாதா - 2


ஹ்ருஷ்ய ச்ருங்கர் ரோம பாதர் ஆதி சங்கரர் மண்டன மிஸ்ரர் உபய பாரதி வித்யாரண்யர் (வித்யா சங்கர தீர்த்தர்) ஹரிஹரர், புக்கர், விஜயநகர சாம்ராஜ்யம், ஹொய்சாளர்...துங்கபத்ரா நதி...

நிறைய பெயர்களை முதலிலேயே சொல்லி விட்டேன்... காரணம், எழுதும் போது ஆர்வக்கோளாறு காரணமாக யாரையாவது நினைவு கூர மறந்து விட்டால்?!

துங்கன்/ பத்ரன் என்ற இரண்டு புண்யாத்மாக்கள் பெயரில் புனித நதி... இதன் கரையில் அமைந்து இருப்பதே மந்த்ராலயமும் கூட... அங்கே நதியின் ஒரு பக்கம் கர்நாடகா ஒரு பக்கம் ஆந்திரா...

நதியில் நடந்து பயணித்தால் நதியின் ஆழம், அகலம், பழமை புரியும்... பாறை படிவுகள் எல்லாம் மணல் திட்டுக்களாக இருந்து கால போக்கில் நீரின் தொடர் அழுத்தத்தால் கடினம் பெற்று இருப்பதாக நான் உணர்ந்தேன்.

ரோம பாத மன்னன் ஆட்சிக்காலத்தில் மழை இல்லாமல் போக, அப்போது அறிஞர்கள் ஆலோசனைப் படி பெண் வாடை/ ஸ்பரிசம் இல்லாமல் வாழ்ந்து வந்த ஹ்ருஷ்ய ச்ருங்கர் - ரோம பாத மன்னன் உத்திரவுப்படி சில ஆண் வேடமிட்டு பெண்களால் நைச்சியமாக கவர்ந்து அழைத்து வந்து - ஹ்ருஷ்ய சிருங்கர் பாதம் பட்டு மழை பெற்ற பூமி...

அந்த ஹ்ருஷ்ய ச்ருங்கர் தவத்தால் இந்த புண்ய பூமி சிருங்கேரி என்று அறியப்பட்டு... இங்கே பாம்பின் நிழலில் தவளை இளைப்பாற கண்டு, ஆதி சங்கரர் இங்கே ஒரு ஸ்ரீ மடம் ஸ்தாபிக்க நினைத்து 12 ஆண்டுகள் இங்கே தங்கி சீடர்களுக்கு உபதேசித்த ஸ்ரீங்கேரிக்கு சாரதா மாதாவாக வந்து அருள் பாலித்தது அன்னை சரஸ்வதி தேவியே.

ஒவ்வொரு அவதாரத்திலும் மும்மூர்த்திகள் பங்களிப்பு கட்டாயம் உண்டு... ஸ்ரீ பரமேஸ்வரன் அம்சமான சங்கரருக்கு எப்படி கோவிந்த பாதர் (விஷ்ணு) குருவாக வந்து ஆட்கொண்டாரோ, அதுபோல நான்முகக் கடவுள் ப்ரம்மா மண்டன மிஸ்ரர் என்று வந்து சீடனாக ஆட்பட்டார்.

மண்டன மிஸ்ரர் - ஆதி சங்கரர் வாதம் நடந்த சமயத்தில் மண்டன மிஸ்ரர் (ப்ரம்மா அம்சம்) அவருடைய மனைவியாகிய உபய பாரதி யை (சரஸ்வதி தேவி அம்சம்) ஒரு கடத்தில் ஆவாகனம் செய்து அதை திரைக்கு பின் நிறுத்தி கேள்வி/ வாதம் தொடர.... இதை தனது ஞான திருஷ்டியில் உணர்ந்த சங்கரர் - வாதில் வென்று... பின் உபய பாரதியை தன்னோடு அழைத்து வந்து கர்ம பூமியில் ஞான தீபம் ஏற்றி வைக்க நினைக்க... சரஸ்வதி அன்னையிடம் அவ்வண்ணமே கோரிக்கை வைக்கிறார்!



(சங்கரர்- மண்டன மிஸ்ரர் _ உபய பாரதி வாதம் மிகவும் சுவையானது... அது குறித்து வித்யாரண்ய ஸ்வாமிகள் - ஹரிஹரர் புக்கர் - , பொருள் வேண்டி - மறு ஜென்மம் - துறவு மேற்கொள்ளல்- விஜயநகர சாம்ராஜ்யம் - 14 நூற்றாண்டு இவை குறித்து வேறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் - இங்கே சிருங்கேரி மடம், சாரதா மாதா, நகர்வு குறித்து மட்டுமே பேசலாம்)

உபய பாரதி - கேரளம் நோக்கிய மலை பயணம் - சலங்கை அடுத்த பதிவில் தொடரும்....

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி முகநூலில்

அன்னை ஸ்ரீ சாரதாம்பாள்... 1

ஸ்ரீ குருவுக்கு நமஸ்காரம்...

எனது தகப்பனார் வழி பாட்டி பெயர் சாரதாம்பாள்... இன்று நான் சமூகத்தில் ஓரளவு அந்தஸ்து கவுரவம் கூடி வாழவும், இது நாள் வரை நான் எழுதியுள்ள சில ஆன்மீக/ தத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு முக்கிய காரணம்... எனது பாட்டி சாரதாம்பாள்! அந்த பாட்டியின் பெயர் சொன்னாலே நினைவுக்கு வரும் தெய்வம் சிருங்கேரி ஸ்ரீ சாரதா மாதா.

இன்று வரை தரிசிக்க வாய்ப்பு கிட்டாத சிருங்கேரி அன்னையை பற்றி எழுத மிகவும் காலம் தாழ்த்தி வந்தேன்.... சில மாதங்கள் முன்பு அன்பு நண்பர் ஸ்ரீ CA Ramesh Ramamurthy சிருங்கேரி சென்ற போது, அவரிடம் அருகே மலை மீது இருக்கும் கூட்லி சாரதா அன்னையை தரிசித்து வரும்படி சொல்லி இருந்தேன் (நான் செவி வழி கேள்விப்பட்ட தகவல்).



ஆனால், ரமேஷ் க்கு அந்த வாய்ப்பு கை கூடவில்லை... ஆனாலும் அவர் அடி மனதில் அன்று அடியேன் விதைத்து விட்ட அந்த விதை, ரமேஷிடம் ஒரு தேடுதலை உருவாக்க, இன்று திடீரென கூட்லி சாரதா மாதா படங்களை எனக்கு அனுப்பி வைத்தார்... இன்று அக்ஷய திருதியை சுபதினமாக இருப்பதால், Ramani Bairava Athreya Gothram அவர்கள் ஆணைப்படி இந்த தொடர் துவக்கப்படுகிறது....

இது ஒரு தகவல் பதிவே... ஆராய்ச்சி முடிவோ, பிரமானமோ கிடையாது. சிந்தனை பலம், சுவை இருக்கும். இந்த தொடர் சிறப்பாக அமைய ஸ்ரீ சிருங்கேரி மற்றும் என் இஷ்ட காஞ்சி குரு பரம்பரை திருவடி சிந்தித்து எழுத துவங்குகிறேன்.

நன்றி :- சங்கரன் கிருஷ்ணமூர்த்தி முகநூலில் இருந்து

ஞாயிறு, 11 மார்ச், 2018

திருக்கடையூர்

திருக்கடையூர் பிரதான ஆலயத்தின் பின்புறம் ஆதி கோவில் ஒன்று உள்ளது. திருக்கடையூர் மயானம் என்ற பெயரில் உள்ள பழமையான ஆலயம்.

இந்த கோவிலும் மிகவும் சக்தி வாய்ந்த கோவில்... ஆனால் ஏகாந்த சேவை...

இந்த கோவில் மதில் பிரகாரம் உள்ளே ஒரு பிரசித்தி பெற்ற நீர் சுனை உள்ளது. பிரதான கோவில் அமிர்த கடேஸ்வர ஸ்வாமிக்கு இந்த ஆதி கோவில் நீர் சுனை தீர்த்தம் சிறப்பு வண்டியில் எடுத்துத் செல்வார்கள்...

பிரதான கோவிலின் மூலவருக்கு சுனை நீர் அபிஷேகிக்கப்படும்.... வேறு சிலா விக்ரஹங்கள் மீது சுனை நீர் ஊற்றப்படுமானால் கற்கள் பொரிந்து வெடிப்பு விடும்...

கார்த்திகை சோம வாரங்களில் சுனை நீர் சங்கு மூலம் மூலவருக்கு அபிஷேகிக்கப்பட்டு பக்தர்கள் பருகவும் கிடைக்கும்.... தீராத நோய்களை தீர்க்கும். மற்ற நாட்களில் சுனை நீர் பிரசாதம் விநியோகிக்க மாட்டார்கள்....




பிரதான கோவிலில் சுனை நீரை சேகரித்து வர ஒரு மாட்டு வண்டி / சிறப்பு பாத்திரம் தினமும் தயாராக இருக்கும்....


- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

தவளை அண்டாத குளம்

புள் இருக் வேல் ஊர்
திருவெண்காடு
உத்திர கோச மங்கை (மேலே காகங்கள் கூட பறக்காதாம்!!!!)

திருவெண்காடு, அக்கினி குளத்து நீர் கந்தக தன்மையோடு உள்ளது... மரபியல் சோதனை முடிவுப்படி....

அதனால் கர்ப பிரச்சனைகள் நீங்குகிறதாம்....

வைத்தீஸ்வரன் கோவில் குளத்தில் குளிப்பது சகல வியாதிகளையும் போக்கும்....

மூலவர் பாணம் மருந்து கட்டு போட்டு வெள்ளி கவசத்தால் பாதுகாக்கப்பட்டு....

மூலவருக்கு நமக்கு இடையே ஒரு உலோக தடுப்பு வட்டமும் இங்கே உண்டு...

அபிஷேக நீர் குளத்தில் கலந்து விபூதி வேப்பிலை வில்வ தளம் கொண்டு குளத்து நீர் கலந்து தயாரிக்கப்படும் மருந்து உருண்டைகள்... மிகவும் விசேஷம்....

நம் ஆலயங்கள் மனிதனின் அறிவுக்கு எட்டாத ஞானப் பொக்கிஷங்கள்....

படைக்கத்தான் நமக்கு முடியாது.... பாதுகாக்கவாவது?!


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

திருப்பழையாறு வடதளி

சோழநாட்டு திருத்தலம்.

நாடெங்கும் சுற்றித் தேவாரம் பாடி வந்த அப்பர் ஸ்வாமிகள் தூரத்தில் இருந்து கோவிலை கண்டு, ஆனந்த கண்ணீர் விட்டு சாகோபுர தரிசனம் செய்து வணங்குகிறார்....



இதை பார்க்கும் சில அருகாமை சமணர்கள் அப்பர் ஸ்வாமிகளை கண்டு ஏளனமாக எள்ளி நகைத்து, உள்ளே இருக்கும் உங்கள் சிவ லிங்க கல்லை மற்ற பரிவார சிலைகளை அகற்றி விட்டு எங்கள் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து உள்ளோம் என்கிறார்கள்....

தெருநாய்க்கு நாய்க்கு தெரியுமா செக்குக்கும் சிவமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம்.... இந்துக் கோவிலை சமணக் கோவிலாக மாற்றி உள்ளார்கள்!!!

உடனே அப்பர் ஸ்வாமிகள் உண்ணா நிலை ஏற்க அரசர் கனவில் இறைவன் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் இடம் தெரிய, அரசன் சமணர்களை தண்டித்து தெய்வ மூர்த்திகள் மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்கு வருகிறது....


- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்