ஞாயிறு, 16 டிசம்பர், 2018

கீதை அத்யாயம் 17


ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்.
*******************************
ஸ்ரத்தை என்றால், அதிக கவனம் எடுத்துச் செய்ய வேண்டியது... மனம் ஒருமித்து...  வீட்டில் முன்னோர்களுக்குச் செய்யும் திதி... ஸ்ரார்த்தம் என்று சொல்லுவார்கள்...

த்ரய ... என்றால் 3

Three...

த்ரயார்ஸேவ ப்ரவரன்... என்றால்...  பெரியோர்களை நமஸ்கரிக்கும் போது அபிவாதயே சொல்லப்படும் அதில் தங்கள் பூர்வீகம் குறித்து.... உதாரணமாக கௌண்டின்ய கோத்திரம் என்றால் சதுஸ்ஸாகர பர்யந்தம் கோ, ப்ராம்ணேப்ய சுபம்பவது 1. வாசிஷ்ட 2. மைத்ராவருண 3 கௌண்டின்ய த்ரயார்ஸேவ என்று துவங்கும்... 

தர்பணம் கொடுக்கும் போது கூட பித்ரு (அப்பா) வசு ரூபம், பிதாமக (தாத்தா) ருத்ர ரூபம், ப்ரபிதாமக ஆத்ய ரூபம் (அப்பாவின் தாத்தா) என்று 3 தலைமுறை குறிக்கப்படும்...

த்ரிநேத்ரம் (சிவனுக்கு 3 கண்கள்)
த்ரிகுணம் (ஸத்வம் ரஜோ தமஸ்)
த்ரிதளம் (வில்வம்)
த்ரிகாலம் (ப்ராத, மாத்யாநிக, சாயம் சந்தியா)
மனம் வாக்கு காயம்
பதி பரமாத்மா, பசு ஜீவாத்மா அல்லது உயிர், பாசம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் வேறுபடுத்தி நிற்க்கும் ஆணவம், கர்மம், மாயை என்ற 3 மலங்கள்...

வி-என்றால் மேலான... (நாயகர், விநாயகர்)

பாகம் என்றால் பகுப்பு...

யோகம் என்றால் அப்யாசம்/பயிற்சி...

ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்... இப்போது புரிகிறதா?!

கீதையில், தலைப்புகள் கூட எத்தனை கவனமாக அழகாக பொருள்பட நேர்த்தியாக அமைக்கப்பட்டு உள்ளது!!!

இந்த அத்யாயத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, மனம் வாக்கு காய சுத்தி, ஸத்வம் ரஜோ தமஸ் ஆகியவை குறித்தும் அதற்கான உணவு முக்கியமாக அதன் ருசி,  அதன் பலன், குறித்து சொல்கிறார்...

இனி, இங்கு சொல்லப்போகும் விஷயத்துக்கு எனக்குள் வித்திட்டவர் ஸ்ரீ ராம கோபால ரத்னம் (ஸ்ரீ RGR வழியில்)

பகவான், உணவு வகையை பற்றி மட்டும் சொல்லாமல், மனிதனின் குணத்துக்கு எற்ப ருசி எவ்வாறு வேறுபடும் என்று சொல்லி இருக்கிறார்...

வாழ்க்கையில் தன் குறிக்கோள்/திசை பயணப்படப் போகும் பாதையை தெளிவாக உணர்ந்தவன் சாத்வீகன்...

அதனால்... சாத்வீகனுக்கான ருசியை பற்றி பகவான் வர்ணிக்கும்போது,  அவன் உணவு விளைவிக்கும் பலன் பற்றி கூறுகிறார். சாத்வீகன் ஆயுள், ஆரோக்யம் வளர்க்கும் உணவில் ருசி கொள்வான்...

மிதமான ருசி.. அதை உண்ட பிறகு உடலுக்கு கேடு எதுவும் இல்லாமல் ஒரு வகையான சுகம் தரும் உணவு சாத்வீகம்.

ராஜசன்... பரபரப்பு படபடப்பில் இருப்பதால், (சாத்வீகன் போல உணவின் பலன் பற்றிய சிந்தனை இல்லாமல்) உணவின் ருசியை மட்டுமே நாடுவான்... அதனால் ராஜஸன் உணவு பற்றி பகவான் சொல்லும்போது உணவு வகைகளை பற்றி வர்ணிக்காமல், ருசி பற்றி மட்டும் குறிப்பிடுகிறார்...  காரம் புளிப்பு சூடு நிறைந்த உணவை ரஜோ குணத்தவன் நாடுவான்... இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் அந்த உணவின் விளைவுகள் பற்றியும் எச்சரிக்கிறார்.

அதிக ருசி உள்ள உணவு, நோயை, வேதனையை கொடுக்கும்...

தீவிர ருசி உள்ள தாகத்தை எரிச்சலை தூக்கத்தை ஏற்படுத்தும் உணவு ராஜசம்...

தாமச குணம் உள்ளவன் உணவின் ருசி விளைவு ஆகிய 2 பற்றியும் சிந்திப்பது இல்லை... விவேகத்தை விலக்கி மூட நிலையில்  ருசியற்ற/ருசி கெட்ட உணவை நாடுகிறான். இந்த உணவு சோம்பல் மயக்கத்தை தோற்றுவிக்கும்...

இதை என் வழியில் சினிமா/வடிவேலு பாணியில் யோசித்தேன்...

நெல்லிசோறு - சத்வீகம்

நெல்லிச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் - ராஜசம்

நெல்லிச்சோறு - நெய் மணக்கும் கத்திரிக்காய்- நேற்று வச்ச மீன் குழம்பு - தாமசம்

(முள்ளும் மலரும் திரைப்பட பாடல்)

இன்று சுட்ட இட்லி சாத்வீகம்

இட்லி-சட்டினி ராஜசம்

இன்னக்கி சுட்ட இட்டிலி நேற்று வச்ச மீன் குழம்பு தாமசம்

(கந்தா கடம்பா கதிர் வேலா திரைப்பட வடிவேலு வசனம்)

நல்ல பழ ரசம் (இனிப்பு/ஐஸ் சேர்க்காத) ஸத்வம்

சூடான காரமான சூப் ராஜசம்

ஊறவைக்கப்பட்ட புளித்த திராட்சை ரசம் தாமசம்.

மீண்டும், ஸ்ரீRGR வழியில், நாம் உண்ணும் சமைத்த உணவு இறுதி வடிவம்.  அதற்கு முந்தைய படிகளில் அது எந்த குணத்தில் இருந்தது?!

உணவு தானியம் வாங்கிய பணம் நேர்மையாக மற்ற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் சம்பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்...

தான்யம்/ காய்கறி வகைகள் இயற்கையை சுரண்டாமல், இயற்கைக்கு ஊறுவிளைவிக்காமல் மருந்து ரசாயனம் கலக்காமால் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படாமல் விளைந்து இருக்கவேண்டும்...

சமைபவர் பரிமாறுபவர் மன நிலை...

சமைக்கும் இடத் தூய்மை/சுகாதாரம்...

உண்ணும் போது உண்பவர் மனம்/  இறை தியானத்தில் இடம் தூய்மை இவற்றை பொறுத்தே உணவின் ஸத்வ ரஜோ தாமச குணம் நிர்ணயிக்கப்படும்.

என் வழியில்...

வீட்டுத் தொழுவத்து பசும் பால் சாத்வீகம்

பன்னையில் வாங்கும் எருமை பால் ராஜசம்

உணவு விடுதியில் அதை திரித்து தயாரிக்கப்படும் பாலாடை கட்டி (பன்னீர்)  தாமசம்

கொல்லைப்புரத்து காய்கறி / ஸத்வம்
உரம் வைத்து பயிரிட்ட காய்கறி/ ராஜசம்
பூச்சிக் கொல்லி மருந்து வைத்து உருவாக்கிய காய்கறி தாமசம்

ஏர் உழவு விளைச்சல் / ஸத்வம்
இயந்திர உழவு விளைச்சல் / ராஜசம்
செரிவூட்டிய விதை விளைவு / தாமசம்

வீட்டில் சுகாதாரமாக தூய்மையாக அம்மா/மனைவி சமைத்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நமக்கு பரிமாற நாம் பிரசாதமாக எண்ணி பக்தியோடு சாப்பிடும் உணவு ஸத்வம்

திருமண வைபவத்தில் /விருந்துகளில் பாரிசாரகர்கள் சமைத்து பரிமாற, குறைந்த பட்சம் வாழ்த்தும் மனோ பாவத்தில் நாம் சாப்பிடும் ஆடம்பர விருந்து  ராஜசம்

Hotel (Bar) களில் சுகாதாரம் தூய்மை இல்லாத இடத்தில் தயாரிக்கப்பட்டு / கேளிக்கை விடுதியில் காசுக்காக /பக்தி இல்லாமல் பரிமாறப்படும் உணவு தாமசம்.

சைவ உணவுகள் சாத்வீகம்
அசைவ உணவுகள் உடல் பலம் தேவை கேளிக்கை கருதி ராஜசம்/தாமசம்.

உணவின் நுகர்வு,

நம் தேவை இயல்பு பயன்பாடு கருதி இருக்க வேண்டுமே தவிர,

பிறர் எண்ணம்/வற்புறுத்தல்/ நாடகத் தன்மையோடு (status) உணவு நுகர்வு கூடாது.

மருத்துவர் ஆலோசனை படி மாமிச உணவு உண்பதற்க்கும்,

status பிறர் எண்ணம், வற்புறுத்தல் கருதி அசைவம் உண்பது/தவிர்ப்பதும் வித்யாசம் இருக்கிறதே!!!

மொத்தத்தில், இறைவனை நோக்கிய நம் பயணத்தை, இலக்கை அடைவதை சாத்வீக உணவு எளிதாக்கும்...

கடைசியாக ஜாதி குறித்து ஒரு குறிப்பு... சாத்வீக குணம் ப்ராம்மண்யம்...

ஓரளவு சாத்வீக பெருமளவு ரஜோ கொஞ்சம் தாமச குணம் கலந்த உயிர் க்ஷத்திரியம்...

ரஜோ/தாமச குண கலவை வைசியம்...

தாமச குணம் ... நான்காம் வர்ணம்...

ஜாதி என்பது பிறப்பால்/வர்ணத்தால்/ நிர்ணயிக்கப்பட்டது அல்ல...

ஜாதி என்பது குணத்தால்/ உணவால் (may  be out of Idly /dosa)  தீர்மானிக்கப்படும்!

எழுதியவர் :- திரு. கிருஷ்ணமூர்த்தி சங்கரன் தம் முகநூலில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக