உபய பாரதி (சரசவாணி) ... குமாரில பட்டரை வாதத்தில் வென்ற சங்கரர், குமாரில பட்டர் கேட்டு கொண்டதற்கு இணங்கி, மகிஷ்மதி என்ற ஊருக்கு வந்து, மண்டன மிஸ்ரர் / உபய பாரதியோடு வாதம் செய்ய வருகிறார்.
அன்று, மண்டன மிஸ்ரர் வீட்டில் திவசம். மண்டன மிஸ்ரர் க்ருஹஸ்தர்... சந்யாசிகளை நோக்குவதும் இல்லை... வீட்டின் கதவு தாழிடப்பட்டு, வியாசர் ப்ரம்மணராக எழுந்தருளி இருந்த நேரம்... சங்கரர் அருகே இருந்த தென்னை மரத்திடம் வந்து சாணான் என்ற மந்திரம் ஓத, தென்னை மரம் வளைந்து கொடுக்க, சங்கரர் மரத்தின் மீது ஏறி மண்டன மிஸ்ரர் வீட்டுக்கு உள்ளே குதிக்க... அந்த நேரம், விஷ்ணு இலையில் சந்யாசிகளை அமர வைக்க சாஸ்திரத்தில் இடம் உண்டு என்று வியாசர் அறிவிக்க, சங்கரர் தத்துவ விசார பிக்ஷை கேட்க, பின் முதலில் சிரார்த்தம் முடியட்டும் என்று உணவருந்தி...
மறுநாள் போட்டி... பந்தயம்... மண்டன மிஸ்ரர் வென்றால், சங்கரர் க்ருஹஸ்தராக வேண்டும்... சங்கரர் வென்றால் மண்டன மிஸ்ரர் துறவு மேற்கொள்ள வேண்டும்...
இருவர் கழுத்திலும் மாலை அணிவிக்கப்படும்... யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவர் தோற்றவர்...
நடுவராக சரசவாணி... (உபய பாரதி) - மண்டன மிஸ்ரர் மனைவி... 21 நாட்கள் வாதம்... மண்டன மிஸ்ரர் மாலை வாடிவிட...
வாக்தேவி... இருவரும் பிக்ஷை க்கு வாருங்கள் என்று அழைத்து முடிவை அறிவித்தாள்... பிக்ஷை சந்யாசிகளுக்கு உரியது... இருவரும் பிக்ஷைக்கு வரலாம் என்றதன் மூலம் மண்டன மிஸ்ரர் மாலை வாடி தோற்று துறவு மேற்கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தி...
சரசவாணி சத்ய லோகம் செல்வதாக கூற, சங்கரர் தடுத்து, வன துர்கா மந்திரம் ஜெபித்து அம்பிகையை தான் (சங்கரர்) விரும்பும் நேரமே சத்ய லோகம் செல்ல வேண்டும் என்று நிர்பந்தித்து பின் மகாராஷ்டிர தேசம் முழுவதும் சென்று அத்வைத சிந்தாதத்தை நிலை நாட்டினார் சங்கரர்...
சங்கரருக்கு ஒரு ஆசை துளிர் விட... அம்மா, சரஸ்வதி மாதா... நீ என்னோடு என் பூர்வ தேசம் வந்து என் பூமியில் ஞான தீபம் ஏற்றி, என் அன்னைக்கு (ஆர்யாம்பாள்) தரிசனம் கொடுத்து ஆட்கொள்ள வேண்டும் என்று சரசவாணி யிடம் விண்ணப்பிக்க...

உபயபாரதி...
சங்கரா, நான் உன்னோடு வருவேன்... நீ திரும்பி பார்க்காமல் முன் செல்ல வேண்டும்... எங்கே நீ நான் வருகிறேனா என்று நின்று திரும்பி பார்க்கிறாயோ அங்கேயே நான் நின்று நிலை பெறுவேன்...
சங்கரர், அம்பிகை காலில் இருந்த சலங்கையை நம்பி ஒப்புக்கொண்டு நடக்க...
இங்கே சில ரசமான கற்பனைகள்...பதிவு 4...
எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்
அன்று, மண்டன மிஸ்ரர் வீட்டில் திவசம். மண்டன மிஸ்ரர் க்ருஹஸ்தர்... சந்யாசிகளை நோக்குவதும் இல்லை... வீட்டின் கதவு தாழிடப்பட்டு, வியாசர் ப்ரம்மணராக எழுந்தருளி இருந்த நேரம்... சங்கரர் அருகே இருந்த தென்னை மரத்திடம் வந்து சாணான் என்ற மந்திரம் ஓத, தென்னை மரம் வளைந்து கொடுக்க, சங்கரர் மரத்தின் மீது ஏறி மண்டன மிஸ்ரர் வீட்டுக்கு உள்ளே குதிக்க... அந்த நேரம், விஷ்ணு இலையில் சந்யாசிகளை அமர வைக்க சாஸ்திரத்தில் இடம் உண்டு என்று வியாசர் அறிவிக்க, சங்கரர் தத்துவ விசார பிக்ஷை கேட்க, பின் முதலில் சிரார்த்தம் முடியட்டும் என்று உணவருந்தி...
மறுநாள் போட்டி... பந்தயம்... மண்டன மிஸ்ரர் வென்றால், சங்கரர் க்ருஹஸ்தராக வேண்டும்... சங்கரர் வென்றால் மண்டன மிஸ்ரர் துறவு மேற்கொள்ள வேண்டும்...
இருவர் கழுத்திலும் மாலை அணிவிக்கப்படும்... யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவர் தோற்றவர்...
நடுவராக சரசவாணி... (உபய பாரதி) - மண்டன மிஸ்ரர் மனைவி... 21 நாட்கள் வாதம்... மண்டன மிஸ்ரர் மாலை வாடிவிட...
வாக்தேவி... இருவரும் பிக்ஷை க்கு வாருங்கள் என்று அழைத்து முடிவை அறிவித்தாள்... பிக்ஷை சந்யாசிகளுக்கு உரியது... இருவரும் பிக்ஷைக்கு வரலாம் என்றதன் மூலம் மண்டன மிஸ்ரர் மாலை வாடி தோற்று துறவு மேற்கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தி...
சரசவாணி சத்ய லோகம் செல்வதாக கூற, சங்கரர் தடுத்து, வன துர்கா மந்திரம் ஜெபித்து அம்பிகையை தான் (சங்கரர்) விரும்பும் நேரமே சத்ய லோகம் செல்ல வேண்டும் என்று நிர்பந்தித்து பின் மகாராஷ்டிர தேசம் முழுவதும் சென்று அத்வைத சிந்தாதத்தை நிலை நாட்டினார் சங்கரர்...
சங்கரருக்கு ஒரு ஆசை துளிர் விட... அம்மா, சரஸ்வதி மாதா... நீ என்னோடு என் பூர்வ தேசம் வந்து என் பூமியில் ஞான தீபம் ஏற்றி, என் அன்னைக்கு (ஆர்யாம்பாள்) தரிசனம் கொடுத்து ஆட்கொள்ள வேண்டும் என்று சரசவாணி யிடம் விண்ணப்பிக்க...
உபயபாரதி...
சங்கரா, நான் உன்னோடு வருவேன்... நீ திரும்பி பார்க்காமல் முன் செல்ல வேண்டும்... எங்கே நீ நான் வருகிறேனா என்று நின்று திரும்பி பார்க்கிறாயோ அங்கேயே நான் நின்று நிலை பெறுவேன்...
சங்கரர், அம்பிகை காலில் இருந்த சலங்கையை நம்பி ஒப்புக்கொண்டு நடக்க...
இங்கே சில ரசமான கற்பனைகள்...பதிவு 4...
எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக