ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அன்னை ஸ்ரீ சாரதாம்பாள்... 1

ஸ்ரீ குருவுக்கு நமஸ்காரம்...

எனது தகப்பனார் வழி பாட்டி பெயர் சாரதாம்பாள்... இன்று நான் சமூகத்தில் ஓரளவு அந்தஸ்து கவுரவம் கூடி வாழவும், இது நாள் வரை நான் எழுதியுள்ள சில ஆன்மீக/ தத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு முக்கிய காரணம்... எனது பாட்டி சாரதாம்பாள்! அந்த பாட்டியின் பெயர் சொன்னாலே நினைவுக்கு வரும் தெய்வம் சிருங்கேரி ஸ்ரீ சாரதா மாதா.

இன்று வரை தரிசிக்க வாய்ப்பு கிட்டாத சிருங்கேரி அன்னையை பற்றி எழுத மிகவும் காலம் தாழ்த்தி வந்தேன்.... சில மாதங்கள் முன்பு அன்பு நண்பர் ஸ்ரீ CA Ramesh Ramamurthy சிருங்கேரி சென்ற போது, அவரிடம் அருகே மலை மீது இருக்கும் கூட்லி சாரதா அன்னையை தரிசித்து வரும்படி சொல்லி இருந்தேன் (நான் செவி வழி கேள்விப்பட்ட தகவல்).



ஆனால், ரமேஷ் க்கு அந்த வாய்ப்பு கை கூடவில்லை... ஆனாலும் அவர் அடி மனதில் அன்று அடியேன் விதைத்து விட்ட அந்த விதை, ரமேஷிடம் ஒரு தேடுதலை உருவாக்க, இன்று திடீரென கூட்லி சாரதா மாதா படங்களை எனக்கு அனுப்பி வைத்தார்... இன்று அக்ஷய திருதியை சுபதினமாக இருப்பதால், Ramani Bairava Athreya Gothram அவர்கள் ஆணைப்படி இந்த தொடர் துவக்கப்படுகிறது....

இது ஒரு தகவல் பதிவே... ஆராய்ச்சி முடிவோ, பிரமானமோ கிடையாது. சிந்தனை பலம், சுவை இருக்கும். இந்த தொடர் சிறப்பாக அமைய ஸ்ரீ சிருங்கேரி மற்றும் என் இஷ்ட காஞ்சி குரு பரம்பரை திருவடி சிந்தித்து எழுத துவங்குகிறேன்.

நன்றி :- சங்கரன் கிருஷ்ணமூர்த்தி முகநூலில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக