ஞாயிறு, 11 மார்ச், 2018

திருக்கடையூர்

திருக்கடையூர் பிரதான ஆலயத்தின் பின்புறம் ஆதி கோவில் ஒன்று உள்ளது. திருக்கடையூர் மயானம் என்ற பெயரில் உள்ள பழமையான ஆலயம்.

இந்த கோவிலும் மிகவும் சக்தி வாய்ந்த கோவில்... ஆனால் ஏகாந்த சேவை...

இந்த கோவில் மதில் பிரகாரம் உள்ளே ஒரு பிரசித்தி பெற்ற நீர் சுனை உள்ளது. பிரதான கோவில் அமிர்த கடேஸ்வர ஸ்வாமிக்கு இந்த ஆதி கோவில் நீர் சுனை தீர்த்தம் சிறப்பு வண்டியில் எடுத்துத் செல்வார்கள்...

பிரதான கோவிலின் மூலவருக்கு சுனை நீர் அபிஷேகிக்கப்படும்.... வேறு சிலா விக்ரஹங்கள் மீது சுனை நீர் ஊற்றப்படுமானால் கற்கள் பொரிந்து வெடிப்பு விடும்...

கார்த்திகை சோம வாரங்களில் சுனை நீர் சங்கு மூலம் மூலவருக்கு அபிஷேகிக்கப்பட்டு பக்தர்கள் பருகவும் கிடைக்கும்.... தீராத நோய்களை தீர்க்கும். மற்ற நாட்களில் சுனை நீர் பிரசாதம் விநியோகிக்க மாட்டார்கள்....




பிரதான கோவிலில் சுனை நீரை சேகரித்து வர ஒரு மாட்டு வண்டி / சிறப்பு பாத்திரம் தினமும் தயாராக இருக்கும்....


- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக