ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சாரதா மாதா 5

கடந்த தொடரில் நான் சொல்லி இருந்த ஒரு விஷயத்தை இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன்!

ஒரு தலைப்பை குறித்து எழுத நினைப்பது மட்டுமே நம்மால் முடியும். தன்னலம் இல்லாமல் பொது நலம் கருதி நாம் நம் பணியை தொடங்கினால், நம்மை ஊக்குவித்து நமக்குள் நல்ல உணர்வை ஊட்டி கைபிடித்து அழைத்துச் செல்வது பெரியவர்களின் ஆசியும், ஆண்டவன் கருணையும் மட்டுமே!

சிருங்கேரி குறித்த இந்த தொடரில் கூட்லி - நின்ற கோல சாரதா தேவி குறித்து மட்டும் எழுத நினைத்து அதிக பட்சம் 4 பக்கங்கள் மட்டுமே எழுத நினைத்தேன். ஆனால் ஸ்ரீ சாரதாம்பிகையின் கருணை வேறாக... புதிய புதிய சிந்தனைகள் நமக்கு உள்ளே உதிக்க, இங்கே வரி வடிவில்...

ஹ்ருஷ்ய ச்ருங்கர் தவம் செய்த இடம் என்றும் உரோம பாத மன்னன் காலம் குறித்து சொல்லி இருந்தேன்... இப்போது சிருங்கேரி தலம் / பழமை / பெருமை குறித்த ஒரு செய்தி....

தசரத சக்கரவர்த்திக்கு பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ ராமன் ஜனன காரண அஸ்வமேத/ புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வேண்டி, இதே ஹ்ருஷ்ய ச்ருங்கர் / ரோமபாத மன்னன் / மழைவளம் விவாதிக்கப்பட்டு புரோகிதர் அழைக்கப்பட்டார்.... சிருங்கேரி ராமாயண காலத்துக்கு - திரேதா யுகத்துக்கு முந்தைய காலம் தொட்டே பெருமை பழமை உள்ள தலம்...

இங்கேயே, கலைவாணி வசிக்க நினைத்த வரலாற்று தொகுப்பே இந்த தொடர்....

ஆதி சங்கரர் ஸ்தாபித்த 4 ஸ்ரீ மடங்கள் ஜ்யோதிர், த்வாரகா, பூரி, சிருங்கேரி பின், ஆதி சங்கரர் கடைசியாக நிறுவிய சர்வ் ஞான பீடம் காஞ்சி காம கோடி பீடம்.

ஆனால் இந்த காஞ்சி மடம் அங்கீகரிக்கப்படுவதில் நிறைய பிணக்குகள், சட்ட போராட்டங்கள் இருந்தன... இப்போதும் கொஞ்சம் ஆங்காங்கே ego இருக்கவே இருக்கு!

மற்ற மடங்கள் செல்வம் ஞானம் வைராக்கியம் திடசித்தம் கொடுக்கலாம்... ஆனால் ஆதி சங்கரருக்கே ஞானம் ஏணி அதன் காரணமான மோக்ஷம் காமத்தின் (ஆசையின்) கடை கோடியில் இங்கேயே கைவர, பகவத் பாதாள் கேதாரம் சென்று ஐக்கிய நிலை பெறுகிறார்...

காபாலிகம்/ இந்த பரந்த பாரத தேசத்தின் ஒருமைப்பாடு குறித்த ஒரு செய்தியும் on the pass பதிவாக 6இல்...

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக