செவ்வாய், 1 மே, 2018

சிருங்கேரி சாரதா மாதா 6

5... ஞானேந்திரியம், 5 கர்மேந்திரியம், 5 பூதம்... அது போலவே குருமார்களும் 5...

1. குரு -

ஒரு சீடனுக்கு தற்போது கல்வி கற்றுத் தரும் குரு.

2.பரம குரு -

ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்ட குரு - சீட மரபை நிலைநாட்டிய குரு. (எ. கா., ஆதி சங்கரர், அத்வைத தத்துவத்தைநிலைநாட்டிய பரம குரு).

3பராபர குரு (Parātpara-Guru) –

பல்வேறு தத்துவங்களைக் கொண்ட குரு – சீட மரபுகளை தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்தவர் மகாகுரு (எ.கா., வேத வியாசர்).



4.பரமேஷ்டி குரு’’’–

மோட்சத்தைவழங்கக்கூடிய மிக மிக உயர்ந்த குரு. (எ. கா., தட்சிணாமூர்த்தி அல்லது சிவன்)

மேலே சொன்ன 4 குருமார்களும் நிலம், நீர், நெருப்பு, காற்று போல உணர முடிந்த சகுண ப்ரம்மங்கள் அல்லது குரு என்று கூட சொல்லலாம்... முன்னே சொன்ன 4 ஸ்ரீ மடங்கள் என்றும் உருவகம் செய்யலாம்.

காணவோ, உணரவோ, கண்டு உரைக்க முடியாமல் அதிலேயே ஒன்றி ஆகாசமாக நிர்குணப்ரம்மமாக பர வெளியாக உள்ள குரு... அதுவே காமகோடி பீடம்.

திருச்சி திரு ஆனைக்கா வில் வைதீக பூஜை தான்... இங்கே வடக்கு விபூதி அக்ராஹாரத்தில் ஒரு காஞ்சி சங்கர மடம் ஒன்று உண்டு... இந்த ஸ்ரீ காரியாலயம்... அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு தாடங்க பிரதிஷ்டை செய்ய காஞ்சி/ சிருங்கேரி மடங்கள் இடையே நடந்த தலைமுறை வழக்குக்காக ஆசார்யாள் தங்கி இருக்கவே உருவாக்கப்பட்டது...

இங்கே அகிலாண்டேஸ்வரி உக்ரஹத்தை மட்டுப்படுத்த, அன்னையின் கண் பார்வையில் உயர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட முக்குருணி விநாயகர் பீடத்தை உற்று நோக்கிப் பாருங்கள்... அதில் ஆதி சங்கரருக்கு முன் 5 சீடர்கள் அமர்ந்து பாடம் கேட்கும் விதமாக சிற்ப அமைப்பு உண்டு...

சில உருவாக்கப்பட்ட ஆவணங்கள்... ஆதி சங்கரர் தமிழ்நாட்டுக்கு உள்ளே வந்ததே கிடையாது என்று சாட்சி சொல்கின்றன... ஆனால், காபாலிகர்களை ஒடுக்க சங்கரர் சென்னை திருவேற்காடுக்கும் வந்ததாக சான்றுகள் உள்ளன.

இந்த காபாலிகம் என்கிற வழிபாடு வட இந்தியாவில் பிரசித்தம்... 2500 ஆண்டுகள் முன்பே தென்னிந்தியாவில் அதுவும் இப்போதைய ராஜ்தானி எல்லைக்குள் இருந்தது என்றால், இந்த தேசம் ஒரே தேசம் தானே?!

இதை சுலபமாக புரிந்து கொள்ள... ஏசு கிறிஸ்து வின் தேச வாரி படங்களை ஒருமுறை கூகிள் உள்ளே சென்று பதிவு இறக்கி பாருங்கள்... சீன ஏசு, மங்கோலிய அல்லது கொரிய ஏசு வுடன் கூட ஒத்துப் போகமாட்டார்...

7 இல் மீண்டும் சிருங்கேரி க்கே போய்விடுவோம்...


Author :- sri shankaran krishnamurthy with face book

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக