நம் வாழ்க்கையில் நமது முன்னேற்றத்துக்கு தடையாக சில வகையான தோஷங்களும் பூர்வஜென்ம பாவங்களும் சேர்ந்து நம்மை முடக்கி போடுகின்றன. அவற்றில் எது நமக்கு தடையாக உள்ளது என்று நாம் கண்டறிந்து ஒருவேளை அதற்கு பரிகாரங்கள் இருந்தால் அதை செய்து கொண்டு மேலும் வளர்ச்சியடைவதற்கு நாம் முயற்சிப்பதில் தவறில்லை.
எல்லா தோஷங்களுக்கும் அல்லது பாவங்களுக்கும் பரிகாரம் உண்டா என்றால் இல்லை. கிரகங்கள் அனுமதிக்கின்ற விஷயங்களுக்கு மட்டுமே பரிகாரங்கள் உண்டு. பரிகாரங்கள் இல்லை என்றால் நாம் அந்த பலன்களை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும்.
சரி என்னென்ன தோஷங்கள் இருக்கின்றன ?? ப்ரசன்னத்தில் பலவிதமான தோஷங்கள் சொல்லப்பட்டாலும் கூட , சில தோஷங்களே நம்மை சோதிப்பதில் முக்கிய பங்கு வைக்கின்றன. அவை என்ன என்பதையும் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் சில பதிவுகளாக வரிசையாக பார்ப்போம்.
குலதெய்வ தோஷம் (அ) குலதெய்வ சாபம்
************************
நம்மை காக்க வேண்டிய குலதெய்வங்களே தோஷத்தை கொடுக்குமா அல்லது சாபத்தை கொடுக்குமா என்று கேட்டால், ஆம் என்பதே வேதனையான உண்மை.
இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்???
1.பூர்விக இடத்தில் வசிக்க முடியாமல் போவது.
2. ஒருவருக்கு எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லை என்றாலும் கூட பூர்வீக சொத்துக்கள் முழுவதையும் தனக்கு ஏற்பட்ட கடனால் இழந்து விடுவது.
3. ஒருவருக்கு தொழிலில் ஞானம் அதிகமாக இருந்தாலும் கூட அந்த ஞானம் அடுத்தவருக்கு பயன்படுகிறது . ஆனால் தான் தொழில் செய்தால் அதில் நஷ்டம் ஏற்படுகிறது. கடன் ஏற்படுகிறது. இதுவும் குலதெய்வ தோஷத்தால் ஏற்படுகிற விளைவே.
4. பூர்விக சொத்துக்கள் நிறைய இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் போவது
5. பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் வியாதிகள், மனக்குழப்பங்கள், முடிவே தெரியாத பிரச்சினைகள், தனக்கு புதையல் கிடைக்கும் என்பது போன்ற பிரம்மை அல்லது புதையல் தேடி அலைவது.
சுருக்கமாக சொல்லப்போனால் பூர்விக இடம், சொத்து, பரம்பரை நோய்கள், பரம்பரையாக சுபகாரியத் தடை இவை அனைத்துமே குலதெய்வ குற்றங்களால் ஏற்படுவது தான். இவற்றை நாம் கண்டுபிடித்து முறையான வழிபாடுகள் செய்து அல்லது பரிகாரங்கள் செய்து நீக்கிக் கொண்டு, மேற்படி குற்றங்களில் இருந்து மொத்தமாக விடுதல் அடையலாம்.
ஹரி ஓம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக