வியாழன், 29 செப்டம்பர், 2022

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 6


பிரேத சாபம் அல்லது பிரேத தோஷம்
----------------------------------

ஒருவர் இறப்பதற்கு காரணமான சொத்துக்களை பெற்றிருந்தால் பிரேத தோஷம். ஒருவர் இறப்பதற்கு காரணமாக இருந்தாலும் பிரேத தோஷம் தான். 

 மரணம் அடைந்துவிட்டால் இறந்த நபருக்கு இறுதி சடங்கை சரிவர நடத்தாமல் விட்டு விட்டாலும், வருடாந்திர திதிகள் சரிவர தராமல் போனாலும் அவரது ஆத்மா தனது அவஸ்தையை ஏதேனும் ஒரு வடிவில் வெளிப்படுத்தும். இது பிரேத தோஷம் ஏற்படுவதற்கு மிக மிக முக்கிய காரணமாகவும் இருக்கும். 

அவர் இறந்து விட்டால் அவரை வைத்துக் கொண்டு அவரைப் பற்றி தவறாக பேசுவதும் பிரேததோஷ வகையில் தான் சேரும். சிலர் இறுதி ஊர்வலத்திலேயே மிகப் பயங்கரமாக இறந்தவரை விமர்சித்துக் கொண்டே போவார்கள் இது மிக மிக தவறு. எவ்வளவு அவசியமானாலும் அதை செய்யவே கூடாது. 

தோஷம் தரும் அல்லது சாபம் தரும் பிரேதங்கள் என்று மொத்தம் பல விதமான பிரேத தோஷங்கள் உள்ளன. குழந்தையின் பிரேதம் , மத்திம வயதுள்ள பிரேதம், முதிர்ந்த வயதுள்ள பிரேதம் என்ற மூன்று வகையாக பிரிக்கிறார்கள். 
இதில் மத்திய வயது பிரேத சாபத்துக்கு கோபம் அதிகம். சாபம் கொடுக்கும் சக்தியும் அதிகம் . பலி வாங்கும் உணர்ச்சியும் அதிகம் இருக்கும். வாழ துடிக்கும் ஒரு இளம் வயது உள்ள உயிர் என்பதால் அந்த சாபம் மிக உக்கிரமாக இருக்கும். 

தெய்வீக சக்திகளை அவமரியாதை செய்வது, தெய்வத்துக்கு கடன் படுவது, தெய்வத்தை ஏமாற்றுவது, பூர்வீக வழி வரும் எதிரிகள் தொந்தரவு போன்ற பல விதங்களிலும் பிரேத தோஷம் வெளிப்படத் தொடங்கும். உங்களுக்கே தெரியாமல் இத்தகைய செயல்களை நீங்கள் செய்வீர்கள். அல்லது தானே நடக்கும்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பிரேத சாபத்தால் அல்லது தோஷத்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்??
-------------------------------

1. பரம்பரையாக தொடரும் எதிரிகள் வகை தொந்தரவு.

2. பிரதசாபத்தால் தொடர்ச்சியாக வயிற்று வலி, தொடர்ச்சியான ஒற்றை தலைவலி, மிகப் பயந்த சுபாவம், உடலில் அதிகமான வெப்பம், அதிக தாகம், அதிக பசி போன்றவை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

Saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக