வியாழன், 29 செப்டம்பர், 2022

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 4

 

மாதுர் தோஷம் (அல்லது) மாத்ரு தோஷம் 
**********************

மாதுர் தோஷத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்???
______________________________

1. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் . 

2. காரியத்தடை என்பது எப்போதும் இருக்கும்.  தடையில்லாமல் எந்த ஒரு காரியமும் நடப்பதில்லை என்கிற நிலை ஏற்படும்.

3. யாரை கண்டு பயப்பட கூடாதோ அவரை கண்டு பயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

 4. எதைக் கண்டு பயப்பட வேண்டுமோ அதை கண்டு பயப்படாமல் இருப்பது. 

5. தொடரும் மன அழுத்தம்,  மன இறுக்கமாக ஒரு கட்டத்தில் மாறிவிடும். மனநோய்,  மன சம்பந்தமான என்ன பிரச்சனை வந்தாலும் சரி,  அது மாத்ரு தோஷத்தால் ஏற்படக்கூடியது தான். 

6.காக்கா வலிப்பு தொடர்பான நோய்கள்

7.மற்றவர் அருவருக்கும் எந்த விதமான நோயையும் மாத்ரு சாபமே தருகிறது.

8. விரும்ப வேண்டிய உறவின் மேல் விருப்பம் இல்லாமல் இருப்பதும் மாத்ரு தோஷமே.

9.மற்றவர் பொருள் மீது எப்போதும் விருப்பமாக இருப்பதும் மாத்ரு தோஷம் தான். 
10. எதையாவது தொலைத்து விட்டு அதற்காக அழுதால் மாத்திர தோஷம் உள்ளது. அழவில்லை என்றால் மாத்திரை தோஷம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். அழக்கூடிய அளவுக்கு முக்கியமான ஏதாவது ஒன்று தொலைந்து போனாலே மாத்ரு தோஷம் தான். 

இப்படியான தொந்தரவுகள் இருந்தால் அந்த தோஷம் இருப்பதை கண்டுபிடித்து,  அதை நிவர்த்தி செய்து கொண்டு சந்தோஷமாக வாழ பகவானை வேண்டிக்கொள்கிறேன்.

-Saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக