பித்ரு தோஷம் அல்லது பிதுர் தோஷம்
_____________________________
பித்ரு தோஷம் என்ன செய்யும்???
1. திருமணமே இல்லாத நிலையை ஏற்படுத்தும்.
2. தொடரும் ஏழ்மை.
3. நிறைய உழைத்தும் வருமானம் இல்லாமல் இருப்பது.
4. வேலையில் நல்ல பேர் எடுக்கவே முடியாத சூழ்நிலை.
5. குடும்பத்தில் வளர்ச்சியில்மை.
6. ஆசைகள் நிறைவேறாமலேயே போய்விடுவது.
7. ஒரு சம்பவம் நடக்க வேண்டிய காலத்தில் நடக்காமல் இருப்பது.
8. ஏதோ ஒன்றை இழந்ததாக கருதி வெறுமையாக தன் வாழ்வை வாழ்வது.
9. குறைந்தது மூன்று தலைமுறையாக தொடரும் ஏழ்மை, வருமானமின்மை, குடும்ப வளர்ச்சியின்மை, போன்ற கஷ்டங்கள்.
10. எல்லாவற்றிலும் ஆசை இருந்தும் எதுவும் கிடைக்காததால் ஏற்படுகின்ற வெறுமை நிலை. இதை துறவு நிலை என்றும் சொல்லலாம். ஆனால் துறவியாக போய் விட மாட்டார்கள்.
11. பல தலைமுறைகளாக தொடரும் மாதுர் சாபம் ஒரு நேரத்தில் பித்ரு சாபமாக மாறுகிறது.
*****
பித்ருக்களில் , நாம் எவருடைய தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் ??
--------------------
எந்த பாட்டனாரின் பெயர் நமக்கு கடைசியாக தெரிகிறதோ, அவருடைய தோஷத்தை தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஜோதிட குருமார்கள் சொல்கிறார்கள்.
உதாரணமாக - அவருடைய அப்பா, தாத்தா, பாட்டன் இவர்கள் பெயர் தெரிகிறது என்றால், இந்தப் பாட்டன் தான் எல்லோருக்கும் முந்தியவர். இவருடைய தோஷத்தை தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒருவருக்கு தனது தகப்பன் பாட்டன் முப்பாட்டன் முப்பாட்டனின் தந்தை என்று எல்லோருடைய பெயரும் தெரிந்திருந்தால், இவருக்கு இவர்கள் எல்லோரும் முந்தையவர் , மேலே சொல்லப்பட்ட முப்பாட்டனின் தந்தை. அவருடைய தோஷத்தை தான் இவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
ஒரு பரம்பரையில் நிறைய பெயர்கள் இருந்தும், மற்றவர் அனைவரும் நன்றாக வாழ்ந்திருந்தும் கூட ஒருவர் மட்டுமே கஷ்டப்படுகிறாரே அது ஏன் ??
---------------------
நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால், அந்த ஒருவர் மட்டுமே பூர்வீகத்தின் மீது பெருமையும் மிகப் பற்றும் வைத்தவராக இருப்பார் என்கிறார்கள். அவரைத்தான் தோஷம் தேர்வு செய்யும் என்றும் சொல்கிறார்கள்.
****
பிரசன்னத்தில் பரிகாரம் இருப்பதாக காட்டினால், அந்தப் பரிகாரத்தை செய்து கொண்டு இழந்த அத்தனையும் அல்லது கிடைக்க வேண்டிய அத்தனையும் பெற்று நிம்மதியாக வாழ முடியும்.
பித்ரு தேவோ பவ
-Saliya Maharishi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக