குரு சாபம்
------------
குரு சாபத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்??
_______________________________
1. இந்த தோஷம் பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கிறது . அல்லது குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் தருகிறது.
2. தனது குழந்தைகளுக்கு நல்ல அறிவு இருந்தும் அதை பயன்படுத்தாமல் தடம் மாறுவதும், காலம் இருந்தும் பயன்படுத்திக் கொள்ளாத நிலையையும் குரு சாபம் தருகிறது.
3. வாரிசுகள் ஏற்படாது. வாரிசுகள் ஏற்பட்டாலும் அவர்களின் பிறப்பால் வருத்தமே ஏற்படும்.
4. சிறுவயதில் தவறுகள் செய்து சிறை செல்வது, குழந்தைகள் படிக்க முடியாமல் சிறு வயதில் ஊரை விட்டு வெளியேறுதல் அல்லது வேலைக்கு போதல், வாரிசுகளின் வாழ்க்கை காதல் என்ற பெயரில் தடம் மாறி விடுதல். இது எல்லாமே குரு சாபத்தைத் தான் காட்டுகிறது
5. பலமுறை குழந்தைகளுக்காக வைத்தியம் பார்த்தும் கூட பலன் அளிக்காமல் போய்விடும். குழந்தை பெறக்கூடிய காலத்தில் தள்ளிப் போட்டுவிட்டு, பிறகு காலம் கடந்து தவம் இருப்பது. நீண்ட நாள் காரணம் இல்லாமல் குழந்தையை பிரிந்து இருப்பது போன்ற கடுமையான புத்திர தோஷங்களை குரு சாபம் தருகிறது.
6. நாம் முன்பு பார்த்த குலதெய்வ சாபத்தை விட, குரு சாபம் மிக மிக பொல்லாதது. குருசாபத்தை விட குரு பத்தினி சாபம் அதைவிட பொல்லாததாக இருக்கும்.
7. சாபத்துக்கு காரணமான குரு இறந்து போய்விட்டால் தோஷம் உள்ளவரின் பேரன் பேத்திகளின் காலம் வரை அந்த சாபம் இருந்தே தீரும். பேரன் பேத்திகளின் காலத்தில் பரிகாரங்கள் செய்து தேசத்தை நீக்கிக் கொள்ள முடியும். தங்கள் குழந்தைகளுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் நீங்காது. ஆனால் பேரன் பேத்திகளுக்கு பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கும்.
************************************
சரி, என்ன பரிகாரம் செய்யலாம் ??
""""""""""""""""""""""""""""""""""""""""""'''''''''"""""""""""
🌺 குருவை கண்டு வணங்கி தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு அன்னம், உடை, ஆபரணங்கள் தானம் கொடுக்க வேண்டும்.
💐ஒரு குருவின் சாபத்தை இன்னொரு குருவால் நீக்க முடியாது ஆனால் குறைக்க முடியும். இதைப் புரிந்து கொண்டு தங்களது செயல்களை மேற்கொள்ளவும். 🙏🏻🙏🏻🙏🏻
குருவே சரணம்
-Saliya Maharishi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக