வியாழன், 29 செப்டம்பர், 2022

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 2

 

சர்ப்ப தோஷம்
******************

        சர்ப்ப தோஷம் பெரும்பாலும் ராகுவால் தான் ஏற்படும்.  கேதுவால் ஏற்படுவதில்லை. 

சர்ப்ப தோஷத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?? ஒருவருக்கு சர்ப்ப தோஷம் உள்ளது என்பதை எப்படி அறிவது??? 
---------------------------------

1. புத்திர பேறு அடைவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

2. குழந்தை பிறந்தும் கூட அதனால் திருப்தி இல்லாத மனக்கஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

3. தன்னுடைய குழந்தைகளால் எத்தகைய அவமானம் ஏற்பட்டாலும் கூட அது சர்ப்ப தோஷத்தால் மட்டுமே ஏற்படும்.

4. குழந்தைகளால் என்ன மனக்கவலை இருந்தாலும் சரி அது சர்ப்ப தோஷத்தால் ஏற்படுவது தான். 

 5. தனிப்பட்ட சுகங்களையும் குறைக்கும்.

சுருக்கமாக சொல்லப்போனால் சர்ப்ப தோஷம் என்பது பெரும்பாலும் குழந்தைகள் வழியான தோஷமாகவே இருக்கும். 

           சர்ப்ப தோஷத்தில் இன்னொரு வகை உள்ளது.  அது உத்தம சர்ப்பதோஷம் என்று அழைக்கப்படும். வணங்கத்தக்க சர்ப்பங்களையும்,  வழிகாட்டும் சர்ப்பங்களையும் உத்தம சர்ப்பம் என்கிறோம்.  உத்தம சர்ப்பங்களுக்கு இழைத்த தீங்கை உத்தம சர்ப்பதோஷம் என்கிறோம். 
உத்தம சர்ப்ப தோஷம் இருந்தால் அப்படி ஒரு தோஷம் இருப்பதாகவே  தெரியாது.  தொடர்ந்து நன்மைகளே நடந்து கொண்டிருக்கும் . நல்ல குழந்தைகள் ஏற்படும்.  இப்படிப்பட்டவர்களுக்கு பிரசன்னம் பார்க்கும்போது சர்ப்ப தோஷம் இருக்கும் . ஆனால் தோஷம் செயல்படாது. மிகச் சில நேரங்களில் இப்படியும் ஏற்பட்டு விடுவதுண்டு. 

Saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக