ஞாயிறு, 1 அக்டோபர், 2017

கர்மவினை

"அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பது உன்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்"

இருவினை ஒப்பு மலபரிபாகம் என்பது எந்த சிததாந்தத்தை எடுத்துகொண்டாலும் ஒரு பொது விதி...

மனிதனின் நல்வினை தீவினை இரண்டும் சமமாக இருந்தால் மட்டுமே பரிபாகம் அடைய முடியும்... தீவினை அதிகமாக இருந்தால் நரகம் என்னும் மீண்டும் இந்த உலக வாழ்கையில் சிக்கி சின்னா பின்னம் ஆகுதல்...

நல்வினை அதிகமாக இருப்பின் சொர்க்க போக வாழ்கை...

நாம், என்ன நினைக்கிறோம்... எல்லாம் வினைப்பயன் படியே நடக்கும்... நம்மால் முன் செய்த வினைக்கு ஈடாய் இப்போது கஷ்டங்களை அனுபவிப்பதாக எண்ணிக்கொண்டு பேதைகளாக அறிவற்றவர்களாக உலாவிக்கொண்டு இருக்கிறோம்...

எனவே நாம் உய்வினை அதாவது இந்த ஆத்மா சீர் பெற்று வாழ வழிகளை நாடாது இருப்பது நமக்கு ஊனம்..

இறைவன் நமக்கு இந்த கைகளை எதற்காக அருளினான் தெரியுமா? தானம் கொடுப்பதும் பெறுவதும் கை... ஹோமத்திலே - பூஜையிலே - உற்பத்தியிலே கையின்றி அமையாது கர்மம்.. (நீரின்றி அமையாது உலகு போல)

ஆக, சரியை கிரியை போன்ற யோகங்களை நமது கைகளால் செய்து நமது எம்பிரான் திருவடிகளை போற்றி நாம் சிவனடியவர்களாக நம்மை அடையாளப் படுத்தி கொண்டுவிட்டால் -

செய்வினை வந்து எமை தீண்டப்பெறா...

அவ்வினை... இவ்வினை... இப்போ செய்வினை...ஒரே குழப்பமா இருக்கேடா அமாவாச...

இது கீதையின் சாரம்.. கர்ம யோகம்...

கண்ணன் சொல்படி பலனை எதிர்பாராமல் அர்ஜுனன் கர்மத்தில் ஈடுபடுகிறான்... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று...

அது போல நாம் இறைவன் அடியவர்களாக நம்மை உணர்ந்து செய்யும் செயல்கள் செய்யும் வினைகள் - அது நல்வினையோ அல்லது தீவினையோ... அவை நம்மை வந்த வரு தொல் வினையாக ஒருபோதும் வருத்தாது...

அதாவது இறைவன் பொருட்டு செய்யும் வினை எதுவும் இந்த ஆத்மாவை சேராது... நல்வினை தீவினை ஒப்பி மலபரிபாகம் பெற நாம் காத்திருக்க வேண்டாம்... நம்மை ஆட்கொள்ள வேண்டியது திருநீலகண்டமே...

அதாவது இறைவன் நம்மை தன்னுள்ளே ஆகுதியாக ஏற்றுவிட்டால்... நாம் அவன் கழுத்திலே இருக்கும் ultra violet treatment plant மூலமாக சுத்தீகரிக்கப்பட்டு அவனோடு சாயுஜ்யம் அடைந்து விடுவோம்...


எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக