பண் : செந்துருத்தி
விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை
கொத்தை யாக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே
.
அடிகளே, நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில், யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர் ; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழி யொன் றில்லை ; பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத்தர உடன்படாவிடின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
====
சுந்தரர் பெருமானுக்கும் நம் சிவபெருமானுக்கும் எப்போதுமே நெருங்கிய தோழமை தொடர்பு உண்டு... குறிப்பாக - காஞ்சியிலே சுந்தரருக்கு ஒரு கண்ணை அருளிய இறைவன் மற்றும் ஒரு கண்ணிலும் ஒளி அருளியது இந்த பதிகத்துக்கு பிறகே...
இங்கே, சிவில் சட்டங்களை தெளிவாக சொல்லி இருக்கிறார் பாருங்கள்... விற்றுக்கொள்வீர்... ஒற்றியல்ளேன்.. அதாவது சுந்தரர் ஆகிய தாம் பெந்தகத்துக்கு - குத்தகைக்கு - அனுபவிக்க மட்டும் உரிய அனுபவ பாத்யதை பட்ட சொத்தாக அல்ல... முற்றிலுமாக தானே சிவபெருமானிடம் விரும்பி எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் சுய நினைவுடன் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் ஆட்பட்டவன்.. எனவே சுந்தரனாகிய தன்னால் ஈசனாகிய தங்களுக்கு பயன் இல்லை என்றால், என்னை வேறு யாருக்காவது விற்றுக்கொள்ளுங்கள்... அதை விட்டு விட்டு வேணாம் என்னும் பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று இப்படி கண்ணை பறித்து - கஷ்டம் கொடுத்து சோதிக்காதீங்க... என்று புலம்புகிறார்...
என்னய்யா பெரிய தப்பு பண்ணிட்டேன்... செய்யாத குற்றத்துக்காக என் கண்ணை பறித்து... அதுவாவது பரவாயில்லை... இப்போ ஒற்றை கண்ணன் ஆக ஆக்கி அலைய விட்டுவிட்டாய்?
அது என்ன ரெண்டு கண்ணையும் பரித்துவிட்டீர்... அங்கே அங்கே கைலாசத்தில் அகக்கண் ஐ பறித்தீர்... இங்கே பூலோகத்தில் புறக்கண்ணை யும் பறித்து என்ன விளையாட்டு இது?
இங்கே, நாம் கவனிக்க வேண்டிய விஷயம்...
சுந்தரர் தன் பூர்வ ஜென்மத்தை உணர்ந்து இருந்தார்... காரணம் - இந்த வரிகளில் தானே வந்து ஆட்பட்டதாக சொல்கிறார்... திருமண மேடையில் தாலி கட்ட இருந்த நேரத்தில் ஈசன் கிழவனாக சென்று ஒரு ஓலையை காட்டி இவரை ஆட்கொண்டார்.. அதன் பின் பித்தா பிறைசூடி பதிகம் பாடிய பொழுது தன்னை உணர்த்தி பூர்வ ஜென்மத்தை நினைவு படுத்துகிறார்...
சுந்தரருக்கு இரு மனைவிகள்.. ஒருவர் பரவை நாச்சியார்.. மற்றொருவர் சங்கிலி நாச்சியார்... ஈசன் சுந்தரரிடம் பறித்தது இரண்டு கண்களை... இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது...
திருக்கைலாய மலையில் ஈசனுக்காக நந்தவனத்தில் பூக்களை பறித்து கொண்டு வரும் போது அங்கே இருந்த இரண்டு கந்தர்வ பெண்களை சுந்தரரின் கண்கள் கண்டு மையல் கொண்டு அதன் காரணமாக ஏற்பட்டதுதானே இந்த பிறப்பே...
ஈசனை தவிர வேறு நினைவே இல்லாமல் இருந்த சுந்தரர் மனதில் இரண்டு பெண்களை கண்டு காட்டிக்கொடுத்தது இந்த இரண்டு கண்கள் தானே... அதற்காகவே கண்களை பறித்தார்...
இங்கே, மீண்டும்... ஒரு கீதை வரி...
என்கண் கொண்டீர்.. நீரே பழிபட்டீர்... அன்று ஏன் கண்களுக்கு அந்த பெண்களை காட்டி என்னை ஆசை கொள்ள வைத்ததும் நீரே... காரணம் ஒரு நொடி என் மனதை விட்டு நீர் (ஈசன்) உங்கள் ஜோலியை பார்க்க போய்விட்டீர்... அதற்க்கு தண்டனையாக இந்த பிறவியை கொடுத்து... அவர்களோடு இல்லறம் நடத்திவிட்டு வா என்று உத்தரவிட்டதும் அந்த ஈசனே... பின் போன ஜென்மத்தில் செய்த தவறுக்காக விடாமல் வஞ்சம் வைத்து இந்த ஜென்மத்தில் கண்ணை பறித்ததும் ஈசனே... அதனால் இங்கே ஆட்டுவித்தவனே (இறைவனே) அந்த பழிக்கு உரியவன் ... நீ ... ஆட்டுவித்தாய்... நான் ஆடினேன்... இப்போது ... தண்டனை மட்டும் எனக்கு என்று நீரே பழிபட்டீர்....
சரி, ஒரு கண்ணை காஞ்சியிலே கொடுத்தே... இப்போ என்ன... இன்னொரு கண்ணு தரமாட்டியா? சரி அதையும் நீயே வச்சி வாழு...
கண்ணு போனாலும் நம் சுந்தரருக்கு பண் அந்த பண்ணுக்கு உள்ளே குசும்பு மட்டும் குறையவே இல்லை... இதுதான் நட்புக்கே உரிய உரிமை...
(திருவாருர் அருகே இருக்கும் என்கண் என்ற தலம்.. இங்கே இருக்கும் முருகன்... மிகவும் விசேஷமானவர்.... எட்டுக்குடி, என்கண் மற்றும் பொரவச்சேரி தரிசித்து இன்புறத்தக்க திருத்தலங்கள்)
எழுத்து :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக