வெள்ளி, 27 அக்டோபர், 2017

ரத்த நாளங்கள்

இந்த வரியை நாம் அடிக்கடி சிலநாட்கள் முன்பு விளம்பரமாக நதி இணைப்பு என்று ரஜினி சொல்ல கேட்டோம்....

இந்த தேசத்தில் நதிகள் ரத்த நாளங்களாகவும் ஆங்காங்கே உள்ள /இருந்த நீர் நிலைகள் recharge point ஆக விஞ்ஞானம்/ மெய்ஞ்ஞானம் கலந்து அமைக்கப்பட்டு உள்ளன....

கோவில் உள்ளே திருக்குளம்/தீர்த்த கிணறு இதே முறையில்....

இன்று அநேகமாக 90% கோவில்களுக்கு கருவறை உள்ளே பைப்பை மூலம் தண்ணீர்... காரணம் நீர் நிலை ஆக்கிரமிப்பு அழிப்பு அதனால் நிலத்தடி நீர்மட்டம் தேய்ந்து இந்த நிலை...

ஏற்கனவே என்னுடைய பதிவில் கோவில் தீர்த்தவாரி - water resources recharge குறித்து எழுதி இருந்தேன்....

இப்போது நாட்டின் நீர்நிலைகள் அமைவிடம் குறித்து இங்கே எழுத/புரிய அமைவிடம் location/ நீர்மட்டம் water லெவல்/ அளவுsize (புரி்தலுக்காக ஏரி குளம் கிணறு) அவற்றின் முறையான பராமரிப்பு எவ்வளவு இனிமையான பயன்பாட்டை தரும் என்பதை விளக்கும் காணொளிகள் இணைப்பு.

காவேரி யில் 1 பிடி மணல் கூட அள்ளாமல் ஆக்ராமிப்பு இல்லாது கோரை/நாணல் நீக்கி கழிவுகளை கொட்டாமல் இருப்போமானால் ஆண்டுக்கு 150 TMC தண்ணீர் கிடைத்தால் வருடம் 365 நாளும் போதுமான 5000 கனஅடி தண்ணீர் ஓடவிடலாம் என்றே நம்புகிறேன்....



தண்ணீர் தண்ணீர் என்று மக்கள் போராடுவது புது மணல் உருட்டி வர /குவாரி அமைத்து கொள்ளை அடிக்க/நாம் கலக்கும் கழிவுகளை அடித்துச் செல்ல.... கோரை நாணல் அகற்ற தூர் வார என்று அரசு பணத்தை கொள்ளை அடிக்கவே!

எழுதியவர் திரு sankaran Krishna Murthy (எவர்கிங் ஏகாம்பரம்) அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தமிழ் கடவுள் முருகன்

மதுரை தமிழ் சங்கத்தில் தலைமை கவிஞனாக அகஸ்தியர் முன்பாக இருந்தாராம்...

இப்போ கூட முப்பாட்டன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்....

சரி,

முருகன், ஜாதி கலப்பு விவாகங்களை ஆதரித்தார்.... குறவள்ளியை மணந்தார்.... இன்னொரு பக்கம் தெய்வானை என்னும் தேவகன்னியை திருமால் மகளையும் கல்யாணம் கட்டிக்கிட்டார்.....

சிவன் காடுடைய சுடலை பொடி பூசி.... 4ஆம் வர்ணம்... திருமால் க்ஷத்ரியன் அல்லது இடையன் இரண்டு அல்லது மூன்றாம் வர்ணம்.....

4ம் வர்ணத்து மகன் குறத்தியை மனந்தது புரட்சி இல்லைதானே.....

ஆனால் 2 அல்லது 3 ஆம் வர்ணத்து மகளை மணந்தது தர்மபுரி, நாமக்கல், உடுமலைப்பேட்டை போல ....

நன்றி.....

கவுரவ கொலைகள் அப்போது இல்லை.....

நீரிடு நெற்றியும் நீண்ட புருவமும்..... வரி 34 ப்ரம்மணர் அல்லாத பாலன் தேவராயன் எழுதி இருக்கார்......

41 வது வரி..... முப்புரி நூலும் முத்தணி மார்பும்.....

தை பூசம், கார்த்திகை தீபம் முருகனின் ப்ரிய நக்ஷத்திரங்கள் கூட தமிழ்நாட்டு விழாக்களே....

வடநாட்டு கடவுளர்களுக்கு பிறந்த நாள் திதியை வைத்து... கோகுலாஷ்டமி, ராம நவமி, விநாயகர் சதுர்த்தி.... தமிழ் கடவுள் முருகனுக்கு birth day நக்ஷத்திரம் வைத்து...
கேரளா நிகழ்வுகள் கூட திருவோணம் வச்சித்தான் (திராவிட நக்ஷத்திரம் வழக்கம்) ஆனால் கேரளா / தமிழ்நாட்டில் பிறந்த பிராம்மண சங்கரர் ராமானுஜர் ஜெயந்தி பஞ்சமி திதியை வச்சி... (ஆரிய திதி வழக்கப்படி)

திராவிட திசையில் (தென் திசையில்) அனைத்து நாயன்மார் / ஆழ்வார் மோக்ஷம் கூட நக்ஷத்திரப் படி....

திதியோ, நக்ஷத்திரமோ .... பூமி, கோள்கள் ஆகியவற்றின் சுற்றுக்களை வைத்து... குழப்பம் இல்லாமல் சரியாக கணிக்கப்பட்டு இருக்கிறது....

27 நக்ஷத்திரங்கள்
12 ராசிகள்
9 கோள்கள் என ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத எண்களாக இருந்தாலும் மாத பௌர்ணமிகள் /நக்ஷத்திரங்கள் எப்போதாவது மாறி இருக்கிறதா?! கோகுலாஷ்டமி, ராம நவமி திதிகள் கூட ரோகிணி/ புனர்பூச நக்ஷத்திரங்களை ஒட்டியே வருகிறது...

மன்னர்கள் ஜூலியர் சீசர், அகஸ்டஸ் (#ஆகத்து) க்கு முன்பு மாற்று மார்கத்தினர்களிடம் மாதங்கள் கூட மனித கர்ப காலமான 10தான்...

என்னோட, டவுட்டு..... பூணூல் ப்ரம்மணருக்கு மட்டுமா? எல்லா வர்ணத்தவருக்கும் உண்டா?

வட நாட்டு கைலாச ஈசன் மகன் முருகன் வரி 31 குண்டலியாம் சிவ குகன் ஆரிய கடவுளா? தமிழ் திராவிட கடவுளா?



பின் குறிப்பு...... புரிய வேண்டி உருவக உதாரண அடையாள புராணங்களில் எனக்கு குழப்பம் எதுவும் இல்லை..... ஆரிய திராவிட தமிழ் தேசிய பகுத்தறிவு ஜாதியவாதிகள் புரிதலுக்காக.....


எழுதியவர் திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்

வியாழன், 5 அக்டோபர், 2017

ஆன்றோர் சிந்தனை

அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியறிகை தெரியாகாண் சாழலோ.
தோழியே
அருந்தவம் செய்த சனகாதி முனிவர்க்குக் கல்லால மரத்தின் கீழிருந்து அறம் முதலிய நான்கு வேதங்களையும் அவர்கட்கு உரைத்தருளிய காரணத்தை எனக்குத் தெளிவாகக் கூறுவாயாக!


தவமுடைய அவர்களுக்கு அறம் முதலிய நாற்பொருளையும் அந்நாளில் சொல்லியருளாவிடில் அந்தச் சனகாதியர்க்கு உலகின் இயல்பு தெரியாது போய்விடும் எனடபதனை அறிவாயாக.
---


ஆன்றோர் சிந்தனையில் இதுவரை மூவர் தேவாரத்தில் இருந்து ஒரு சில பாடல்களை பார்த்தோம்.. இன்று திருவாசகம் திருச்சாழல்.
நேரடி உரை பொருள் மேலே கொடுக்கப்பட்டு விட்டது... நாம், மாறுபட்டு சிந்திப்போம்...
---
அருந்தவருக் காலினகீழ் அறமுதலா நான்கனையும்
அறிய தவம் செய்தவர்களுக்கு பிரம்மச்சர்யம் கிருஹஸ்தாச்ரமம் வானப் பிரஸ்தம் சன்யாசம் எனப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய அறம் பொருள் இன்பம் வீடு போன்ற நல்லறங்கள் ஆகிய நான்கும் அவர்கள் காலின் கீழ் அமைந்து இருக்கும்...
அல்லது
அறிய தவம் செய்தவர்க்கு செம்மையான வேதங்கள் நான்கும் அவர்கள் ஆணையின் கீழ் இருக்கும்...
அல்லது..
கல் ஆல் மரத்தின் கீழ் ஞான அமுதம் அருந்த வருபவர்களுக்கு மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கும் ஒடுங்கிவிடும்...
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ ...
சனகாதி முனிவர் நால்வரும் தங்கள் ஆன்மாவை இறைவனிடம் ஏற்கனவே ஒடுக்கி விட்டார்கள்... ஆனாலும் இன்னமும் கூட தென்முகக் கடவுள் அவர்களுக்கு உபதேசித்தபடியே இருந்து கொண்டு இருக்கிறார்... அவர்களுக்கே சொல்லிகொடுத்து கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்? அவர்களுக்குத்தான் ஞானம் உபதேசிக்கப்பட்டு விட்டதே... இனி இந்த ஈசன் எனக்கு அந்த உபதேசத்தை எடுத்து இயம்பினால் என்ன? தோழியே, நீதான் கொஞ்சம் எனக்காக சென்று அவனிடம் சொல்..
இங்கே அந்த தோழியாக அதாவது ஒரு இடைப்பட்ட துணையாக மணிவாசகருக்கு கிடைத்து இருப்பது அந்த இறைவனே... எனவே அந்த ஈசனாக சொல்ல வேண்டிய பதிலை அந்த தோழி வடிவில் இருக்கும் ஈசன் சொல்கிறார்...
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
அறிய தவம் செய்தவர்களுக்கு அறம் முதலான நான்கு வேதங்களை நான் (ஈசன்) அன்று உபதேசிக்காமல் இருந்து இருந்தால், அந்த சனகாதியருக்கு உலகத்தின் இயல்பு தெரியாமலேயே இருந்து இருக்கும்...
வீட்டிலே, நாம் பாராட்டபெரும் அல்லது பெரிய மனிதர்களுடன் கூடிய புகைப்படம் மாட்டி வைக்கிறோம்.. எதற்காக... நல்ல சுகமான நினைவுகள் நமக்கு அவ்வப்போது இருக்கவேண்டும்... நம்மை தொடர்ந்து வருபவர்களுக்கு அது ஒரு உற்சாகம் கொடுக்கவேண்டும்... அதனால் நல்ல தவம் செய்து இறைவன் வழியில் திருந்தி வருபவர்களுக்கு இறைவனே ஞான ஆசிரியனாக வந்து அறம் மற்றும் வேதங்களை அதன் பொருளை உபதேசிப்பான் என்பதை நினைவூட்டும் விதமாகவே தென்முகக் கடவுள் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டுகிறார்..
மேலும்,
ஞானத்திலே ஒன்றியவன் சிவோஹம் என்ற அந்த பேரானந்த நிலையில் ஒன்றிவிட்டால் மீண்டும் அவன் அதிலிருந்து மீளுவது இல்லை... அதனால்தான் அவர்கள் அப்படியே அமர்ந்து அந்த ஆனந்த நிலையில் லயித்து நிலைசிற்பமாக இருந்துவிட்டார்கள்...
(மீண்டும் சொல்கிறேன்... தமிழ் புலமையோ, மெய்ப்பொருள் சித்தாந்த அறிவோ இல்லாத நான் உங்கள் நட்பினால் சிந்தித்து எழுதியவையே இவை.. இதில் குறை இருந்தால் அது எனது.. நிறை என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் நட்பால்... சிறுமதி படைத்த அடியேனால் இப்படி சிந்திக்க முடிகிறது என்றால், தமிழ் மற்றும் சித்தாந்த அறிவு பெற்ற மேன்மக்கள் இன்னும் நன்கு சிந்திக்க முடியும்.

எழுதியவர் : திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்

செவ்வாய், 3 அக்டோபர், 2017

கண் நோய் போக்கும் பதிகம்

ஆன்றோர் சிந்தனை...

பண் : செந்துருத்தி

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை
கொத்தை யாக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே
.

அடிகளே, நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில், யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர் ; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழி யொன் றில்லை ; பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத்தர உடன்படாவிடின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
====
சுந்தரர் பெருமானுக்கும் நம் சிவபெருமானுக்கும் எப்போதுமே நெருங்கிய தோழமை தொடர்பு உண்டு... குறிப்பாக - காஞ்சியிலே சுந்தரருக்கு ஒரு கண்ணை அருளிய இறைவன் மற்றும் ஒரு கண்ணிலும் ஒளி அருளியது இந்த பதிகத்துக்கு பிறகே...

இங்கே, சிவில் சட்டங்களை தெளிவாக சொல்லி இருக்கிறார் பாருங்கள்... விற்றுக்கொள்வீர்... ஒற்றியல்ளேன்.. அதாவது சுந்தரர் ஆகிய தாம் பெந்தகத்துக்கு - குத்தகைக்கு - அனுபவிக்க மட்டும் உரிய அனுபவ பாத்யதை பட்ட சொத்தாக அல்ல... முற்றிலுமாக தானே சிவபெருமானிடம் விரும்பி எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் சுய நினைவுடன் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் ஆட்பட்டவன்.. எனவே சுந்தரனாகிய தன்னால் ஈசனாகிய தங்களுக்கு பயன் இல்லை என்றால், என்னை வேறு யாருக்காவது விற்றுக்கொள்ளுங்கள்... அதை விட்டு விட்டு வேணாம் என்னும் பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று இப்படி கண்ணை பறித்து - கஷ்டம் கொடுத்து சோதிக்காதீங்க... என்று புலம்புகிறார்...

என்னய்யா பெரிய தப்பு பண்ணிட்டேன்... செய்யாத குற்றத்துக்காக என் கண்ணை பறித்து... அதுவாவது பரவாயில்லை... இப்போ ஒற்றை கண்ணன் ஆக ஆக்கி அலைய விட்டுவிட்டாய்?

அது என்ன ரெண்டு கண்ணையும் பரித்துவிட்டீர்... அங்கே அங்கே கைலாசத்தில் அகக்கண் ஐ பறித்தீர்... இங்கே பூலோகத்தில் புறக்கண்ணை யும் பறித்து என்ன விளையாட்டு இது?

இங்கே, நாம் கவனிக்க வேண்டிய விஷயம்...

சுந்தரர் தன் பூர்வ ஜென்மத்தை உணர்ந்து இருந்தார்... காரணம் - இந்த வரிகளில் தானே வந்து ஆட்பட்டதாக சொல்கிறார்... திருமண மேடையில் தாலி கட்ட இருந்த நேரத்தில் ஈசன் கிழவனாக சென்று ஒரு ஓலையை காட்டி இவரை ஆட்கொண்டார்.. அதன் பின் பித்தா பிறைசூடி பதிகம் பாடிய பொழுது தன்னை உணர்த்தி பூர்வ ஜென்மத்தை நினைவு படுத்துகிறார்...

சுந்தரருக்கு இரு மனைவிகள்.. ஒருவர் பரவை நாச்சியார்.. மற்றொருவர் சங்கிலி நாச்சியார்... ஈசன் சுந்தரரிடம் பறித்தது இரண்டு கண்களை... இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது...

திருக்கைலாய மலையில் ஈசனுக்காக நந்தவனத்தில் பூக்களை பறித்து கொண்டு வரும் போது அங்கே இருந்த இரண்டு கந்தர்வ பெண்களை சுந்தரரின் கண்கள் கண்டு மையல் கொண்டு அதன் காரணமாக ஏற்பட்டதுதானே இந்த பிறப்பே...

ஈசனை தவிர வேறு நினைவே இல்லாமல் இருந்த சுந்தரர் மனதில் இரண்டு பெண்களை கண்டு காட்டிக்கொடுத்தது இந்த இரண்டு கண்கள் தானே... அதற்காகவே கண்களை பறித்தார்...

இங்கே, மீண்டும்... ஒரு கீதை வரி...

என்கண் கொண்டீர்.. நீரே பழிபட்டீர்... அன்று ஏன் கண்களுக்கு அந்த பெண்களை காட்டி என்னை ஆசை கொள்ள வைத்ததும் நீரே... காரணம் ஒரு நொடி என் மனதை விட்டு நீர் (ஈசன்) உங்கள் ஜோலியை பார்க்க போய்விட்டீர்... அதற்க்கு தண்டனையாக இந்த பிறவியை கொடுத்து... அவர்களோடு இல்லறம் நடத்திவிட்டு வா என்று உத்தரவிட்டதும் அந்த ஈசனே... பின் போன ஜென்மத்தில் செய்த தவறுக்காக விடாமல் வஞ்சம் வைத்து இந்த ஜென்மத்தில் கண்ணை பறித்ததும் ஈசனே... அதனால் இங்கே ஆட்டுவித்தவனே (இறைவனே) அந்த பழிக்கு உரியவன் ... நீ ... ஆட்டுவித்தாய்... நான் ஆடினேன்... இப்போது ... தண்டனை மட்டும் எனக்கு என்று நீரே பழிபட்டீர்....

சரி, ஒரு கண்ணை காஞ்சியிலே கொடுத்தே... இப்போ என்ன... இன்னொரு கண்ணு தரமாட்டியா? சரி அதையும் நீயே வச்சி வாழு...

கண்ணு போனாலும் நம் சுந்தரருக்கு பண் அந்த பண்ணுக்கு உள்ளே குசும்பு மட்டும் குறையவே இல்லை... இதுதான் நட்புக்கே உரிய உரிமை...

(திருவாருர் அருகே இருக்கும் என்கண் என்ற தலம்.. இங்கே இருக்கும் முருகன்... மிகவும் விசேஷமானவர்.... எட்டுக்குடி, என்கண் மற்றும் பொரவச்சேரி தரிசித்து இன்புறத்தக்க திருத்தலங்கள்)


எழுத்து :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்.

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

கர்மவினை

"அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பது உன்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்"

இருவினை ஒப்பு மலபரிபாகம் என்பது எந்த சிததாந்தத்தை எடுத்துகொண்டாலும் ஒரு பொது விதி...

மனிதனின் நல்வினை தீவினை இரண்டும் சமமாக இருந்தால் மட்டுமே பரிபாகம் அடைய முடியும்... தீவினை அதிகமாக இருந்தால் நரகம் என்னும் மீண்டும் இந்த உலக வாழ்கையில் சிக்கி சின்னா பின்னம் ஆகுதல்...

நல்வினை அதிகமாக இருப்பின் சொர்க்க போக வாழ்கை...

நாம், என்ன நினைக்கிறோம்... எல்லாம் வினைப்பயன் படியே நடக்கும்... நம்மால் முன் செய்த வினைக்கு ஈடாய் இப்போது கஷ்டங்களை அனுபவிப்பதாக எண்ணிக்கொண்டு பேதைகளாக அறிவற்றவர்களாக உலாவிக்கொண்டு இருக்கிறோம்...

எனவே நாம் உய்வினை அதாவது இந்த ஆத்மா சீர் பெற்று வாழ வழிகளை நாடாது இருப்பது நமக்கு ஊனம்..

இறைவன் நமக்கு இந்த கைகளை எதற்காக அருளினான் தெரியுமா? தானம் கொடுப்பதும் பெறுவதும் கை... ஹோமத்திலே - பூஜையிலே - உற்பத்தியிலே கையின்றி அமையாது கர்மம்.. (நீரின்றி அமையாது உலகு போல)

ஆக, சரியை கிரியை போன்ற யோகங்களை நமது கைகளால் செய்து நமது எம்பிரான் திருவடிகளை போற்றி நாம் சிவனடியவர்களாக நம்மை அடையாளப் படுத்தி கொண்டுவிட்டால் -

செய்வினை வந்து எமை தீண்டப்பெறா...

அவ்வினை... இவ்வினை... இப்போ செய்வினை...ஒரே குழப்பமா இருக்கேடா அமாவாச...

இது கீதையின் சாரம்.. கர்ம யோகம்...

கண்ணன் சொல்படி பலனை எதிர்பாராமல் அர்ஜுனன் கர்மத்தில் ஈடுபடுகிறான்... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று...

அது போல நாம் இறைவன் அடியவர்களாக நம்மை உணர்ந்து செய்யும் செயல்கள் செய்யும் வினைகள் - அது நல்வினையோ அல்லது தீவினையோ... அவை நம்மை வந்த வரு தொல் வினையாக ஒருபோதும் வருத்தாது...

அதாவது இறைவன் பொருட்டு செய்யும் வினை எதுவும் இந்த ஆத்மாவை சேராது... நல்வினை தீவினை ஒப்பி மலபரிபாகம் பெற நாம் காத்திருக்க வேண்டாம்... நம்மை ஆட்கொள்ள வேண்டியது திருநீலகண்டமே...

அதாவது இறைவன் நம்மை தன்னுள்ளே ஆகுதியாக ஏற்றுவிட்டால்... நாம் அவன் கழுத்திலே இருக்கும் ultra violet treatment plant மூலமாக சுத்தீகரிக்கப்பட்டு அவனோடு சாயுஜ்யம் அடைந்து விடுவோம்...


எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்.