ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சாரதா மாதா 5

கடந்த தொடரில் நான் சொல்லி இருந்த ஒரு விஷயத்தை இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன்!

ஒரு தலைப்பை குறித்து எழுத நினைப்பது மட்டுமே நம்மால் முடியும். தன்னலம் இல்லாமல் பொது நலம் கருதி நாம் நம் பணியை தொடங்கினால், நம்மை ஊக்குவித்து நமக்குள் நல்ல உணர்வை ஊட்டி கைபிடித்து அழைத்துச் செல்வது பெரியவர்களின் ஆசியும், ஆண்டவன் கருணையும் மட்டுமே!

சிருங்கேரி குறித்த இந்த தொடரில் கூட்லி - நின்ற கோல சாரதா தேவி குறித்து மட்டும் எழுத நினைத்து அதிக பட்சம் 4 பக்கங்கள் மட்டுமே எழுத நினைத்தேன். ஆனால் ஸ்ரீ சாரதாம்பிகையின் கருணை வேறாக... புதிய புதிய சிந்தனைகள் நமக்கு உள்ளே உதிக்க, இங்கே வரி வடிவில்...

ஹ்ருஷ்ய ச்ருங்கர் தவம் செய்த இடம் என்றும் உரோம பாத மன்னன் காலம் குறித்து சொல்லி இருந்தேன்... இப்போது சிருங்கேரி தலம் / பழமை / பெருமை குறித்த ஒரு செய்தி....

தசரத சக்கரவர்த்திக்கு பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ ராமன் ஜனன காரண அஸ்வமேத/ புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வேண்டி, இதே ஹ்ருஷ்ய ச்ருங்கர் / ரோமபாத மன்னன் / மழைவளம் விவாதிக்கப்பட்டு புரோகிதர் அழைக்கப்பட்டார்.... சிருங்கேரி ராமாயண காலத்துக்கு - திரேதா யுகத்துக்கு முந்தைய காலம் தொட்டே பெருமை பழமை உள்ள தலம்...

இங்கேயே, கலைவாணி வசிக்க நினைத்த வரலாற்று தொகுப்பே இந்த தொடர்....

ஆதி சங்கரர் ஸ்தாபித்த 4 ஸ்ரீ மடங்கள் ஜ்யோதிர், த்வாரகா, பூரி, சிருங்கேரி பின், ஆதி சங்கரர் கடைசியாக நிறுவிய சர்வ் ஞான பீடம் காஞ்சி காம கோடி பீடம்.

ஆனால் இந்த காஞ்சி மடம் அங்கீகரிக்கப்படுவதில் நிறைய பிணக்குகள், சட்ட போராட்டங்கள் இருந்தன... இப்போதும் கொஞ்சம் ஆங்காங்கே ego இருக்கவே இருக்கு!

மற்ற மடங்கள் செல்வம் ஞானம் வைராக்கியம் திடசித்தம் கொடுக்கலாம்... ஆனால் ஆதி சங்கரருக்கே ஞானம் ஏணி அதன் காரணமான மோக்ஷம் காமத்தின் (ஆசையின்) கடை கோடியில் இங்கேயே கைவர, பகவத் பாதாள் கேதாரம் சென்று ஐக்கிய நிலை பெறுகிறார்...

காபாலிகம்/ இந்த பரந்த பாரத தேசத்தின் ஒருமைப்பாடு குறித்த ஒரு செய்தியும் on the pass பதிவாக 6இல்...

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்

அன்னை சாரதா மாதா 4

கூட்லி சாரதா மாதா கதை என்று ஆரம்பித்தோம்... சில சுவையான கற்பனைகள் என்று முடித்தேன்... அதற்கும் முன்பாக சில தெரியாத உண்மை களை பதிவிட்டு விடுகிறேன்...

சௌந்தர்யலஹரி பாடல் 75 இல் குறிக்கப்பட்ட திராவிட சிசு யார்?!

பெரும்பாலும் நாம், அவரை திருஞான சம்பந்தர் என்றே அறிகிறோம்... ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கும் சங்கரர் காலம் கிபி 788... ஆனால் காஞ்சி மகா சுவாமி சங்கர பகவத் பாதாள் #கிமு_5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்று விரிவாக விளக்கி உள்ளார்....

அதாவது சம்பந்தருக்கு முன்பாக வாழ்ந்த ஒருவர் திருஞான சம்பந்தர் பற்றி பாடி இருக்க முடியுமா?!

ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்வோம்... சங்கரர் என்பது இரு நபர்களை குறிக்கும்... காலத்தால் மிகவும் பழமையானவர், சம்பந்தருக்கு முற்பட்டவர் ஆதிசங்கரர்.... கிபி 788 வாக்கில் வசித்தவர் அபிநவசங்கரர்...

சௌந்தர்யா லஹரி 75 ஸ்லோகம் திராவிட சிசு, ஞானப்பால் நடப்பு, ஆதி சங்கரர் தன்னை குறித்து எழுதிக் கொண்ட ஒரு தற்குறிப்பு ஏற்றம்... காலப்போக்கில் கிபி 788 அபி நவ சங்கரர் / ஆதி சங்கரர் ஆகியோரிடையே இருந்த பெயர் குழப்பம்/ இருண்ட கால வரலாற்று குழப்பம், ஆதி சங்கரர் - திராவிட சிசு திருஞான சம்பந்தர் (கிபி 788 க்கு முற்பட்ட) ஆகிப் போனார்...

http://sankaramathas.blogspot.in/2013/05/sankaras-father-sivaguru.html?m=1

மேல் விவரங்களை 5 இல் பேசுவோம்...

அதற்கு முன்பு, கும்பகோணத்தில் இருந்து கேரளா சென்ற சிவகுரு என்ற வைதீகர் மகன் கூட திராவிட சிசுதான்... கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கூட ப்ரம்மணர் தான்... திராவிடம் என்பது இனத்தை குறிப்பது அல்ல.... தென் திசையை குறிப்பது...

ஆர்யாம்பா மகன் ஆதி சங்கரர் #மலையாளி_அல்ல... #தமிழர்...

https://janamejayan.wordpress.com/2010/01/31/sringeri-sharada-peetham/

https://www.google.co.in/url?url=https://tamilandvedas.com/tag/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F-%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AF%2581/&rct=j&sa=U&ved=2ahUKEwiAidy0jcbaAhXBQI8KHaKLDOsQFjAAegQICRAB&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81&usg=AOvVaw2CBAevyKuPsiMjUPLr4Dqt

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்

அன்னை சாரதா மாதா 3

உபய பாரதி (சரசவாணி) ... குமாரில பட்டரை வாதத்தில் வென்ற சங்கரர், குமாரில பட்டர் கேட்டு கொண்டதற்கு இணங்கி, மகிஷ்மதி என்ற ஊருக்கு வந்து, மண்டன மிஸ்ரர் / உபய பாரதியோடு வாதம் செய்ய வருகிறார்.

அன்று, மண்டன மிஸ்ரர் வீட்டில் திவசம். மண்டன மிஸ்ரர் க்ருஹஸ்தர்... சந்யாசிகளை நோக்குவதும் இல்லை... வீட்டின் கதவு தாழிடப்பட்டு, வியாசர் ப்ரம்மணராக எழுந்தருளி இருந்த நேரம்... சங்கரர் அருகே இருந்த தென்னை மரத்திடம் வந்து சாணான் என்ற மந்திரம் ஓத, தென்னை மரம் வளைந்து கொடுக்க, சங்கரர் மரத்தின் மீது ஏறி மண்டன மிஸ்ரர் வீட்டுக்கு உள்ளே குதிக்க... அந்த நேரம், விஷ்ணு இலையில் சந்யாசிகளை அமர வைக்க சாஸ்திரத்தில் இடம் உண்டு என்று வியாசர் அறிவிக்க, சங்கரர் தத்துவ விசார பிக்ஷை கேட்க, பின் முதலில் சிரார்த்தம் முடியட்டும் என்று உணவருந்தி...

மறுநாள் போட்டி... பந்தயம்... மண்டன மிஸ்ரர் வென்றால், சங்கரர் க்ருஹஸ்தராக வேண்டும்... சங்கரர் வென்றால் மண்டன மிஸ்ரர் துறவு மேற்கொள்ள வேண்டும்...

இருவர் கழுத்திலும் மாலை அணிவிக்கப்படும்... யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவர் தோற்றவர்...

நடுவராக சரசவாணி... (உபய பாரதி) - மண்டன மிஸ்ரர் மனைவி... 21 நாட்கள் வாதம்... மண்டன மிஸ்ரர் மாலை வாடிவிட...

வாக்தேவி... இருவரும் பிக்ஷை க்கு வாருங்கள் என்று அழைத்து முடிவை அறிவித்தாள்... பிக்ஷை சந்யாசிகளுக்கு உரியது... இருவரும் பிக்ஷைக்கு வரலாம் என்றதன் மூலம் மண்டன மிஸ்ரர் மாலை வாடி தோற்று துறவு மேற்கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தி...

சரசவாணி சத்ய லோகம் செல்வதாக கூற, சங்கரர் தடுத்து, வன துர்கா மந்திரம் ஜெபித்து அம்பிகையை தான் (சங்கரர்) விரும்பும் நேரமே சத்ய லோகம் செல்ல வேண்டும் என்று நிர்பந்தித்து பின் மகாராஷ்டிர தேசம் முழுவதும் சென்று அத்வைத சிந்தாதத்தை நிலை நாட்டினார் சங்கரர்...

சங்கரருக்கு ஒரு ஆசை துளிர் விட... அம்மா, சரஸ்வதி மாதா... நீ என்னோடு என் பூர்வ தேசம் வந்து என் பூமியில் ஞான தீபம் ஏற்றி, என் அன்னைக்கு (ஆர்யாம்பாள்) தரிசனம் கொடுத்து ஆட்கொள்ள வேண்டும் என்று சரசவாணி யிடம் விண்ணப்பிக்க...

உபயபாரதி...

சங்கரா, நான் உன்னோடு வருவேன்... நீ திரும்பி பார்க்காமல் முன் செல்ல வேண்டும்... எங்கே நீ நான் வருகிறேனா என்று நின்று திரும்பி பார்க்கிறாயோ அங்கேயே நான் நின்று நிலை பெறுவேன்...

சங்கரர், அம்பிகை காலில் இருந்த சலங்கையை நம்பி ஒப்புக்கொண்டு நடக்க...

இங்கே சில ரசமான கற்பனைகள்...பதிவு 4...

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்

சிருங்கேரி ஸ்ரீ சாரதா மாதா - 2


ஹ்ருஷ்ய ச்ருங்கர் ரோம பாதர் ஆதி சங்கரர் மண்டன மிஸ்ரர் உபய பாரதி வித்யாரண்யர் (வித்யா சங்கர தீர்த்தர்) ஹரிஹரர், புக்கர், விஜயநகர சாம்ராஜ்யம், ஹொய்சாளர்...துங்கபத்ரா நதி...

நிறைய பெயர்களை முதலிலேயே சொல்லி விட்டேன்... காரணம், எழுதும் போது ஆர்வக்கோளாறு காரணமாக யாரையாவது நினைவு கூர மறந்து விட்டால்?!

துங்கன்/ பத்ரன் என்ற இரண்டு புண்யாத்மாக்கள் பெயரில் புனித நதி... இதன் கரையில் அமைந்து இருப்பதே மந்த்ராலயமும் கூட... அங்கே நதியின் ஒரு பக்கம் கர்நாடகா ஒரு பக்கம் ஆந்திரா...

நதியில் நடந்து பயணித்தால் நதியின் ஆழம், அகலம், பழமை புரியும்... பாறை படிவுகள் எல்லாம் மணல் திட்டுக்களாக இருந்து கால போக்கில் நீரின் தொடர் அழுத்தத்தால் கடினம் பெற்று இருப்பதாக நான் உணர்ந்தேன்.

ரோம பாத மன்னன் ஆட்சிக்காலத்தில் மழை இல்லாமல் போக, அப்போது அறிஞர்கள் ஆலோசனைப் படி பெண் வாடை/ ஸ்பரிசம் இல்லாமல் வாழ்ந்து வந்த ஹ்ருஷ்ய ச்ருங்கர் - ரோம பாத மன்னன் உத்திரவுப்படி சில ஆண் வேடமிட்டு பெண்களால் நைச்சியமாக கவர்ந்து அழைத்து வந்து - ஹ்ருஷ்ய சிருங்கர் பாதம் பட்டு மழை பெற்ற பூமி...

அந்த ஹ்ருஷ்ய ச்ருங்கர் தவத்தால் இந்த புண்ய பூமி சிருங்கேரி என்று அறியப்பட்டு... இங்கே பாம்பின் நிழலில் தவளை இளைப்பாற கண்டு, ஆதி சங்கரர் இங்கே ஒரு ஸ்ரீ மடம் ஸ்தாபிக்க நினைத்து 12 ஆண்டுகள் இங்கே தங்கி சீடர்களுக்கு உபதேசித்த ஸ்ரீங்கேரிக்கு சாரதா மாதாவாக வந்து அருள் பாலித்தது அன்னை சரஸ்வதி தேவியே.

ஒவ்வொரு அவதாரத்திலும் மும்மூர்த்திகள் பங்களிப்பு கட்டாயம் உண்டு... ஸ்ரீ பரமேஸ்வரன் அம்சமான சங்கரருக்கு எப்படி கோவிந்த பாதர் (விஷ்ணு) குருவாக வந்து ஆட்கொண்டாரோ, அதுபோல நான்முகக் கடவுள் ப்ரம்மா மண்டன மிஸ்ரர் என்று வந்து சீடனாக ஆட்பட்டார்.

மண்டன மிஸ்ரர் - ஆதி சங்கரர் வாதம் நடந்த சமயத்தில் மண்டன மிஸ்ரர் (ப்ரம்மா அம்சம்) அவருடைய மனைவியாகிய உபய பாரதி யை (சரஸ்வதி தேவி அம்சம்) ஒரு கடத்தில் ஆவாகனம் செய்து அதை திரைக்கு பின் நிறுத்தி கேள்வி/ வாதம் தொடர.... இதை தனது ஞான திருஷ்டியில் உணர்ந்த சங்கரர் - வாதில் வென்று... பின் உபய பாரதியை தன்னோடு அழைத்து வந்து கர்ம பூமியில் ஞான தீபம் ஏற்றி வைக்க நினைக்க... சரஸ்வதி அன்னையிடம் அவ்வண்ணமே கோரிக்கை வைக்கிறார்!



(சங்கரர்- மண்டன மிஸ்ரர் _ உபய பாரதி வாதம் மிகவும் சுவையானது... அது குறித்து வித்யாரண்ய ஸ்வாமிகள் - ஹரிஹரர் புக்கர் - , பொருள் வேண்டி - மறு ஜென்மம் - துறவு மேற்கொள்ளல்- விஜயநகர சாம்ராஜ்யம் - 14 நூற்றாண்டு இவை குறித்து வேறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் - இங்கே சிருங்கேரி மடம், சாரதா மாதா, நகர்வு குறித்து மட்டுமே பேசலாம்)

உபய பாரதி - கேரளம் நோக்கிய மலை பயணம் - சலங்கை அடுத்த பதிவில் தொடரும்....

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி முகநூலில்

அன்னை ஸ்ரீ சாரதாம்பாள்... 1

ஸ்ரீ குருவுக்கு நமஸ்காரம்...

எனது தகப்பனார் வழி பாட்டி பெயர் சாரதாம்பாள்... இன்று நான் சமூகத்தில் ஓரளவு அந்தஸ்து கவுரவம் கூடி வாழவும், இது நாள் வரை நான் எழுதியுள்ள சில ஆன்மீக/ தத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு முக்கிய காரணம்... எனது பாட்டி சாரதாம்பாள்! அந்த பாட்டியின் பெயர் சொன்னாலே நினைவுக்கு வரும் தெய்வம் சிருங்கேரி ஸ்ரீ சாரதா மாதா.

இன்று வரை தரிசிக்க வாய்ப்பு கிட்டாத சிருங்கேரி அன்னையை பற்றி எழுத மிகவும் காலம் தாழ்த்தி வந்தேன்.... சில மாதங்கள் முன்பு அன்பு நண்பர் ஸ்ரீ CA Ramesh Ramamurthy சிருங்கேரி சென்ற போது, அவரிடம் அருகே மலை மீது இருக்கும் கூட்லி சாரதா அன்னையை தரிசித்து வரும்படி சொல்லி இருந்தேன் (நான் செவி வழி கேள்விப்பட்ட தகவல்).



ஆனால், ரமேஷ் க்கு அந்த வாய்ப்பு கை கூடவில்லை... ஆனாலும் அவர் அடி மனதில் அன்று அடியேன் விதைத்து விட்ட அந்த விதை, ரமேஷிடம் ஒரு தேடுதலை உருவாக்க, இன்று திடீரென கூட்லி சாரதா மாதா படங்களை எனக்கு அனுப்பி வைத்தார்... இன்று அக்ஷய திருதியை சுபதினமாக இருப்பதால், Ramani Bairava Athreya Gothram அவர்கள் ஆணைப்படி இந்த தொடர் துவக்கப்படுகிறது....

இது ஒரு தகவல் பதிவே... ஆராய்ச்சி முடிவோ, பிரமானமோ கிடையாது. சிந்தனை பலம், சுவை இருக்கும். இந்த தொடர் சிறப்பாக அமைய ஸ்ரீ சிருங்கேரி மற்றும் என் இஷ்ட காஞ்சி குரு பரம்பரை திருவடி சிந்தித்து எழுத துவங்குகிறேன்.

நன்றி :- சங்கரன் கிருஷ்ணமூர்த்தி முகநூலில் இருந்து