ஞாயிறு, 11 மார்ச், 2018

திருக்கடையூர்

திருக்கடையூர் பிரதான ஆலயத்தின் பின்புறம் ஆதி கோவில் ஒன்று உள்ளது. திருக்கடையூர் மயானம் என்ற பெயரில் உள்ள பழமையான ஆலயம்.

இந்த கோவிலும் மிகவும் சக்தி வாய்ந்த கோவில்... ஆனால் ஏகாந்த சேவை...

இந்த கோவில் மதில் பிரகாரம் உள்ளே ஒரு பிரசித்தி பெற்ற நீர் சுனை உள்ளது. பிரதான கோவில் அமிர்த கடேஸ்வர ஸ்வாமிக்கு இந்த ஆதி கோவில் நீர் சுனை தீர்த்தம் சிறப்பு வண்டியில் எடுத்துத் செல்வார்கள்...

பிரதான கோவிலின் மூலவருக்கு சுனை நீர் அபிஷேகிக்கப்படும்.... வேறு சிலா விக்ரஹங்கள் மீது சுனை நீர் ஊற்றப்படுமானால் கற்கள் பொரிந்து வெடிப்பு விடும்...

கார்த்திகை சோம வாரங்களில் சுனை நீர் சங்கு மூலம் மூலவருக்கு அபிஷேகிக்கப்பட்டு பக்தர்கள் பருகவும் கிடைக்கும்.... தீராத நோய்களை தீர்க்கும். மற்ற நாட்களில் சுனை நீர் பிரசாதம் விநியோகிக்க மாட்டார்கள்....




பிரதான கோவிலில் சுனை நீரை சேகரித்து வர ஒரு மாட்டு வண்டி / சிறப்பு பாத்திரம் தினமும் தயாராக இருக்கும்....


- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

தவளை அண்டாத குளம்

புள் இருக் வேல் ஊர்
திருவெண்காடு
உத்திர கோச மங்கை (மேலே காகங்கள் கூட பறக்காதாம்!!!!)

திருவெண்காடு, அக்கினி குளத்து நீர் கந்தக தன்மையோடு உள்ளது... மரபியல் சோதனை முடிவுப்படி....

அதனால் கர்ப பிரச்சனைகள் நீங்குகிறதாம்....

வைத்தீஸ்வரன் கோவில் குளத்தில் குளிப்பது சகல வியாதிகளையும் போக்கும்....

மூலவர் பாணம் மருந்து கட்டு போட்டு வெள்ளி கவசத்தால் பாதுகாக்கப்பட்டு....

மூலவருக்கு நமக்கு இடையே ஒரு உலோக தடுப்பு வட்டமும் இங்கே உண்டு...

அபிஷேக நீர் குளத்தில் கலந்து விபூதி வேப்பிலை வில்வ தளம் கொண்டு குளத்து நீர் கலந்து தயாரிக்கப்படும் மருந்து உருண்டைகள்... மிகவும் விசேஷம்....

நம் ஆலயங்கள் மனிதனின் அறிவுக்கு எட்டாத ஞானப் பொக்கிஷங்கள்....

படைக்கத்தான் நமக்கு முடியாது.... பாதுகாக்கவாவது?!


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

திருப்பழையாறு வடதளி

சோழநாட்டு திருத்தலம்.

நாடெங்கும் சுற்றித் தேவாரம் பாடி வந்த அப்பர் ஸ்வாமிகள் தூரத்தில் இருந்து கோவிலை கண்டு, ஆனந்த கண்ணீர் விட்டு சாகோபுர தரிசனம் செய்து வணங்குகிறார்....



இதை பார்க்கும் சில அருகாமை சமணர்கள் அப்பர் ஸ்வாமிகளை கண்டு ஏளனமாக எள்ளி நகைத்து, உள்ளே இருக்கும் உங்கள் சிவ லிங்க கல்லை மற்ற பரிவார சிலைகளை அகற்றி விட்டு எங்கள் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து உள்ளோம் என்கிறார்கள்....

தெருநாய்க்கு நாய்க்கு தெரியுமா செக்குக்கும் சிவமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம்.... இந்துக் கோவிலை சமணக் கோவிலாக மாற்றி உள்ளார்கள்!!!

உடனே அப்பர் ஸ்வாமிகள் உண்ணா நிலை ஏற்க அரசர் கனவில் இறைவன் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் இடம் தெரிய, அரசன் சமணர்களை தண்டித்து தெய்வ மூர்த்திகள் மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்கு வருகிறது....


- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்