சத்யபாமாவுக்கு கண்ணன் மீது தனக்கு மட்டுமே அதிக பாசம் இருக்கிறது என்ற கர்வம் இருந்தது.
மாய கண்ணன், இந்த அகங்காரத்தை போக்க திரு உள்ளம் கொண்டு, ஒரு இரவு நேரத்தில், சத்யபாமா சற்று உலாவி வருவோம் வா! என்று அழைத்தான்.
இருவரும் நடந்து கொண்டு சுதாமன் வீட்டுக்கு அருகில் வந்து இருக்கும்போது கண்ணனின் வலது காலில் முள் ஒன்று தைத்து விட கண்ணன் அம்மா என்று கூவினான்.....
சத்யபாமா பதறிய படி, யாரங்கே, சீக்கிரம் வந்து பரமாத்மா காலில் தைத்த முள்ளை அகற்றி தீயிலிட்டு பொசுக்குங்கள் என்று கூச்சல் போட்டாள்......
தன் வீட்டு அருகே கண்ணன் குரல் கேட்ட சுதாமன் ஓடோடி வந்து கண்ணன் காலில் தைத்த முள்ளை அகற்றி அதை கண்களில் ஒற்றிய படி தன் வீட்டுக்குள் கொண்டு சென்று பன்னீரில் நனைத்து ஒரு சிறு தங்க பேழையில் வைத்து பூஜை மண்டபத்தில் வைத்து வணங்கி விட்டு வந்து கண்ணனை வரவேற்று உபசரிக்க வர சத்ய பாமா கடும் கோபம் கொண்டாள்.

சுதாமன், கண்ணா, ரொம்ப நன்றி. எனக்கு அனுக்கிரகம் செய்யவே இங்கே வந்து இருக்கே.
சத்யபாமா கோபம் கட்டுக்குள் அடங்காமல், சுதாமா, என்ன உளருகிறீர் என்றாள்....
கண்ணன், அமைதியாக இரு சத்யபாமா!
சுதாமா ... என் காலில் குத்தி என்னை வருத்திய முள்.... அதை நீ கொண்டு சென்று பூஜா கிருஹத்தில் வைத்து விட்டு ... என்னப்பா உன் செயல்?!
சுதாமன் சொன்னான்....
கண்ணா,
நீயே, பரம்பொருள்.
இந்த முள் குத்தும் சம்பவம் மூலம் நீ ஏதோ நாடகம் நடத்துகிறாய்.
சர்வமும் நீதான். அந்த முள்ளும் நீதான். அந்த முள் வைத்து நீ உன்னை கொண்டே உன்னை குத்திக் கொண்டு உள்ளாய்.
இது நாள் வரை அந்த முள் ஒரு காட்சி பேத வஸ்து....
இன்று அது உன் ரத்தத்தோடு சம்பந்தப்பட்டு நீயாக (பரம்பொருளாகவே) மாறிவிட்டது.
உண்மையில் சொல்லப்போனால், அந்த முள்ளை என் கண்ணுக்குள் குத்திக்கொண்டு உன்னை எனக்குள் ஒருவனாக ஆக்கிக் கொண்டு இருக்க வேண்டும்... ஆனால் என் மனதுக்குள் இருக்கும் உன்னை, வெளியில் காண முடியாமல் போய்விடும்... மேலும் கண்கள் குருடானால் உன் காயத்துக்கு யார் மருந்து போடுவார்கள்...
வீடு தேடி வந்த உன்னை உபசரிக்க வேண்டுமே!
நேற்று வரை அது ஜட வஸ்து... இன்று உன் ரத்த பந்து பிம்பம்....
சுதாமன் சொல்லிக்கொண்டே போக, சத்யபாமா தலை குனிந்து நின்றாள்....
கண்ணன் திருவருளால் அந்த பேழையில் இருந்த முள் ஒரு தங்கக் கண்ணன் உருவில் சுதாமன் பூஜை மண்டபத்தில் எழுந்தருள...
சுதாமன், ஏதேதோ விளங்கங்களை சொல்லிக்கொண்டு கண்ணனின் திருவடிகளை வருடி, ஏண்டா கண்ணா... ஒரு பாதரக்ஷை போட்டுண்டு வரமாட்டாயாடா? இப்படி அசடாட்டம் வெறும் காலோடு அதுவும் ஆத்துக்காரியை கூட்டிண்டு, இருட்டில்.... எங்கே போனான் உன் தேரோட்டி... என்று தொடர்ந்து புலம்ப....
எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்
மாய கண்ணன், இந்த அகங்காரத்தை போக்க திரு உள்ளம் கொண்டு, ஒரு இரவு நேரத்தில், சத்யபாமா சற்று உலாவி வருவோம் வா! என்று அழைத்தான்.
இருவரும் நடந்து கொண்டு சுதாமன் வீட்டுக்கு அருகில் வந்து இருக்கும்போது கண்ணனின் வலது காலில் முள் ஒன்று தைத்து விட கண்ணன் அம்மா என்று கூவினான்.....
சத்யபாமா பதறிய படி, யாரங்கே, சீக்கிரம் வந்து பரமாத்மா காலில் தைத்த முள்ளை அகற்றி தீயிலிட்டு பொசுக்குங்கள் என்று கூச்சல் போட்டாள்......
தன் வீட்டு அருகே கண்ணன் குரல் கேட்ட சுதாமன் ஓடோடி வந்து கண்ணன் காலில் தைத்த முள்ளை அகற்றி அதை கண்களில் ஒற்றிய படி தன் வீட்டுக்குள் கொண்டு சென்று பன்னீரில் நனைத்து ஒரு சிறு தங்க பேழையில் வைத்து பூஜை மண்டபத்தில் வைத்து வணங்கி விட்டு வந்து கண்ணனை வரவேற்று உபசரிக்க வர சத்ய பாமா கடும் கோபம் கொண்டாள்.
சுதாமன், கண்ணா, ரொம்ப நன்றி. எனக்கு அனுக்கிரகம் செய்யவே இங்கே வந்து இருக்கே.
சத்யபாமா கோபம் கட்டுக்குள் அடங்காமல், சுதாமா, என்ன உளருகிறீர் என்றாள்....
கண்ணன், அமைதியாக இரு சத்யபாமா!
சுதாமா ... என் காலில் குத்தி என்னை வருத்திய முள்.... அதை நீ கொண்டு சென்று பூஜா கிருஹத்தில் வைத்து விட்டு ... என்னப்பா உன் செயல்?!
சுதாமன் சொன்னான்....
கண்ணா,
நீயே, பரம்பொருள்.
இந்த முள் குத்தும் சம்பவம் மூலம் நீ ஏதோ நாடகம் நடத்துகிறாய்.
சர்வமும் நீதான். அந்த முள்ளும் நீதான். அந்த முள் வைத்து நீ உன்னை கொண்டே உன்னை குத்திக் கொண்டு உள்ளாய்.
இது நாள் வரை அந்த முள் ஒரு காட்சி பேத வஸ்து....
இன்று அது உன் ரத்தத்தோடு சம்பந்தப்பட்டு நீயாக (பரம்பொருளாகவே) மாறிவிட்டது.
உண்மையில் சொல்லப்போனால், அந்த முள்ளை என் கண்ணுக்குள் குத்திக்கொண்டு உன்னை எனக்குள் ஒருவனாக ஆக்கிக் கொண்டு இருக்க வேண்டும்... ஆனால் என் மனதுக்குள் இருக்கும் உன்னை, வெளியில் காண முடியாமல் போய்விடும்... மேலும் கண்கள் குருடானால் உன் காயத்துக்கு யார் மருந்து போடுவார்கள்...
வீடு தேடி வந்த உன்னை உபசரிக்க வேண்டுமே!
நேற்று வரை அது ஜட வஸ்து... இன்று உன் ரத்த பந்து பிம்பம்....
சுதாமன் சொல்லிக்கொண்டே போக, சத்யபாமா தலை குனிந்து நின்றாள்....
கண்ணன் திருவருளால் அந்த பேழையில் இருந்த முள் ஒரு தங்கக் கண்ணன் உருவில் சுதாமன் பூஜை மண்டபத்தில் எழுந்தருள...
சுதாமன், ஏதேதோ விளங்கங்களை சொல்லிக்கொண்டு கண்ணனின் திருவடிகளை வருடி, ஏண்டா கண்ணா... ஒரு பாதரக்ஷை போட்டுண்டு வரமாட்டாயாடா? இப்படி அசடாட்டம் வெறும் காலோடு அதுவும் ஆத்துக்காரியை கூட்டிண்டு, இருட்டில்.... எங்கே போனான் உன் தேரோட்டி... என்று தொடர்ந்து புலம்ப....
எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக