டேய், கண்ணா.... நீயோ சிறுவன்... நீ எதுக்குடா, கோபிகை களின் வஸ்திரங்களை அபகரிக்கிறாய்?!
பாலகோபா, வஸ்திர அபகரன லீலையில் நீ உடலின் நிர்வாணத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளாய்...
எனக்கு உடல் தெரியாது.... ஆத்மாவே தெரிகிறது.... ஆத்மா ப்ரஹ்மத்தின் சொரூபம்.... நிர்வாணம் தான் மோக்ஷ சாதனம் என்பதை கோபிகைகளுக்கு உணர்த்தும் கிரியை தான் வஸ்திர அபகரணம்.... இதில் உள்ள லவ்கீக பலன்.... கோகுலத்து சிறுவர்கள் எல்லோரும் என் சர்வ வியாப ரூபங்களோடு விளையாடி வெண்ணெய் திருடி மகிழ்கிறார்கள்.... இங்கே கோபியர்கள் வஸ்திரத்தின் மீது பற்று உள்ளவரை லவ்கீக வெண்ணெய் திருட்டுக்கு தடையாக என்னையும் தம்மில் ஒருவராக பாவிக்கும் சிறுவர்களை உரியடிக்கு முடியாமல் தடுப்பார்கள்....
என் நண்பர்களின் சந்தோஷத்துக்காக, கோபிகைகள் வஸ்திரங்களை அபகரித்து அவர்களை கரை ஏற விடாமல் தடுக்கிறேன்...
வஸ்திரங்களை பற்றி கவலை படாத - நிர்வாணத்தை உணர்ந்த கோபிகைகள் வெண்ணெய் திருட்டை பற்றி கவலை படுவதில்லை... அவர்களை சம்சார சாகரத்தில் இருந்து கரை ஏற்றி விடுகிறேன்....
கண்ணனின் இந்த கருத்து பாலகோபனுக்கு புரிந்ததா என்பது தெரியாது.... ஆனால் நமக்கு புரிய வேண்டும்....
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக