வெள்ளி, 22 டிசம்பர், 2017

விவாக தர்மம்

இந்து தர்மத்தில் இருந்த அதி உத்தமமான விஷயம் பால்ய விவாகம்.

தர்மத்தை அழிக்கவே வந்த ஆங்கிலேயர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி குழந்தை திருமணம் சமூகக் கொடூரம் என்று சொல்லிவிட்டு இன்று கோ எஜூகேஷன் - செக்ஸ் கல்வி பற்றி பேசி மேல் நாட்டுக் கலாசாரம் என்று புதிது புதிதாக பினாத்துதல் செய்து சிறுமிகளை பாலியல் வன்புணர்வில் இந்தியன் சீரழிக்கிறான்.

8 வயது பெண் கெளரீ
9 வயதில் ரோஹிணீ
10 வயதில் கன்யா
அதன் பின் ரஜஸ்வலை .... எட்டு முதல் 10 வயதுக்குள் விவாகம் முடிக்கப்பட வேண்டும்

கெளரீ விவாகம் ஸ்வர்க்க லோகத்தை - ரோஹிணீ விவாகம் ப்ரம்ம லோகத்தை தரவல்லது.



பால்ய விவாகம் கணவன் மனைவிக்கு பரஸ்பர அண்யோன்யத்தை தரவல்லது -

இப்போதெல்லாம் 25 -28வயது வரை பெண்கள் சம்பாதிக்கிறேன் என்று சொல்லி பணத்தோடு தனக்கென விருப்பு வெறுப்பு பிடிவாதத்தையும் சேர்த்துக் கொண்டு அடங்காத மனைவியாய் ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி வழக்காடு மன்றத்தில்.

கணவனின் 32 வது வயதுக்குள் பிள்ளைகளை பெற்றுக் கொண்டு விடுதல் கட்டாயம். அப்போது தான் மகனோ / மகளோ பெற்ற தகப்பன் தன் கடமைகளை தன் சம்பாதித்து திடகாத்திரமாய் இருக்கும் காலத்திலேயே முடித்து விட முடியும் (58 வயது ரிடையர்மெண்ட்டுக்கு முன்).

ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்யாசம் தேவை - ஆணுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது - ஆக ஆணின் இச்சை பூர்த்திக்காக பெண் இளமையைப் பேணித்தான் ஆகவேண்டும்.

பெண்ணோடு உறவு கொள்வதில் சொல்லப்படும் முக்கிய விதி - தலை முடி நரைத்த பெண்ணோடு உறவு தவிர்க்க வேண்டும். ஆணால் இன்று நாகரீக பெண்களின் முதல் நிபந்தனையே வயது வித்யாசம் அதிகபட்சம் 2 வருடங்களே.

பெண் குழந்தைகளுக்கு இரண்டு ஜாதகங்கள் உண்டு. ஒன்று ஜனன கால ஜாதகம் - இன்னும் ஒன்று ருது மங்கள ஜாதகம். ஆனால் ஆண்களுக்கு ஒரே ஜாதகம் மட்டுமே.

பெண்ணுக்கு பருவமடைவதற்க்கு முன்பே திருமணம் செய்து வைத்து பின் ருது மங்கள ஜாதகத்தின் படி தக்க நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைப்பதாலேயே - இத்தனை விசேஷமாக தர்மம் நமக்கு குறிப்பிட்டு சொல்லி கொடுத்தது.

ஆனால் .....ஹூம்...⁠⁠

எழுதியவர் :- சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

வெள்ளி, 8 டிசம்பர், 2017

கண்ணனின் வஸ்திராபகரணம்

கண்ணனின் ஸ்நேகிதன் பாலகோபன் எப்போதுமே கண்ணனிடம் மிகவும் நெருக்கம் காட்டியவன்....

டேய், கண்ணா.... நீயோ சிறுவன்... நீ எதுக்குடா, கோபிகை களின் வஸ்திரங்களை அபகரிக்கிறாய்?!

பாலகோபா, வஸ்திர அபகரன லீலையில் நீ உடலின் நிர்வாணத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளாய்...

எனக்கு உடல் தெரியாது.... ஆத்மாவே தெரிகிறது.... ஆத்மா ப்ரஹ்மத்தின் சொரூபம்.... நிர்வாணம் தான் மோக்ஷ சாதனம் என்பதை கோபிகைகளுக்கு உணர்த்தும் கிரியை தான் வஸ்திர அபகரணம்.... இதில் உள்ள லவ்கீக பலன்.... கோகுலத்து சிறுவர்கள் எல்லோரும் என் சர்வ வியாப ரூபங்களோடு விளையாடி வெண்ணெய் திருடி மகிழ்கிறார்கள்.... இங்கே கோபியர்கள் வஸ்திரத்தின் மீது பற்று உள்ளவரை லவ்கீக வெண்ணெய் திருட்டுக்கு தடையாக என்னையும் தம்மில் ஒருவராக பாவிக்கும் சிறுவர்களை உரியடிக்கு முடியாமல் தடுப்பார்கள்....

என் நண்பர்களின் சந்தோஷத்துக்காக, கோபிகைகள் வஸ்திரங்களை அபகரித்து அவர்களை கரை ஏற விடாமல் தடுக்கிறேன்...

வஸ்திரங்களை பற்றி கவலை படாத - நிர்வாணத்தை உணர்ந்த கோபிகைகள் வெண்ணெய் திருட்டை பற்றி கவலை படுவதில்லை... அவர்களை சம்சார சாகரத்தில் இருந்து கரை ஏற்றி விடுகிறேன்....

கண்ணனின் இந்த கருத்து பாலகோபனுக்கு புரிந்ததா என்பது தெரியாது.... ஆனால் நமக்கு புரிய வேண்டும்....

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

கண்ணன் காலில் தைத்த முள்

சத்யபாமாவுக்கு கண்ணன் மீது தனக்கு மட்டுமே அதிக பாசம் இருக்கிறது என்ற கர்வம் இருந்தது.

மாய கண்ணன், இந்த அகங்காரத்தை போக்க திரு உள்ளம் கொண்டு, ஒரு இரவு நேரத்தில், சத்யபாமா சற்று உலாவி வருவோம் வா! என்று அழைத்தான்.

இருவரும் நடந்து கொண்டு சுதாமன் வீட்டுக்கு அருகில் வந்து இருக்கும்போது கண்ணனின் வலது காலில் முள் ஒன்று தைத்து விட கண்ணன் அம்மா என்று கூவினான்.....

சத்யபாமா பதறிய படி, யாரங்கே, சீக்கிரம் வந்து பரமாத்மா காலில் தைத்த முள்ளை அகற்றி தீயிலிட்டு பொசுக்குங்கள் என்று கூச்சல் போட்டாள்......

தன் வீட்டு அருகே கண்ணன் குரல் கேட்ட சுதாமன் ஓடோடி வந்து கண்ணன் காலில் தைத்த முள்ளை அகற்றி அதை கண்களில் ஒற்றிய படி தன் வீட்டுக்குள் கொண்டு சென்று பன்னீரில் நனைத்து ஒரு சிறு தங்க பேழையில் வைத்து பூஜை மண்டபத்தில் வைத்து வணங்கி விட்டு வந்து கண்ணனை வரவேற்று உபசரிக்க வர சத்ய பாமா கடும் கோபம் கொண்டாள்.



சுதாமன், கண்ணா, ரொம்ப நன்றி. எனக்கு அனுக்கிரகம் செய்யவே இங்கே வந்து இருக்கே.

சத்யபாமா கோபம் கட்டுக்குள் அடங்காமல், சுதாமா, என்ன உளருகிறீர் என்றாள்....

கண்ணன், அமைதியாக இரு சத்யபாமா!

சுதாமா ... என் காலில் குத்தி என்னை வருத்திய முள்.... அதை நீ கொண்டு சென்று பூஜா கிருஹத்தில் வைத்து விட்டு ... என்னப்பா உன் செயல்?!

சுதாமன் சொன்னான்....

கண்ணா,

நீயே, பரம்பொருள்.

இந்த முள் குத்தும் சம்பவம் மூலம் நீ ஏதோ நாடகம் நடத்துகிறாய்.

சர்வமும் நீதான். அந்த முள்ளும் நீதான். அந்த முள் வைத்து நீ உன்னை கொண்டே உன்னை குத்திக் கொண்டு உள்ளாய்.

இது நாள் வரை அந்த முள் ஒரு காட்சி பேத வஸ்து....

இன்று அது உன் ரத்தத்தோடு சம்பந்தப்பட்டு நீயாக (பரம்பொருளாகவே) மாறிவிட்டது.

உண்மையில் சொல்லப்போனால், அந்த முள்ளை என் கண்ணுக்குள் குத்திக்கொண்டு உன்னை எனக்குள் ஒருவனாக ஆக்கிக் கொண்டு இருக்க வேண்டும்... ஆனால் என் மனதுக்குள் இருக்கும் உன்னை, வெளியில் காண முடியாமல் போய்விடும்... மேலும் கண்கள் குருடானால் உன் காயத்துக்கு யார் மருந்து போடுவார்கள்...

வீடு தேடி வந்த உன்னை உபசரிக்க வேண்டுமே!

நேற்று வரை அது ஜட வஸ்து... இன்று உன் ரத்த பந்து பிம்பம்....

சுதாமன் சொல்லிக்கொண்டே போக, சத்யபாமா தலை குனிந்து நின்றாள்....

கண்ணன் திருவருளால் அந்த பேழையில் இருந்த முள் ஒரு தங்கக் கண்ணன் உருவில் சுதாமன் பூஜை மண்டபத்தில் எழுந்தருள...

சுதாமன், ஏதேதோ விளங்கங்களை சொல்லிக்கொண்டு கண்ணனின் திருவடிகளை வருடி, ஏண்டா கண்ணா... ஒரு பாதரக்ஷை போட்டுண்டு வரமாட்டாயாடா? இப்படி அசடாட்டம் வெறும் காலோடு அதுவும் ஆத்துக்காரியை கூட்டிண்டு, இருட்டில்.... எங்கே போனான் உன் தேரோட்டி... என்று தொடர்ந்து புலம்ப....


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

திருப்பராய்த்துறை ஆலயம்

சிவாலயங்களில் அமைப்பு நேர்த்தி மூலவரின் நோக்கு திசையை அனுசரித்து.... தென் மேற்கு மூலையில் கணபதி துவங்கி, அநேகமாக அனைத்து கோவில்களும் ஒரே மாதிரியாகவே இருக்கும்...

மூலவரின் (கருவறை) வலது (தென்) கோஷ்டம் தக்ஷிணா மூர்த்தி...

பின் புறம் மேற்கு கோஷ்டம் லிங்கோத்பவர்,

இடது (வடக்கு) கோஷ்டம் பிரம்மா....

திருச்சி கரூர் சாலையில் திருப்பராய் துறை ஆலயத்தில் மூலவர் பின் (மேற்கு) கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் இங்கே அர்த்தநாரி



இங்கு மட்டுமல்ல, அநேகமாக திருச்சி மாவட்ட சுற்று வட்டார அனைத்து சிவ ஆலயங்களிலும், லிங்கோத்பவருக்கு பதில் ஆணாகி பெண்ணாகி நின்றான் அவன்!



குறிப்பாக, விவாக தாமதங்கள், தடைகளை நீக்க, இங்கே வந்து பலரும் பரிகார பூஜை செய்வது பிரசித்தமான ஒன்று....


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் முகநூலில்