*சிஷ்ட பரிபாலனம்*
துஷ்ட நிக்ரஹம் என்பது சமூகத்துக்கு, சூழலுக்கு கேடு விளைவிப்பவர்களை அழிப்பது...
சிஷ்ட பரிபாலனம் என்பது தர்ம நெறியோடு வாழ்பவர்களை ஊக்குவித்து நலம் சூழ வைப்பது....
இவை இரண்டையும் பகவான் ஒருவரே செய்கிறார்....
அரக்கர்களை அழித்து தேவர்களை ரக்ஷித்தல்....
அதெப்படி, ஒரே கடவுள் /பரம்பொருள் உயிர்களிடத்து பேதம் பார்க்கலாம்?!
எல்லாவற்றையும் படைத்தது இறைவன் தானே.... அவனுடைய படைப்பில் அவனே எப்படி பேதம் பார்க்கலாம்?
போலீஸ் DC இருக்கிறார்.... அவர் தன் பிள்ளையிடத்தே, மனைவியிடம் அன்பாக இருக்கிறார்... ஆனால் அவரே திருடனிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்....
அட போப்பா.... அது மனித இயல்பு/ உணர்வு என்று நீங்கள் முணுமுனுப்பது காதில் விழுகிறது...
தெய்வம் மனுஷ ரூபேனாம்.... ஒவ்வொரு உயிரிடத்தும் பரம்பொருள் நிறைந்து இருக்கிறான்.... எனவே இயல்பு ஒன்றுதான்... மனிதனின் செய்கை பேதம்.... காட்சி பேதம்.... கடவுள் மாசற்ற சோதி.... நாம் நம் வினைகள் படி...
சரி, மனித சுபாவம் வேறு வேறு குண வெளிப்பாடுகள்.... இயற்க்கை எல்லோருக்கும் பொது தானே...
சென்னை வாசிக்கு மழை கொடுமையாக... அதே மழை விவசாயிக்கு அமுதமாக....
சில இடத்தில் விவசாயிக்கு கூட மழை நாசம் உண்டு பண்ணி விடுகிறதே... இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று....
முன்பெல்லாம் மாதம் மும்மாரி மழை.... தேவைக்கு..... பத்தினிப் பெண்கள், பெய் எனப் பெய்யும் மழை... ஆனால் மனிதன் இயற்கைக்கு எதிராக அதீத ஆசையில் .... நிலத்தடி நீரை உறிஞ்சி... சுற்றுச்சூழலை எதிர்க்கத் துவங்க.... அன்னத்தை விட /பசியைவிட
தண்ணீர்/தாகம் முக்கியம்... அதனால் நிலத்தடி நீரை பெருக்க/குடிநீர் பஞ்சத்தை முதலில் போக்க - அதே கடவுள் விவசாயிகளை தண்டிக்க வேண்டியதாகி விடுகிறது...
பசி பஞ்சம் வறட்சி என்பது அவரவர் கர்ம வினை... இதை நிவாரணம், நஷ்ட ஈடு என்று அடுத்தவர் மீது சுமத்தும் போது நமக்கான தண்டனை நீடிக்கப் படுகிறது...
இதை இப்படியும் யோசிக்கலாம்.... சாலையோரம் இட்லி சுட்டு விற்கும் ஆயாவுக்கு GST இல்லை.... நிறைய சம்பாதிக்க ஆசை பட்டு மல்டி குசின் உணவு விடுதிக்கு GST உண்டு...
சிறு விவசாயிக்கு நஷ்டம் கூட சில ஆயிரங்களில்... ஆனால் புறம்போக்கு நிலங்களை வளைத்து அதிக நீர் உறிஞ்சி, அதிக ரசாயனங்களை பயன் படுத்திய பெரு விவசாயிக்கு பெரிய நஷ்டம்....
Fresh super மார்க்கெட் அருகில் கீரை விற்கும் கிழவியிடம் புதிய கீரை கட்டு ₹5.... அதே கீரை Fresh பஜாரில்... 3 நாட்கள் முன்பு வந்தது, குளிர் பெட்டியில் வைத்து கட்டு ₹30....
இது, வாடிக்கையாளரின் வரட்டு பேராசை கர்ம பலன்....
கடவுள்/இயற்க்கை விஷயத்தில் துஷ்ட நிக்ரகம் /சிஷ்ட பரிபாலனம் பார்த்து விட்டோம்.... இனி, செயற்கை யில்....
Induction stove இல் tea போட தண்ணீர் கொதிக்க வைத்து, tea தூள் அள்ளி போட்டேன்... சிறிதளவு தூள்... அடுப்பின் plate மீது, வட்டாவை சுற்றி விழுந்தது.... உடனே அந்த பகுதியில் இருந்த அந்த tea தூள் சிதறல் களை வெறும் கைகளால் சுத்தம் செய்தேன்... என் கைகளுக்கு சூடு தெரியவே இல்லை.... பாத்திர நீர் கொதிக்கிறது... வடிவேல் காமெடி ஒன்று நினைவுக்கு வருகிறது... மின் கம்பத்தில் தொங்கும் தன் காதலியின் உள்ளாடையை எடுக்க மின் கம்பத்தில் ஏற.... நண்பர் ஒருவர் எச்சரிப்பார்.... வடிவேலு சொல்லும் பதில்.... போடா.... இவனே.... இம்புத்தூண்டு குருவி மின் கம்பியில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடிட்டு போகுது.... எனக்கு தெரியாதா என்று....
மனிதன் நம்பும் வரை பிரச்சனை இல்லை... அதே hot plate stove மீது தன் கையில் இருக்கும் tester ஐ வைத்து ஆராயும் போது....
குனோ பேதம் எல்லா தரப்புக்கும் பொது... மனிதன் படைத்த induction stove பேதம் பார்க்கும்போது, கடவுள்?!
எழுதியவர்:- திரு sankaran Krishna Murthy (எவர்கிங் ஏகாம்பரம்) அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்
அருமை சாலியரே... கூர்நாதரின் பொழிவு...
பதிலளிநீக்கு