கோகுலத்தில் ஒரு நாள் வாசல் நிலைப்படியில் கண்ணன் உட்கார்ந்து இருந்தான்...
நரசிம்மன் இருக்கை அது... ஆகவே கோபமாகத்தான் இருந்தான்.... ஆனால் யசோதைக்கு என்ன தெரியும்?!
கிருஷ்ணா சாப்பிட வாடா...
கண்ணா, பாடுத்தாதேடி என் செல்லம் சாப்பிட வாடி....
உனக்கு பிடிக்கும் என்று அவல், வெல்லம், வெண்ணெய்.... எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்.... வாடா....
எதற்குமே பதில் இல்லை...
கண்ணன், உம் .... என்று கோபமாகவே... இருக்க....
யசோதை எழுந்து வந்தாள்... செல்லக் கண்ணா... ஏண்டா கோபம் உனக்கு....
கன்னத்தில் கை வைத்த யசோதை யிடம் இருந்து முகத்தை திருபிக் கொண்டான் ஸ்ரீ கிருஷ்ணன்...

என்னடா கோபம் உனக்கு?
நீ, என் காதை பிடித்து நேற்று திருகினே... எனக்கு இன்னமும் அது வலிக்கிறது....
அதனால் உன் மேலே கோபம் .... கண்ணன் பவள வாய் திறந்து மழலை பிரவாகமாக....
யசோதா சொன்னாள்....
அட அசடு....
ஆதி மூலமே என்று எங்கிருந்தோ யானை கூப்பிட்டால் உன் காதில் விழுகிறது...
தொழுவத்தில் கட்டி இருக்கும் மாடு கத்தினால் உன் காதில் விழறது....
கோபிகைகள் அவரவர் வீட்டில் பால் கறக்கும் சப்தம், தயிர் கடைந்து வெண்ணெய் திரட்டும் சப்தம் உன் காதில் விழுகிறது...
க்ருத யுகத்தில் நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதன் சுட்டிக் காட்டி சொன்ன தூண் அடையாளம் துவாபர யுகத்தில் உன் காதில் கேட்கிறது....
ஆனால், நான் சாப்பிட வா என்று கூப்பிட்டால், வெண்ணெய் திருட போகாதே என்று சொல்வது மட்டும் உன் காதில் விழுவதே இல்லையே.... அதனால் உன் காதில் இருக்கும் குண்டலத்தில் ஏதோ குறை இருக்கிறதா அல்லது காதுக்கு உள்ளே அழுக்கு ஏதாவது இருக்கா என்று திருகி உள்ளே கூர்ந்து பார்த்த போது நீ திமிறி ஓடிவிட பார்த்தாய்.... அதனால் கொஞ்சம் கெட்டியாக அழுத்தி பிடிச்சுட்டேன்டா குழந்தாய் என்று யசோதை சொல்ல...

கண்ணன் வெண்ணெய் கிண்ணத்தை யசோதை கையில் எடுத்துக் கொடுத்து ஊட்டி விடு அம்மா என்றான் குழந்தையாக....
எவர்கிங் கற்பனை
எழுதியவர் :- திரு எவர்கிங் ஏகாம்பரம் (சங்கரன் கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் தமது முகநூல் பக்கத்தில்
நரசிம்மன் இருக்கை அது... ஆகவே கோபமாகத்தான் இருந்தான்.... ஆனால் யசோதைக்கு என்ன தெரியும்?!
கிருஷ்ணா சாப்பிட வாடா...
கண்ணா, பாடுத்தாதேடி என் செல்லம் சாப்பிட வாடி....
உனக்கு பிடிக்கும் என்று அவல், வெல்லம், வெண்ணெய்.... எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்.... வாடா....
எதற்குமே பதில் இல்லை...
கண்ணன், உம் .... என்று கோபமாகவே... இருக்க....
யசோதை எழுந்து வந்தாள்... செல்லக் கண்ணா... ஏண்டா கோபம் உனக்கு....
கன்னத்தில் கை வைத்த யசோதை யிடம் இருந்து முகத்தை திருபிக் கொண்டான் ஸ்ரீ கிருஷ்ணன்...
என்னடா கோபம் உனக்கு?
நீ, என் காதை பிடித்து நேற்று திருகினே... எனக்கு இன்னமும் அது வலிக்கிறது....
அதனால் உன் மேலே கோபம் .... கண்ணன் பவள வாய் திறந்து மழலை பிரவாகமாக....
யசோதா சொன்னாள்....
அட அசடு....
ஆதி மூலமே என்று எங்கிருந்தோ யானை கூப்பிட்டால் உன் காதில் விழுகிறது...
தொழுவத்தில் கட்டி இருக்கும் மாடு கத்தினால் உன் காதில் விழறது....
கோபிகைகள் அவரவர் வீட்டில் பால் கறக்கும் சப்தம், தயிர் கடைந்து வெண்ணெய் திரட்டும் சப்தம் உன் காதில் விழுகிறது...
க்ருத யுகத்தில் நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதன் சுட்டிக் காட்டி சொன்ன தூண் அடையாளம் துவாபர யுகத்தில் உன் காதில் கேட்கிறது....
ஆனால், நான் சாப்பிட வா என்று கூப்பிட்டால், வெண்ணெய் திருட போகாதே என்று சொல்வது மட்டும் உன் காதில் விழுவதே இல்லையே.... அதனால் உன் காதில் இருக்கும் குண்டலத்தில் ஏதோ குறை இருக்கிறதா அல்லது காதுக்கு உள்ளே அழுக்கு ஏதாவது இருக்கா என்று திருகி உள்ளே கூர்ந்து பார்த்த போது நீ திமிறி ஓடிவிட பார்த்தாய்.... அதனால் கொஞ்சம் கெட்டியாக அழுத்தி பிடிச்சுட்டேன்டா குழந்தாய் என்று யசோதை சொல்ல...
கண்ணன் வெண்ணெய் கிண்ணத்தை யசோதை கையில் எடுத்துக் கொடுத்து ஊட்டி விடு அம்மா என்றான் குழந்தையாக....
எவர்கிங் கற்பனை
எழுதியவர் :- திரு எவர்கிங் ஏகாம்பரம் (சங்கரன் கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் தமது முகநூல் பக்கத்தில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக