வெள்ளி, 29 செப்டம்பர், 2017

சீர்காழி - திருஞானசம்பந்தர்

வைணவர்கள் வழக்கு ஒன்று உண்டு... எங்கு சுற்றியும் ரங்கனை வந்தடை.. அதுபோல நாமும் எங்கே சுற்றினாலும் - சைவத்தில் சம்பந்தர் பெருமானை வந்து அடைகின்றோம்.

இன்று நாம் எடுத்து சுவைக்க வேண்டிய வரி -

ஏடுடைய மலரான் முனைனாட்பணிந்து எத்த அருள் செய்த -

========
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
=========

சீர்காழியின் பெயர் பிரம்மா புறம்.. இங்கும் பரமன் பூஜித்ததாக வரலாறு. மஹா பிரளயகாலத்தில் ஈசன் தனது பரிவாரங்களுடன் ஒரு தோணி யில் ஏறி இங்கே வந்து அமர்ந்தாரம்... அதனால்தான் இறைவன் பெயர் இங்கே தோணியப்பர்.

ஆக, பிரம்மன் பூஜிக்க இங்கே சிவன் பிரத்யக்ஷமாக அமர்ந்து இருந்தார்.. பிரம்மன் பூஜித்து படைக்கும் தொழிலை கைவரப் பெற்றார்.

இதைத்தான் சொல்கிறாரா சம்பந்தர் பெருமான்...??

ஒன்று...

ஏடுடைய மலரான்... அதாவது ஏடுகள் பல உடைய மலர் தாமரை... அதன் மீது அமர்ந்து இருப்பவர் பிரம்மா. அந்த பிரம்மன் முந்தய நாட்களில் ஈசனை பணிந்து ஏற்ற அதனால் மனம் குளிர்ந்து ஈசன் பிரம்மனுக்கு அருள் செய்த பெருமான் இவர்..

இரண்டு...

பிரம்மன் வேதங்களின் அடிப்படையில் படைப்பு தொழிலை செய்கிறார்.. ஆக, அவர் கையில் எப்போதும் வேத புத்தகம் இருக்கிறது... ஏடுகளை உடைய (வேத புத்தகங்களை கையில் எப்போதும் வைத்து இருக்கின்ற) மலரிலே அமர்ந்து இருக்கும் பிரம்மன் முன்னை நாட்களில் பணிந்து ஏற்ற அருள் செய்த பெருமான் இவர்..

மூன்று...

ஏடுகளில் (வேத புத்தகங்களில்) உள்ள தோத்திர மலர்களால் உன்னை நான் பணிந்து ஏற்ற அருள் செய்கின்ற பெருமான் இவர்...

நான்கு...

நிறைய இதழ்கள் உடைய அடுக்கடுக்கான மலர்களால் எனது பூர்வ ஜென்மத்தில் உன்னை நான் பணிந்து ஏற்ற அதன் காரணமாக எனக்கு இந்த பிறவி கொடுத்த பெருமைக்கு உரிய பிரம்மபுரத்திலே அமர்ந்து இருக்கும் பெருமான் இவர்...

தமிழ் வழிக் கல்வி, புலமை, சித்தாந்த அறிவு எதுவுமே இல்லாத ஒரு பாமரனால் இத்தனை சிந்தனைகளை வெளிப்படுத்த முடிந்த போது - தமிழிலே புலமை பெற்ற - சைவ சித்தாந்த ஞானம் பெற்ற பெருமக்களால் இன்னும் எத்தனை எத்தனை பொருள் காண முடியுமோ நம்மை ஆளும் தகுதி உடைய பிள்ளையின் வரிகளில்...


எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் - தன் முகநூல் பக்கத்தில்

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஹிந்தோளம், பூபாளம், காப்பி

இசை என்பது கடல்...நீந்தி கரை சேர முடியாமல் நாமும் அதிலே கரைந்து விடுவோம்...

காலையில் வீடுகளில் ஒலிக்க வேண்டிய ராகம் அதாவது நமக்கு positive energy கொடுக்க...

நம்மை சுற்றி alpha rays ஏற்படுத்திக்கொள்ள நாம் கேட்க வேண்டிய ராகம் பூபாளம்.

காப்பி/ஹிந்தோளம் போன்ற ராகங்களையும் கேட்கலாம். அதில் ஹிந்தோளம் குறித்து ஏற்கனவே பார்த்தோம்....

இந்த இசை பயணத்தில் இப்போது மீண்டும் ஒரு குறிப்பு...

ஸ ரி க ம ப த நி ஸ என்கிற 7 ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்?!

இதில், பூபாள ராகத்தில் ம நி என்ற இரண்டு ஸ்தாதிகள் கிடையாது....

புத்துணர்வை கொடுக்கும் ராகம்...

வித்யாசம் தெரிய வேண்டி இங்கே பூபாளம்/ ஹிந்தோளம் என்ற இரண்டு ராகங்களிலும் அமைக்கப்பட்ட பாடல் கொடுத்துள்ளேன்...

ஹிந்தோள ராகம்

https://m.youtube.com/watch?v=WpWqxNu3IoY

https://m.youtube.com/watch?v=0jaGqNkaQYk


பூபாள ராகம்

https://m.youtube.com/watch?v=0QOWiAuliAA

https://m.youtube.com/watch?v=RX7AxOPGtOM


காப்பி ராகம்

https://m.youtube.com/watch?v=PXQTGgXfago


https://m.youtube.com/watch?v=iil9OTjHEyE


எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்

வசந்தா ராகம் / லலிதா ராகம்

வணக்கம் நண்பர்களே. மீண்டும் சொல்கிறேன். இசையில் கொஞ்சம் கூட ஞானம் இல்லாதவன் நான்.

இரவில் அமைதியான உறக்கம் தேடி net இல் சில இசை பதிவுகளை தேடிய போது ராகங்கள்/ பலன்கள் பற்றி பார்த்தேன்.... இன்னும் கொஞ்சம் விவரமாக உள்ளே சென்று தேட ஆரம்பித்தேன்....



High BP யை குறைத்து விடலாம், ஆனால் low BP / hypotension (abnormally low pressure) இருந்தால் அதை குணப்படுத்துவது மிகவும் கடினம். ராக ஆராய்ச்சியில் அதை குணமாக்க வழி இருக்கிறதா என்று தேடு என நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டார்....

அதற்காக இங்கே இன்னும் ஒரு படி முன்னேறி புதிய முயற்சியாக....

வசந்தா ராகம்....
வசந்தா ராகம்.... / லலிதா ராகம் இரண்டும் ஒன்று தானாம்.... மாறுபட்ட மேள கர்த்தா, ஷட்ஜ்ஜமம் என்று ஏதேதோ சொல்கிறார்கள்.... அதை புரிந்து விளக்க எனக்கு போதுமான ஞானம் இல்லை... எனவே screen shot அப்படியே இணைத்து உள்ளேன்.





Abnormal low pressure பிரச்சனையை குணமாக வசந்தா ராகத்தில் அமைந்த ஒரே பாடலை

ஆண் (KJY) பெண் (எம் எஸ்)குரலில் மூச்சு வாத்திய (நாதஸ்வரம்) இஞ்சிக்குடி brothers தந்தி வாத்தியம் (கம்பி வாத்திய மண்டோலின்) ஸ்ரீனிவாஸ் என்று 4 ஒலி பதிவு மற்றும் பாட்டுப் பாடவா என்ற திரைப்பட (அதிக பிரபலம் இல்லாத படம்/ நடிகர்கள்) பாடல் இளையராஜா / உமா ரமணன் பாடல்கள் இங்கே பதிவிட்டு உள்ளேன்....

https://m.youtube.com/watch?v=ya91zq84xcg

மீண்டும் சொல்கிறேன்... இசை ஆர்வலர்கள் தயவுசெய்து இதை ம் வையுங்கள்.... அல்லது ஆர்வமுள்ளவர்களிடம் forward செய்து உதவுங்கள்....

இந்த இசைவழி ஆரோக்கியம் நாளை நம்மில் பலருக்கும் நிச்சயமாக பயன்படும்.

நன்றி / வணக்கம்.

எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்.

சனி, 16 செப்டம்பர், 2017

கல்யாணி ராகம்




திருமண வீடுகளில் இசைக்கப்படும் ராகம்....

இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை / மனதை சோகத்தில் / எதிர்மறை

இருந்து திசை திருப்பி மகிழ்ச்சியில் ஆழ்த்தி உயரும் ரத்த அழுத்தத்தை குறைக்கூடிய ராகம்....

கல்யாணி





https://m.youtube.com/watch?v=IBVrGAiqRGo

எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்

அமிர்தவர்ஷிணி

வர்ஷம் என்றால் மழை....

அமிர்தம் என்றால் உயிர் தரும்/ நிலைக்கும் மருந்து....

அமிர்த வர்ஷம் என்பது மண்ணின் உயிர் காக்கும் மழை என்று வைத்துக்கொள்வோம்...

உண்ணாவிரதம் இருப்போர் கூட நீர் அருந்தலாம்...

தண்ணீருக்கு தீட்டு இல்லை என்று சொல்வார்கள்....

தண்ணீர் தான் உடலின் பிரதான இயக்க அடிப்படை.

ரத்தம் / சிறுநீரகம் உயிரின் அத்தியாவசியம்....

அமிர்த வர்ஷினி ராகம்....



சிறுநீரக சீர் இயக்கம்/ நல்ல மழை பொழிய....

https://m.youtube.com/watch?v=46dpMsOjSHI

எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்

மோகனம்

மோகம் என்றாலே ஆசை காதல் என்றுதானே அர்த்தம்...

இந்த ராகம் நமக்கு ஏற்படும் தலைவலி, மைக்ரான் எனப்படும் மண்டையிடியை போக்கவல்லது....



இது வரை சுலபமான ஏற்புக்காக சினிமா பாடல்களோடு உலாவி வந்தேன்....

மெட்டுக்குப் பாட்டு என்று திரை உலகம் வழி தவறிவிட்டது....

இது தமிழனின் பெருமை மிகு ராகமாம்....

ஐரோப்பிய நாடுகளில் கூட மோகன ராக சாயல் பிரதிபலிக்கிறதாம்...

எல்லோரையும் உருக வைக்கும் திருவாசகம் மோகன ராகத்தில் இசைக்கப்பட்டு மின்னுகிறது....

தமிழ் தாய் வாழ்த்து கூட மோகனம்தான்....


எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்

ஹிந்தோளம்

வணக்கம்...

Hing... பெருங்காயம்.... தெலுங்கில் ஹிங்குவா என்றும் சொல்லுவார்கள்.... காயம் 'க' கொஞ்சம் அழுத்தி படியுங்கள்....

காயமே இது பொய்யடா வெறும் காற்று அடைத்த பையடா....

இந்த உடல்தான் காயம்.... இதில் அடைக்கப்பட்டு உள்ளது காற்று....

இந்த உடல் உள்ளே இருக்கும் காற்றால் அவதிப்படுவது வாயுக்கோளாறு.... இந்த வாயுக்கோளாறு சரி செய்ய hing அதாவது பெருங்காயம் நல்ல மருந்து....

இந்த ஹிங் hing வை தாளத்தோடு கலந்தால் *ஹிந்தோளம்*



ஹிந்தோளம் ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்கள் வாயு மற்றும் வயிறு கோளாறுகளை போக்குமாம்....



ஹிந்தோளம் ராகத்தை சுத்ததன்யாசி ராகத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்...

புரித்தாலுக்காக....

உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் ஒலிக்கும்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - சுத்த தன்யாசி

உன்னால் முடியும் தம்பி தம்பி - ஹிந்தோளம்...

பின் குறிப்பு....

1. நான் சங்கீதம் முறையாக

அல்ல.... எளிமையான புரித்தாலுக்கான விளக்கம் காண முயல்கிறேன்.... அவ்வளவே.... interpretation தவறுகள் இருக்கலாம்....

2. இதர பிரபல பாடல் கள் குறிப்புகள் இணைப்பு....


ஹம்ஸத்வணி ராகம்

அன்னப்பறவை களின் ஒலி.... இசை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இந்த ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்களோடு துவங்குகிறது....

விநாயகர் குறித்த பல பாடல்கள் இந்த ராகத்தில் .... எளிமையான புரிதலுக்கு.... வாதாபி கணபதிம் ....

இந்த ராகம் நரம்பு சம்பந்த கோளாறுகளை நிவர்த்தி செய்யும்...

விநாயகரின் சிறப்பே தும்பிக்கை.... நரம்பு கூட்டமே....



இணைப்பு screen ஷாட் நிறைய தகவல் தரும்...

https://m.youtube.com/watch?v=Izrf9-JDntE

எழுதியவர் :- திரு. Sankaran Krishna murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்

இசைப் பயணம் 1

இசைஆய்வாளர் திரு.நா.மம்மது (*மம்முது இஸ்லாமியர்*) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.

“மருத நிலத்திற்குரிய சிறுபண் சுத்ததன்யாசி, இது ஆம்பல் குழல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆம்பல் குழல் என்ற வார்த்தையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்
“ஆம்பலம் தீங்குழல் கேளாமோ தோழி” என்று கூறுகிறார்.
ஆம்பல் குழல் என்பது இன்று சுத்த தன்யாசி ராகமாக இருக்கிறது.”

சிலப்பதிகாரம் ஆச்சியர் குரவையில் வரும் பாடல் இது.

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!

"பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!" – ஆச்சியர் குரவை.

அதாவது,

பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்து ..... என்ற வரலாறு டுமீல் சிலப்பதிகாரத்தில் வருவது....இதை சொன்னவர்... ஒரு இஸ்லாமியர்....

அநேகமாக, கருநாய்நிதி, வீரமணி, சீமான் எல்லோரும் இப்போ தூக்கு மாட்டி தொங்கிடுவாங்க....

பின் குறிப்பு....

தர்மதுரை படத்தில் ஒலிக்கும் பாடல்,

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே....

சுத்த தன்யாசி ராகம்.............

https://m.youtube.com/watch?v=FQGC7uB6MJM

எழுத்து :- திரு .Sankaran Krishna Murthy அவர்கள்