சில ஆண்டுகளுக்கு முன் ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையின் சாராம்சம். என் நினைவிலிருந்து எழுதுகிறேன்.
**************************************
#தெய்வீகத்தால்_உயிர்_பெற்ற_தேசியம்
1950 க்குப் பிறகு "எங்கு பார்த்தாலும் நாத்திக விஷம் பரவி வருகிறதே...ஹிந்து நம்பிக்கைகளைக் கொச்சை படுத்துகிறார்களே.. பிள்ளையார் சிலைகளை உடைக்கிறார்களே... கோயில் வெளியே நின்று பெண்களை அவமானப்படுத்துகிறார்களே"
என்று காஞ்சிப் பெரியவரிடம் கேட்கப் பட்டது.
அதற்கு அவர் சொன்னார் " இது ஒரு பெரும் புயல். சில ஆண்டுகளுக்கு இது வீசும். எதிர்த்து நின்றால் மரங்களுக்கு என்ன கதியாகுமோ அது தான் ஆகும். இந்த விஷத்துக்கு மாற்று எதிர்ப்பு அல்ல. தெய்வீகமே" என்றார்.
அதற்கு முதலில் கேள்வி கேட்டவர் மீண்டும் "பக்தர்கள் கோவிலுக்கு போகவே பயப்படுகிறார்களே..
இதற்கு என்ன செய்ய வேண்டும் ?"
அதற்கு பெரியவர் "மார்கழி தோறும் திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்பட வேண்டும் . இது பள்ளிகளில் போட்டியாக நடத்தப் பட வேண்டும். இதற்கு ஒரு கமிட்டி ஊர் தோறும் அமைக்கப் பட வேண்டும். இப்படிச் செய்தால் மக்களுக்கு பயம் நீங்கும்".
இப்படித்தான் நாஸ்தீகத்தால் பீடிக்கப்பட்ட தமிழகத்தில் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடுகள் நடத்தப்பட்டன. மக்கள் கூட்டு வழிபாடு, குத்துவிளக்கு பூஜை போன்றவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை நம்முடைய தேசியம், தெய்வீகம் சார்ந்த தேசியமாகவே இருந்திருக்கிறது.
1967 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் கோடிக்கணக்கான மக்கள் வணங்கும் ஸ்ரீ ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம். 1970 ஆம் ஆண்டு ஹிந்துக் கடவுள்களை அவமானப் படுத்தி படங்கள், ஊர்வலம் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1977 வரை இந்த நிலைதான்.
ஹிந்து விரோத அரசியலுக்கு எல்லாக் கட்சிகளும் உடந்தை. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது என்று பார்த்து ஓட்டுப் போடும் நிலை.
ஆனால் இன்று.....
பிள்ளையார் சிலைகளை உடைப்பதோ, செருப்பு மாலை அணிவிப்பதோ நடக்காது. அப்படி யாரவது செய்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும். நாத்திக புயல் வீசிய தமிழகத்தில் இன்று தெய்வீகப் புயல் வீசுகிறது. இதற்கு காரணம் தலைவர்கள் இல்லை. சாதாரணமானவர்கள் தான்.
தேச விரோதிகள் விநாயகர் சிலைகளை உடைத்தால், மக்கள் நடைபாதை விநாயகர் கோவில்களைக் கட்டினார்கள். கோவில் வழிபாட்டை ஏளனம் செய்தால், மக்கள் பெருங்கூட்டமாக கோவில் செல்ல ஆரம்பித்தார்கள்.
கருப்புச் சட்டை போட்டு நாத்திகம் பேசினால், மக்கள் கருப்பு சட்டை போட்டு சபரிமலை யாத்திரை போனார்கள்.
இப்படி கட்டுரையை முடிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக