வியாழன், 29 டிசம்பர், 2016

கோத்திரம் மாறி திருமணம்

நமது முன்னோர்கள் சொல்லிவிட்டு போன வழகங்களை மதிப்போம் _

*#இல்லையேல்!* வழக்கொழிந்து, வம்சம் அழிந்து போவோம்.

ஒரே குலம் / கோத்திரம் வழி வழியாக தொடர்கிறது என்பது முற்றிலும் அழிந்து விட்டது.

மஹா பாரதத்தில் இருந்து கூட சில உதாரணங்கள்... சந்தணுவின் அதிகார பூர்வ மகன் பீஷ்மர் பிரம்மச்சாரி.

சந்தணுவுக்கும் மீனவபெண்ணான சத்யவதிக்கு மகன்கள் பிறக்க - அவர்களுக்கு வாரிசு இல்லை... பின் வியாசர் மூலம் வம்ச விருத்தி...

கௌரவர்கள் முற்றிலும் அழிய... பாண்டவர்களுக்கும் _ திரௌபதி க்கும் பிறக்கும் அதிகார பூர்வ மகன்கள் ஐவரும் அஸ்வத்தாமரால் கொல்லப்படுகின்றனர்.

ஜாதிக் கலப்பு வாரிசுகளான அபிமன்யு / கடோத்தகஜன் கூட போரில் மடிய....

பலராமருக்கு வத்சலா எனும் பெண், அவள் கணவன் அபிமன்யு மனைவி - பரிக்ஷித் என்ற வம்சம் தொடர்ந்தும் ஜாதிக் கலப்பு வாரிசால் - ஒரே வம்சத்தில் அல்ல. சந்தனு குலம் மாற்று சாதி வியாசரால் விருத்தி அடைந்தது போல!

கிருஷ்ணரின் யாதவ வம்சம் ரிஷியின் சாபத்தால் உலக்கையால் அடித்துக்கொண்டு வம்சமே அழிந்தது.

சரி, புராணங்களை விட்டு விட்டு நிஜ வாழ்வுக்கு வருவோம்.

உங்கள் உறவினர்கள் / நண்பர்கள் பட்டியலில் ஒரே குடும்பத்தில் 5 அல்லது 7 ஆம் தலைமுறைக்கு மேல் இருக்குமா? மிக மிக மிக கடினம். லட்சத்தில் ஒன்று இருக்கலாம்.

வம்சம் என்பது ஆண் பெண் திருமண உறவு ஒரே ஜாதியில் வேறு வேறு கோத்திரத்தில் பெண் எடுத்து /கொடுத்து அவர்களுக்கு பிறக்கும் ஆண் வாரிசால் தொடர்வதே...

உதாரணமாக,

பிராம்மண ஜாதியில் வடமா பிரிவில் பரத்வாஜ மற்றும் ஆங்கிரச கோத்திர ஆண் பெண் சம்பந்தத்தில் ஜனிக்கும் ஆண் குழந்தைக்கு இதே போல வழி வழியாக தொடரும்...

வம்ச விருத்தி என்பது குறைந்த பட்சம் 4 வர்ணங்களுக்குள் மட்டுமாவது கோத்திர பிரிவு மாறாமல் தொடர வேண்டும்.

வர்ணாசிரம தர்மம் என்ற பெயரில் ஜாதிகள் நான்காக மட்டுமே வரையறை செய்யப்பட்டு இருந்தது ... இன்று வர்ணாசிரம தர்ம எதிர்ப்பை மக்களுக்கு ஊட்டி எண்ணற்ற ஜாதிகளை உருவாக்கி விட்டோம்.

கத்தோலிக்க கிரித்தவன் பெந்த்கோஸ்து கிரித்தவன் வீட்டில் திருமண உறவு வைக்க மாட்டான் என்பது ஜாதி வெறி அல்ல.

ஷியா முஸ்லீம் சன்னி முஸ்லீம் வீட்டில் உறவு வைக்காதது ஜாதி வெறி அல்ல. ஆனால் பிராம்மணன் க்ஷத்ரிய வீட்டில் சம்பந்தம் செய்யாமல் தவிர்ப்பது ஜாதி வெறி.

4 வர்ணங்களை A B C D என்று வைத்துக்கொள்வோம். A B C D பிரிவினர் அவரவர் வர்ணத்துக்குள் திருமண உறவு வைத்துக் கொண்டால் சரி.

AB உறவில் E என்ற ஜாதியும், AC உறவில் F என்ற ஜாதியும், AD உறவில் G என்ற ஜாதியும், AE உறவில் H என்ற ஜாதியும் FH உறவில் I ஜாதியும் உருவாகுமா இல்லையா?

இதில் கூட நமது ஆட்கள் நுழைத்த வில்லத்தனம் தகப்பனின் ஜாதியே வாரிசுக்கு என்று! இந்த வில்லங்க விதியை ஹிந்து மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புரிதலுக்காக ஒரே ஒரு உதாரணம் பார்ப்போம்.

கத்தோலிக்க (cc) ஆணுக்கும் பெந்தகோஸ்த் (pc) பெண்ணுக்கும் பிறக்கும் ஆண் /பெண் வாரிசுக்கு _ cc மணமகள் / சில நேரம் மணமகன் (பண பலம் கருதி) கிடைக்கலாம்!

ஆனால்,
Pc ஆண் cc பெண் வாரிசுக்கு cc சம்பந்தம் கிடைப்பது (பண பலத்தால் கூட) குதிரை கொம்பே!

சரி, நாம் துவங்கிய பிரச்சனை யை விட்டு விட்டு ஜாதி மத சண்டைக்கு உள்ளே சென்று விட்டோம்.

வம்ச விருத்தி - தலைமுறை- வாரிசு.

ஹிந்து தர்மத்தில் ஒரே கோத்திரத்தில் பெண் எடுக்கக் கூடாது என்ற விதி உண்டு _ காரணம் மூல ரிஷி ஒருவர் எனவே அந்த கோத்திர வழி வந்தவர்கள் சகோதர பிரேமை உடையவர்கள்.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே - தத்து / சுவீகாரம் எடுப்பதில் கூட ஹிந்து தர்மத்தில் விதிகள் உண்டு.

மூத்த வாரிசை தத்து கொடுக்க / எடுக்க மாட்டார்கள். காரணம், அவனே கர்த்தா (குல தாதா)

தத்து என்பது ஒரே கோத்திரத்தில் மட்டுமே எடுக்க வேண்டும்.

எங்கெல்லாம் கோத்திரம் மாறி தத்து எடுக்கிறார்களோ அங்கே வம்ச விருத்திக்கு வாய்ப்பு குறையும். நூல் அறுந்துவிடும்.

இடுப்பில் கட்ட ஒரு 4 முழு தறி வேஷ்டி வாங்குகிறோம். தறியின் இடையில் பாவு நூல் அறுந்து விட்டால், நெசவு புதிய நூலோடு தொடர்கிறது. பாவு நூல் இணைக்கப்பட்ட இடம் கொஞ்சம் வித்தியாசமாக தெரியும். இதை seconds என்று குறைந்த விலைக்கு விற்பதும் நமது வாணிப வழக்கம்தான்!

4 அல்லது 6 மாதம் கட்டப்போகும் வேஷ்டிக்கே இந்த பாவு நூல் தொடர் அவசியம் என்றால் ஆண்டு ஆண்டுகளாக தொடரும் வம்சாவழிக்கு?!!

கோத்திரம் மாறி த்தது எடுக்கும்போது குல தேவதை / ஆசாரம் மாறிவிடும் - எதிர்கால திருமண உறவுகள் ஒரே கோத்திரத்தில் அமைய அண்ணன் / தங்கை திருமண உறவு ஏற்பட்டுவிடலாம்.

உதாரணமாக,

கௌசிக கோத்திரத்தில் உள்ள ஒருவருக்கு கௌண்டின்ய கோத்திரத்தில் பிறந்த பிள்ளையை தத்து கொடுத்த பின் கௌண்டின்ய கோத்திர சுவீகார மகன் தந்தை மரபுப்படி கௌசிக கோத்திரத்தை ஏற்பதும் எதிர்கால திருமண உறவுகளில் இந்த வம்சம் கௌசிக கோத்திரத்தில் திருமண உறவு கொள்வதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

வம்ச விருத்தி என்பது ஜீன் சம்பந்தபட்ட விஞ்ஞானம். ஆக குல விருத்தி தடைபடும்.

இதன் பின்னே அறிவியல் பூர்வமான தத்துவ/ உண்மைகளுக்கு உள்ளே செல்ல ஆசைதான்... ஆனால் அதற்கு நிறைய அறிவு அவகாசம் தேவை - எனவே தொடருவோம் பயணம் விடை தேடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக