ஞாயிறு, 27 மார்ச், 2016

ஸ்ரீ ஆண்டாள்

சூடிகொடுத்து அரங்கனையே ஆட்கொண்ட சுடர்கொடி ஆண்டாள்
-------------------------------------------------------------
              ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றவுடன் உங்கள் நினைவில் வருவது ஸ்ரீ ஆண்டாள்.மற்றும் அவரது தேரோட்டம்.
                ஆண்டாள் சிறுவயது முதலே அரங்கனையே தன் மனதில் கணவனாகப் பாவித்து வந்தார்.பெரியாழ்வார் தொடுத்து வைத்த மலர் மாலையை ,தான் அணிந்து அழகு பார்த்துவிட்டு மீண்டும் வைத்துவிடுவார்.
                 ஒருநாள் பெரியாழ்வார் இதைக் கண்டு மனம் பதைத்தார். இதென்ன அபச்சாரம் என்று ,வேறு மாலை தொடுத்துக் கொண்டு போய் வடபத்திர சயனருக்கு சாத்தி விட்டு வந்தார்.
                 அன்றிரவு கனவில் வந்த பெருமாள் ,ஆண்டாள் சூடிக் களைந்த மாலையே தமக்கு உவப்பானது என்றார்.
                    பின் அதன்படி மறு தினம் முதல் நடந்தது.அரங்கத்து அமுதனைத் தவிர வேறு எவரையும் மணமுடிக்க விரும்பவில்லை என்று ஸ்ரீ ஆண்டாள் பிடிவாதமாக நின்றார்.பெரியாழ்வாரின் கனவில் வந்த திருவரங்கன்,ஆண்டாளைத் ஏற்றுக் கொள்வதாகவும், அரங்கத்துக்கு அழைத்து வரும்படியும் கட்டளையிட்டார்.
                 அதன்படி, திருவரங்கம் அழைத்துச் சென்று ஆண்டாளை அரங்கன் கையில் ஒப்படைத்தார்.
                      திருப்பாவை பாடி,பூமாலை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் அவதார நாளே ஆடிபூரம் ஆகும்.அந்நாளில் பெரிய திருத்தேரில் ஆண்டாள் ரெங்கமன்னாருடன்,வலம் வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.
               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக