வியாழன், 29 டிசம்பர், 2016

கோத்திரம் மாறி திருமணம்

நமது முன்னோர்கள் சொல்லிவிட்டு போன வழகங்களை மதிப்போம் _

*#இல்லையேல்!* வழக்கொழிந்து, வம்சம் அழிந்து போவோம்.

ஒரே குலம் / கோத்திரம் வழி வழியாக தொடர்கிறது என்பது முற்றிலும் அழிந்து விட்டது.

மஹா பாரதத்தில் இருந்து கூட சில உதாரணங்கள்... சந்தணுவின் அதிகார பூர்வ மகன் பீஷ்மர் பிரம்மச்சாரி.

சந்தணுவுக்கும் மீனவபெண்ணான சத்யவதிக்கு மகன்கள் பிறக்க - அவர்களுக்கு வாரிசு இல்லை... பின் வியாசர் மூலம் வம்ச விருத்தி...

கௌரவர்கள் முற்றிலும் அழிய... பாண்டவர்களுக்கும் _ திரௌபதி க்கும் பிறக்கும் அதிகார பூர்வ மகன்கள் ஐவரும் அஸ்வத்தாமரால் கொல்லப்படுகின்றனர்.

ஜாதிக் கலப்பு வாரிசுகளான அபிமன்யு / கடோத்தகஜன் கூட போரில் மடிய....

பலராமருக்கு வத்சலா எனும் பெண், அவள் கணவன் அபிமன்யு மனைவி - பரிக்ஷித் என்ற வம்சம் தொடர்ந்தும் ஜாதிக் கலப்பு வாரிசால் - ஒரே வம்சத்தில் அல்ல. சந்தனு குலம் மாற்று சாதி வியாசரால் விருத்தி அடைந்தது போல!

கிருஷ்ணரின் யாதவ வம்சம் ரிஷியின் சாபத்தால் உலக்கையால் அடித்துக்கொண்டு வம்சமே அழிந்தது.

சரி, புராணங்களை விட்டு விட்டு நிஜ வாழ்வுக்கு வருவோம்.

உங்கள் உறவினர்கள் / நண்பர்கள் பட்டியலில் ஒரே குடும்பத்தில் 5 அல்லது 7 ஆம் தலைமுறைக்கு மேல் இருக்குமா? மிக மிக மிக கடினம். லட்சத்தில் ஒன்று இருக்கலாம்.

வம்சம் என்பது ஆண் பெண் திருமண உறவு ஒரே ஜாதியில் வேறு வேறு கோத்திரத்தில் பெண் எடுத்து /கொடுத்து அவர்களுக்கு பிறக்கும் ஆண் வாரிசால் தொடர்வதே...

உதாரணமாக,

பிராம்மண ஜாதியில் வடமா பிரிவில் பரத்வாஜ மற்றும் ஆங்கிரச கோத்திர ஆண் பெண் சம்பந்தத்தில் ஜனிக்கும் ஆண் குழந்தைக்கு இதே போல வழி வழியாக தொடரும்...

வம்ச விருத்தி என்பது குறைந்த பட்சம் 4 வர்ணங்களுக்குள் மட்டுமாவது கோத்திர பிரிவு மாறாமல் தொடர வேண்டும்.

வர்ணாசிரம தர்மம் என்ற பெயரில் ஜாதிகள் நான்காக மட்டுமே வரையறை செய்யப்பட்டு இருந்தது ... இன்று வர்ணாசிரம தர்ம எதிர்ப்பை மக்களுக்கு ஊட்டி எண்ணற்ற ஜாதிகளை உருவாக்கி விட்டோம்.

கத்தோலிக்க கிரித்தவன் பெந்த்கோஸ்து கிரித்தவன் வீட்டில் திருமண உறவு வைக்க மாட்டான் என்பது ஜாதி வெறி அல்ல.

ஷியா முஸ்லீம் சன்னி முஸ்லீம் வீட்டில் உறவு வைக்காதது ஜாதி வெறி அல்ல. ஆனால் பிராம்மணன் க்ஷத்ரிய வீட்டில் சம்பந்தம் செய்யாமல் தவிர்ப்பது ஜாதி வெறி.

4 வர்ணங்களை A B C D என்று வைத்துக்கொள்வோம். A B C D பிரிவினர் அவரவர் வர்ணத்துக்குள் திருமண உறவு வைத்துக் கொண்டால் சரி.

AB உறவில் E என்ற ஜாதியும், AC உறவில் F என்ற ஜாதியும், AD உறவில் G என்ற ஜாதியும், AE உறவில் H என்ற ஜாதியும் FH உறவில் I ஜாதியும் உருவாகுமா இல்லையா?

இதில் கூட நமது ஆட்கள் நுழைத்த வில்லத்தனம் தகப்பனின் ஜாதியே வாரிசுக்கு என்று! இந்த வில்லங்க விதியை ஹிந்து மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புரிதலுக்காக ஒரே ஒரு உதாரணம் பார்ப்போம்.

கத்தோலிக்க (cc) ஆணுக்கும் பெந்தகோஸ்த் (pc) பெண்ணுக்கும் பிறக்கும் ஆண் /பெண் வாரிசுக்கு _ cc மணமகள் / சில நேரம் மணமகன் (பண பலம் கருதி) கிடைக்கலாம்!

ஆனால்,
Pc ஆண் cc பெண் வாரிசுக்கு cc சம்பந்தம் கிடைப்பது (பண பலத்தால் கூட) குதிரை கொம்பே!

சரி, நாம் துவங்கிய பிரச்சனை யை விட்டு விட்டு ஜாதி மத சண்டைக்கு உள்ளே சென்று விட்டோம்.

வம்ச விருத்தி - தலைமுறை- வாரிசு.

ஹிந்து தர்மத்தில் ஒரே கோத்திரத்தில் பெண் எடுக்கக் கூடாது என்ற விதி உண்டு _ காரணம் மூல ரிஷி ஒருவர் எனவே அந்த கோத்திர வழி வந்தவர்கள் சகோதர பிரேமை உடையவர்கள்.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே - தத்து / சுவீகாரம் எடுப்பதில் கூட ஹிந்து தர்மத்தில் விதிகள் உண்டு.

மூத்த வாரிசை தத்து கொடுக்க / எடுக்க மாட்டார்கள். காரணம், அவனே கர்த்தா (குல தாதா)

தத்து என்பது ஒரே கோத்திரத்தில் மட்டுமே எடுக்க வேண்டும்.

எங்கெல்லாம் கோத்திரம் மாறி தத்து எடுக்கிறார்களோ அங்கே வம்ச விருத்திக்கு வாய்ப்பு குறையும். நூல் அறுந்துவிடும்.

இடுப்பில் கட்ட ஒரு 4 முழு தறி வேஷ்டி வாங்குகிறோம். தறியின் இடையில் பாவு நூல் அறுந்து விட்டால், நெசவு புதிய நூலோடு தொடர்கிறது. பாவு நூல் இணைக்கப்பட்ட இடம் கொஞ்சம் வித்தியாசமாக தெரியும். இதை seconds என்று குறைந்த விலைக்கு விற்பதும் நமது வாணிப வழக்கம்தான்!

4 அல்லது 6 மாதம் கட்டப்போகும் வேஷ்டிக்கே இந்த பாவு நூல் தொடர் அவசியம் என்றால் ஆண்டு ஆண்டுகளாக தொடரும் வம்சாவழிக்கு?!!

கோத்திரம் மாறி த்தது எடுக்கும்போது குல தேவதை / ஆசாரம் மாறிவிடும் - எதிர்கால திருமண உறவுகள் ஒரே கோத்திரத்தில் அமைய அண்ணன் / தங்கை திருமண உறவு ஏற்பட்டுவிடலாம்.

உதாரணமாக,

கௌசிக கோத்திரத்தில் உள்ள ஒருவருக்கு கௌண்டின்ய கோத்திரத்தில் பிறந்த பிள்ளையை தத்து கொடுத்த பின் கௌண்டின்ய கோத்திர சுவீகார மகன் தந்தை மரபுப்படி கௌசிக கோத்திரத்தை ஏற்பதும் எதிர்கால திருமண உறவுகளில் இந்த வம்சம் கௌசிக கோத்திரத்தில் திருமண உறவு கொள்வதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

வம்ச விருத்தி என்பது ஜீன் சம்பந்தபட்ட விஞ்ஞானம். ஆக குல விருத்தி தடைபடும்.

இதன் பின்னே அறிவியல் பூர்வமான தத்துவ/ உண்மைகளுக்கு உள்ளே செல்ல ஆசைதான்... ஆனால் அதற்கு நிறைய அறிவு அவகாசம் தேவை - எனவே தொடருவோம் பயணம் விடை தேடி.

ஞாயிறு, 5 ஜூன், 2016

தெய்வீகத்தால் உயிர்பெற்ற தேசியம்

சில ஆண்டுகளுக்கு முன் ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையின் சாராம்சம். என் நினைவிலிருந்து எழுதுகிறேன்.
**************************************

#தெய்வீகத்தால்_உயிர்_பெற்ற_தேசியம்

             1950 க்குப் பிறகு "எங்கு பார்த்தாலும் நாத்திக விஷம் பரவி வருகிறதே...ஹிந்து நம்பிக்கைகளைக் கொச்சை படுத்துகிறார்களே.. பிள்ளையார் சிலைகளை உடைக்கிறார்களே... கோயில் வெளியே நின்று பெண்களை அவமானப்படுத்துகிறார்களே"
என்று காஞ்சிப் பெரியவரிடம் கேட்கப் பட்டது.
           அதற்கு அவர் சொன்னார் " இது ஒரு பெரும் புயல். சில ஆண்டுகளுக்கு இது வீசும். எதிர்த்து நின்றால் மரங்களுக்கு என்ன கதியாகுமோ அது தான் ஆகும். இந்த விஷத்துக்கு மாற்று எதிர்ப்பு அல்ல. தெய்வீகமே" என்றார்.
                அதற்கு முதலில் கேள்வி கேட்டவர் மீண்டும் "பக்தர்கள் கோவிலுக்கு போகவே பயப்படுகிறார்களே..
இதற்கு என்ன செய்ய வேண்டும் ?"
                 அதற்கு பெரியவர் "மார்கழி தோறும் திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்பட வேண்டும் .  இது பள்ளிகளில் போட்டியாக நடத்தப் பட வேண்டும்.  இதற்கு ஒரு கமிட்டி ஊர் தோறும் அமைக்கப் பட வேண்டும். இப்படிச் செய்தால் மக்களுக்கு பயம் நீங்கும்".

              இப்படித்தான் நாஸ்தீகத்தால் பீடிக்கப்பட்ட தமிழகத்தில் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடுகள் நடத்தப்பட்டன. மக்கள் கூட்டு வழிபாடு, குத்துவிளக்கு பூஜை போன்றவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

               தமிழகத்தைப் பொறுத்தவரை நம்முடைய தேசியம், தெய்வீகம் சார்ந்த தேசியமாகவே இருந்திருக்கிறது.
  
             1967 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் கோடிக்கணக்கான மக்கள் வணங்கும் ஸ்ரீ ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம். 1970 ஆம் ஆண்டு ஹிந்துக் கடவுள்களை அவமானப் படுத்தி படங்கள், ஊர்வலம் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1977 வரை இந்த நிலைதான்.
ஹிந்து விரோத அரசியலுக்கு எல்லாக் கட்சிகளும் உடந்தை. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது என்று பார்த்து ஓட்டுப் போடும் நிலை.

            ஆனால் இன்று.....
பிள்ளையார் சிலைகளை உடைப்பதோ, செருப்பு மாலை அணிவிப்பதோ நடக்காது. அப்படி யாரவது செய்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும். நாத்திக புயல் வீசிய தமிழகத்தில் இன்று   தெய்வீகப் புயல் வீசுகிறது. இதற்கு காரணம் தலைவர்கள் இல்லை. சாதாரணமானவர்கள் தான்.

                தேச விரோதிகள் விநாயகர் சிலைகளை உடைத்தால், மக்கள் நடைபாதை விநாயகர் கோவில்களைக் கட்டினார்கள். கோவில் வழிபாட்டை ஏளனம் செய்தால், மக்கள் பெருங்கூட்டமாக கோவில் செல்ல ஆரம்பித்தார்கள்.

               கருப்புச் சட்டை போட்டு நாத்திகம் பேசினால், மக்கள் கருப்பு சட்டை போட்டு சபரிமலை யாத்திரை போனார்கள்.
           இப்படி கட்டுரையை முடிக்கிறார்.

ஞாயிறு, 27 மார்ச், 2016

ஸ்ரீ ஆண்டாள்

சூடிகொடுத்து அரங்கனையே ஆட்கொண்ட சுடர்கொடி ஆண்டாள்
-------------------------------------------------------------
              ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றவுடன் உங்கள் நினைவில் வருவது ஸ்ரீ ஆண்டாள்.மற்றும் அவரது தேரோட்டம்.
                ஆண்டாள் சிறுவயது முதலே அரங்கனையே தன் மனதில் கணவனாகப் பாவித்து வந்தார்.பெரியாழ்வார் தொடுத்து வைத்த மலர் மாலையை ,தான் அணிந்து அழகு பார்த்துவிட்டு மீண்டும் வைத்துவிடுவார்.
                 ஒருநாள் பெரியாழ்வார் இதைக் கண்டு மனம் பதைத்தார். இதென்ன அபச்சாரம் என்று ,வேறு மாலை தொடுத்துக் கொண்டு போய் வடபத்திர சயனருக்கு சாத்தி விட்டு வந்தார்.
                 அன்றிரவு கனவில் வந்த பெருமாள் ,ஆண்டாள் சூடிக் களைந்த மாலையே தமக்கு உவப்பானது என்றார்.
                    பின் அதன்படி மறு தினம் முதல் நடந்தது.அரங்கத்து அமுதனைத் தவிர வேறு எவரையும் மணமுடிக்க விரும்பவில்லை என்று ஸ்ரீ ஆண்டாள் பிடிவாதமாக நின்றார்.பெரியாழ்வாரின் கனவில் வந்த திருவரங்கன்,ஆண்டாளைத் ஏற்றுக் கொள்வதாகவும், அரங்கத்துக்கு அழைத்து வரும்படியும் கட்டளையிட்டார்.
                 அதன்படி, திருவரங்கம் அழைத்துச் சென்று ஆண்டாளை அரங்கன் கையில் ஒப்படைத்தார்.
                      திருப்பாவை பாடி,பூமாலை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் அவதார நாளே ஆடிபூரம் ஆகும்.அந்நாளில் பெரிய திருத்தேரில் ஆண்டாள் ரெங்கமன்னாருடன்,வலம் வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.
               

புதன், 23 மார்ச், 2016

ஸ்ரீ கிருஷ்ணர்

வெண்ணெய் மட்டுமா திருடினான் அவன்?
______________________________________

                ஒருமுறை நாரதர் இந்திரனைக் காண இந்திரலோகம் சென்றிருந்தார். அங்கு இந்திராதி தேவர்கள் யாரையும் காணாதது கண்டு திகைத்தார்.எல்லோரும் எங்கே போய் விட்டார்கள்.? அங்கிருக்கும் வாயில் காப்பாளனை கேட்டார்.
                வாயிற்காப்பாளர் சொன்னார் "எல்லோரும் கோகுலம் சென்றுள்ளனர்" நாரத முனிவர் கோகுலமா '?அது பூலோகத்தில் அல்லவா உள்ளது. அங்கு ஏன் போனார்கள் என்று சிந்தித்தபடியே பூலோகம் வந்தார்.
                    அங்கு அவர் கண்ட காட்சி....பரந்தாமன்,மாயக்கண்ணன் ஏதும் அறியாதவனாக,தன்னை சுலபனாக்கிக் கொண்டு குழந்தையாக யசோதாவின் கால்களைக் கட்டிக்கொண்டு குப்புறப் படுத்திருக்கும் காட்சியைக் கண்டார்.யசோதா கண்ணனை நீராட்டிக் கொண்டிருந்தாள்.இதைக் காணவே இந்திராதி தேவர்களும் கோகுலத்தில் தவம் கிடந்தனர்.
                  " ஆஹா என்ன தவம் ...என்ன தவம் செய்தனை நீ யசோதா...உலகமே எவருடைய திருவடியைத் தேடிப் போகிறதோ ,அந்த மதுசூதனன் உன் காலை கட்டிக் கொண்டு கிடக்கிறானே.."என்று நெக்குருகிப் போனார்.
                கிருஷ்ணாவதரத்தில் கண்ணன் செய்த லீலைகள் ஒன்றா இரண்டா...அவன் செய்தது ஒவ்வொரு லீலையுமே அர்த்தமுள்ளதே.
                 ஆயர்கள் கொடுத்துவைத்தவர்கள்.கோபப்படுத்தினாலும்,இவன் லீலைகளை ரசிக்கவே செய்தனர்.குறும்பு செய்தாலும்,பொய்க் கோபப்பட்டுவிட்டு பின் மோகிக்கவே செய்தார்கள்.
          அவருடைய லீலைகளை சொல்ல,சிந்திக்க இந்த ஆயுள் போதாது
               ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் !!!