புதன், 17 நவம்பர், 2021

தெய்வங்கள்



நமது வாழ்க்கையில் நம்மோடு சம்பந்தப்பட்ட, அல்லது சம்பந்தப்பட போகின்ற தெய்வங்கள் நான்கு வகைப்படும்.  அவை குலதெய்வம், குடும்ப தெய்வம்,  இஷ்டதெய்வம்,  மற்றும் உபாசனை தெய்வம்...

குலதெய்வம்:-  நம்முடைய முன்னோர்கள் வழி வழியாக வணங்கி வந்த தெய்வம்,  தன்னுடைய பங்காளிமார்களுக்கும் தாயாதிமார்களுக்கும் மொத்தமான ஒரு தெய்வம்.


குடும்பதெய்வம்:-  

இது ஒரு குடும்பத்துக்கான தெய்வம் மட்டுமே . அந்த குடும்பத்தில் முன்பு வாழ்ந்து மறைந்த ஒருவராக பெரும்பாலும் இருக்கக்கூடும். ஏதாவது முக்கிய திருவிழாக்களின் போதும் , குடும்ப விசேஷங்களின்போதும் புது துணி வைத்து வணங்குவார்கள்

இஷ்டதெய்வம்:-  

இவை பின்னாளில் நாம் தேர்ந்தெடுத்து,  நமக்கு பிடித்து வணங்குகின்ற  தெய்வம்.

உபாசனை தெய்வம் :-  உபாசனை தெய்வமானது நமக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக, எங்கு சென்றாலும் எதை செய்தாலும்,  நமக்கு வெற்றியைத் தேடித் தருகின்ற சக்தியாகவும்,  நம்முடைய வாழ்வின் எல்லா சம்பவங்களிலும் உடனிருக்கும் துணையாகவும் இருக்கும்.

இந்த உபாசனை தெய்வம் அனைவருக்கும் ஒன்றாக இருக்காது.  ஒவ்வொருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகளைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.  இதை ஜாதகத்தின் மூலமாக அறிவதில் கூட சில நேரங்களில் தவறுகள் வந்துவிடக் கூடும்.  ஆனால்  பிரசன்னம் மூலமாக தேர்ந்தெடுக்கும்போது,100% நமக்கு பொருத்தமான உபாசனை தெய்வத்தை தேர்ந்தெடுத்து நாம் வணங்கி உபாசனை செய்து வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை  பெற முடியும்.

(நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்காக எழுதுகிறேன் அவ்வப்போது இதுபோல எழுதுமாறு கேட்கிறார்கள். எழுதலாமா??)



Saliya maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக